கோண வளவுப் பாதையில் ----ஒரு
குமரிப் பொண்ணு போகிறாள்
தேனைப் போல இனிக்கிறாள் ----அவளை
தினமும் பார்த்து ரசிக்கிறேன்
கள்ளில் ஊறிய விழிகள் ----பேச
கரும்பைப் போன்ற மொழிகள்
முள்ளில் மலர்ந்த ரோஜா ----அவளை
முகரத் துடிக்கும் ராஜா
சிலையைப் போன்ற உருவம் -----அதில்
சீதளமாய்த் தோன்றும் பருவம்
விலையைச் சொல்லிட முடியுமா ----அவளிடம்
விரும்பிச் சென்றால் படியுமா
வாழைத் தண்டாய்க் கால்கள் ----அவள்
வனப்போ கொல்லும் வேல்கள்
பாளை வெடித்த சிரிப்பு ----யாரும்
பார்க்க நினைக்க இனிப்பு
எனக்கு வந்தது மயக்கம் ----இனி
இரவில் வருமோ உறக்கம்
கனியைப் பார்த்ததில் கிறக்கம் -----அது
காலம் முழுதும் இருக்கும்
குமரிப் பொண்ணு போகிறாள்
தேனைப் போல இனிக்கிறாள் ----அவளை
தினமும் பார்த்து ரசிக்கிறேன்
கள்ளில் ஊறிய விழிகள் ----பேச
கரும்பைப் போன்ற மொழிகள்
முள்ளில் மலர்ந்த ரோஜா ----அவளை
முகரத் துடிக்கும் ராஜா
சிலையைப் போன்ற உருவம் -----அதில்
சீதளமாய்த் தோன்றும் பருவம்
விலையைச் சொல்லிட முடியுமா ----அவளிடம்
விரும்பிச் சென்றால் படியுமா
வாழைத் தண்டாய்க் கால்கள் ----அவள்
வனப்போ கொல்லும் வேல்கள்
பாளை வெடித்த சிரிப்பு ----யாரும்
பார்க்க நினைக்க இனிப்பு
எனக்கு வந்தது மயக்கம் ----இனி
இரவில் வருமோ உறக்கம்
கனியைப் பார்த்ததில் கிறக்கம் -----அது
காலம் முழுதும் இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக