புதன், 11 செப்டம்பர், 2019

வேட்டை 7 8 9

கண்கள்        மூடிப்       படுத்தேன்   ---ஒரு
கள்வன்       வந்தானே     நிலவில்
பெண்கள்    மீதில்    அவனுக்கென்ன    பாசம்   ---அது
பின்னாளில்     தெரிந்தது     படுமோசம்
எண்ணாமல்   இடமும்     கொடுத்தேன்   ---என்னோடு
இணைந்திட    சம்மதம்     அளித்தேன்
கண்மணி     என்றவன்     சொன்னான்   ---முடிவில்
கண்ணீரில்    என்கதை     முடித்தான்
சுவைத்தானே     பலமுறை     தோழி  ---அந்த
சொர்க்கத்தில்    எத்தனையோ     நாழி
அமைத்தானே    அன்பெனும்     கோட்டை  ---ஆனால்
அவன்   ஆடியது    என்னுடலில்    வேட்டை
உறவினில்      ஏற்றம்     கண்டேன்  ---அவன்
உறவாலே     புது உயிர்    கொண்டேன்
மறவாமல்     வருவேன்     என்றான்   ---நானும்
மகிழ்வோடு     அனுப்பி    வைத்தேன்
வருவானென    எண்ணிக்     களைத்தேன்   ---தினம்
வளர்கின்ற      சிசுவாலே     இளைத்தேன்
மறுவாழ்வு     வருமாவென    மலைத்தேன்   --அந்த
மாதவன்       அருளாலே    உயிர்    பிழைத்தேன்
ஆணாகப்       பிறந்தவர்கள்      அழட்டும்    ---என்
அலறல்      அவர்கள்      காதுகளில்     விழட்டும்
வீணாக     பெண்களிடம்    என்ன      விளையாட்டு   ---இந்த
வினைகள்    தீர்ந்திட     இறைவா  நீ     நல்வழி    காட்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக