கண்கள் மூடிப் படுத்தேன் ---ஒரு
கள்வன் வந்தானே நிலவில்
பெண்கள் மீதில் அவனுக்கென்ன பாசம் ---அது
பின்னாளில் தெரிந்தது படுமோசம்
எண்ணாமல் இடமும் கொடுத்தேன் ---என்னோடு
இணைந்திட சம்மதம் அளித்தேன்
கண்மணி என்றவன் சொன்னான் ---முடிவில்
கண்ணீரில் என்கதை முடித்தான்
சுவைத்தானே பலமுறை தோழி ---அந்த
சொர்க்கத்தில் எத்தனையோ நாழி
அமைத்தானே அன்பெனும் கோட்டை ---ஆனால்
அவன் ஆடியது என்னுடலில் வேட்டை
உறவினில் ஏற்றம் கண்டேன் ---அவன்
உறவாலே புது உயிர் கொண்டேன்
மறவாமல் வருவேன் என்றான் ---நானும்
மகிழ்வோடு அனுப்பி வைத்தேன்
வருவானென எண்ணிக் களைத்தேன் ---தினம்
வளர்கின்ற சிசுவாலே இளைத்தேன்
மறுவாழ்வு வருமாவென மலைத்தேன் --அந்த
மாதவன் அருளாலே உயிர் பிழைத்தேன்
ஆணாகப் பிறந்தவர்கள் அழட்டும் ---என்
அலறல் அவர்கள் காதுகளில் விழட்டும்
வீணாக பெண்களிடம் என்ன விளையாட்டு ---இந்த
வினைகள் தீர்ந்திட இறைவா நீ நல்வழி காட்டு
கள்வன் வந்தானே நிலவில்
பெண்கள் மீதில் அவனுக்கென்ன பாசம் ---அது
பின்னாளில் தெரிந்தது படுமோசம்
எண்ணாமல் இடமும் கொடுத்தேன் ---என்னோடு
இணைந்திட சம்மதம் அளித்தேன்
கண்மணி என்றவன் சொன்னான் ---முடிவில்
கண்ணீரில் என்கதை முடித்தான்
சுவைத்தானே பலமுறை தோழி ---அந்த
சொர்க்கத்தில் எத்தனையோ நாழி
அமைத்தானே அன்பெனும் கோட்டை ---ஆனால்
அவன் ஆடியது என்னுடலில் வேட்டை
உறவினில் ஏற்றம் கண்டேன் ---அவன்
உறவாலே புது உயிர் கொண்டேன்
மறவாமல் வருவேன் என்றான் ---நானும்
மகிழ்வோடு அனுப்பி வைத்தேன்
வருவானென எண்ணிக் களைத்தேன் ---தினம்
வளர்கின்ற சிசுவாலே இளைத்தேன்
மறுவாழ்வு வருமாவென மலைத்தேன் --அந்த
மாதவன் அருளாலே உயிர் பிழைத்தேன்
ஆணாகப் பிறந்தவர்கள் அழட்டும் ---என்
அலறல் அவர்கள் காதுகளில் விழட்டும்
வீணாக பெண்களிடம் என்ன விளையாட்டு ---இந்த
வினைகள் தீர்ந்திட இறைவா நீ நல்வழி காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக