திங்கள், 9 செப்டம்பர், 2019

பேசும் சிலை 7 8 8

வானிலாடும்        நிலவைக்       கேட்டேன்    ---அங்கு
வட்டமிடும்     பறவையைக்      கேட்டேன்
தேனிலாடும்     மலரைக்     கேட்டேன்    ---என்
தேவி எங்கு       போனாள்     என்றே

கண்கள்      தேடியும்      காணவில்லை   ---அவள்
கனிமொழியை    நானும்     கேட்கவில்லை
 பெண்களில்    தெய்வம்     அவளல்லவா   ---அந்த
பேசும்        சிலை       எங்கே     போனாள்

ஊர்        அடங்கியும்      நானும்     உறங்கவில்லை   ---என்
உள்மனதில்      பொங்குது      எரிமலை
பேர்     சொல்ல      இங்கு     பிள்ளையில்லை  ---இதுவே
பெரும்      சுமையாய்        ஆகும்      தொல்லை

கன்னியால்         நான்       வளர்ந்தேன்   ---அவளது
கருத்தினால்       செல்வம்       சேர்த்தேன்
எண்ணி       இன்பம்       சேரும்போது  ---எனோ
எங்கேயோ       சென்று      விட்டாள்

தேடித்      தேடியே    தினம்     அலைகிறேனே   ----நான்
தெய்வங்களைத்      தொழுது      கேட்கிறேன்
நாடியவளே       என்னிடம்      வருவாளென்பேன் ----எனக்கும்
நல்ல வாழ்வு     இனிமேல்      கிடைக்கு     மென்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக