ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

அடிமை 7 8 6

கற்றாழைக்       காட்டிலே       நின்றவளே   ---என்னை
கண்ணாலே       வலைவீசி      வென்றவளே
நற்றாமரை     மலரோ     நறுந்தேனோ   ---உன்னை
நம்பி      வந்ததற்கு      பலன்    இதுதானோ

அம்பாலே       என்னை      அடித்தாய்   ---இந்த
அடிமையின்     கதையினை   முடித்தாய்
அன்பாலே      காதல்      சொன்னேன்   ---என்னை
அடித்துத்      துரத்தி       விட்டாய்

வாலிப        வயது      அல்லவா   ---உன்னோடு
வாழத்        துடிப்பது     நானல்லவா
கேலிகள்     செய்து     வெறுத்தாய்   ----இந்த
கிளி  வேண்டி      நானும்    பொறுத்தேன்

வாசலில்       வந்து        நிற்பேன்   ---உள்ளதை
வாரியே       உனக்குத்     தந்திடுவேன்
பாசத்தில்      அன்றோ    புலம்புகிறேன்   ---எந்தன்
பத்தினியே   உன்னையின்னும்    நம்புகிறேன்

காதல்      மொழி பேசிக்     கட்டி யணைத்து  விடு   ---உனது
கனியிதழாலே      காயத்திற்கு     மருந்து யிடு
சோதனை      போதும்    சுந்தரியே    வந்துவிடு   ---எனக்கு
சொர்கத்தைக்     காட்டி     சுகமாக    வாழவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக