அண்ணல் காந்தியே ----எங்கள்
அமர ஜோதியே
கன்னல் தமிழிலே ---நாங்கள்
புதுக் கவிதை பாடுவோம்
வெள்ளைக் கொக்கினை ----அன்று
விரட்டி யடித்தவர்
கொள்ளை நடப்பதைக் ---கண்டு
கொதித்து எழுந்தவர்
நல்ல எண்ணங்களை ---இந்திய
நாட்டில் விதைத்தவர்
வெள்ளை மனத்தவர் ----ஏழை
மனங்களில் நிலைத்தவர்
காலம் மாறினும் ---அவரின்
கருணை மறக்குமோ
ஏழையாய் வாழ்ந்த ---அந்த
எளிமை போற்றுவோம்
அடிமை விலங்கினை ---அன்று
அகற்றிக் காத்தவர்
மடமை நீங்குவோம் ---இந்தியா
மதிப்பை உயர்த்துவோம்
[ 02--10 --2019 அன்று காந்திஜி பிறந்த நாள் ]
அமர ஜோதியே
கன்னல் தமிழிலே ---நாங்கள்
புதுக் கவிதை பாடுவோம்
வெள்ளைக் கொக்கினை ----அன்று
விரட்டி யடித்தவர்
கொள்ளை நடப்பதைக் ---கண்டு
கொதித்து எழுந்தவர்
நல்ல எண்ணங்களை ---இந்திய
நாட்டில் விதைத்தவர்
வெள்ளை மனத்தவர் ----ஏழை
மனங்களில் நிலைத்தவர்
காலம் மாறினும் ---அவரின்
கருணை மறக்குமோ
ஏழையாய் வாழ்ந்த ---அந்த
எளிமை போற்றுவோம்
அடிமை விலங்கினை ---அன்று
அகற்றிக் காத்தவர்
மடமை நீங்குவோம் ---இந்தியா
மதிப்பை உயர்த்துவோம்
[ 02--10 --2019 அன்று காந்திஜி பிறந்த நாள் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக