கற்றாழைக் காட்டிலே நின்றவளே ---என்னை
கண்ணாலே வலைவீசி வென்றவளே
நற்றாமரை மலரோ நறுந்தேனோ ---உன்னை
நம்பி வந்ததற்கு பலன் இதுதானோ
அம்பாலே என்னை அடித்தாய் ---இந்த
அடிமையின் கதையினை முடித்தாய்
அன்பாலே காதல் சொன்னேன் ---என்னை
அடித்துத் துரத்தி விட்டாய்
வாலிப வயது அல்லவா ---உன்னோடு
வாழத் துடிப்பது நானல்லவா
கேலிகள் செய்து வெறுத்தாய் ----இந்த
கிளி வேண்டி நானும் பொறுத்தேன்
வாசலில் வந்து நிற்பேன் ---உள்ளதை
வாரியே உனக்குத் தந்திடுவேன்
பாசத்தில் அன்றோ புலம்புகிறேன் ---எந்தன்
பத்தினியே உன்னையின்னும் நம்புகிறேன்
காதல் மொழி பேசிக் கட்டி யணைத்து விடு ---உனது
கனியிதழாலே காயத்திற்கு மருந்து யிடு
சோதனை போதும் சுந்தரியே வந்துவிடு ---எனக்கு
சொர்கத்தைக் காட்டி சுகமாக வாழவிடு
கண்ணாலே வலைவீசி வென்றவளே
நற்றாமரை மலரோ நறுந்தேனோ ---உன்னை
நம்பி வந்ததற்கு பலன் இதுதானோ
அம்பாலே என்னை அடித்தாய் ---இந்த
அடிமையின் கதையினை முடித்தாய்
அன்பாலே காதல் சொன்னேன் ---என்னை
அடித்துத் துரத்தி விட்டாய்
வாலிப வயது அல்லவா ---உன்னோடு
வாழத் துடிப்பது நானல்லவா
கேலிகள் செய்து வெறுத்தாய் ----இந்த
கிளி வேண்டி நானும் பொறுத்தேன்
வாசலில் வந்து நிற்பேன் ---உள்ளதை
வாரியே உனக்குத் தந்திடுவேன்
பாசத்தில் அன்றோ புலம்புகிறேன் ---எந்தன்
பத்தினியே உன்னையின்னும் நம்புகிறேன்
காதல் மொழி பேசிக் கட்டி யணைத்து விடு ---உனது
கனியிதழாலே காயத்திற்கு மருந்து யிடு
சோதனை போதும் சுந்தரியே வந்துவிடு ---எனக்கு
சொர்கத்தைக் காட்டி சுகமாக வாழவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக