என்ன நடக்குது உலகிலே ----இதிலே
எதுவும் எனக்கு விளங்கலே
சொன்னதை மாத்திப் பேசுறான் ----தான்
சுகப்பட பிறரையும் ஏய்க்கிறான்
பேரைக் கெடுத்துக் கொள்கிறான் ---நல்ல
பெரிய மனுஷன் போல் திரிகிறான்
ஊரினை வளைச்சிப் பிடிக்கிறான் ----நாளும்
உத்தமன் போலவே நடிக்கிறான்
வள்ளலாய் வேஷம் போடுறான் ---பணத்தை
வாரிச் சுருட்டியே அமுக்கிறான்
கள்ளமே மூச்சாய் வாழ்கிறான் ----அந்த
கடவுளை நினைத்திட மறக்கிறான்
கொள்ளைகள் அடிக்கிறான் கூட்டிலே ---இவன்
கொடுமை தீருமோ நம்நாட்டிலே
நல்லவர் வாழ்ந்திட வேண்டுமே ----சற்று
நாமும் இதை நினைத்தால் போதுமே
ஒன்றாய் சேர்ந்திங்கு கூடுவோம் ----இந்த
உலுத்தரை தினமும் சாடுவோம்
நன்மைகள் அதிகம் செய்குவோம் ----நம்
நாட்டினை முன்னணி ஆக்குவோம்
எதுவும் எனக்கு விளங்கலே
சொன்னதை மாத்திப் பேசுறான் ----தான்
சுகப்பட பிறரையும் ஏய்க்கிறான்
பேரைக் கெடுத்துக் கொள்கிறான் ---நல்ல
பெரிய மனுஷன் போல் திரிகிறான்
ஊரினை வளைச்சிப் பிடிக்கிறான் ----நாளும்
உத்தமன் போலவே நடிக்கிறான்
வள்ளலாய் வேஷம் போடுறான் ---பணத்தை
வாரிச் சுருட்டியே அமுக்கிறான்
கள்ளமே மூச்சாய் வாழ்கிறான் ----அந்த
கடவுளை நினைத்திட மறக்கிறான்
கொள்ளைகள் அடிக்கிறான் கூட்டிலே ---இவன்
கொடுமை தீருமோ நம்நாட்டிலே
நல்லவர் வாழ்ந்திட வேண்டுமே ----சற்று
நாமும் இதை நினைத்தால் போதுமே
ஒன்றாய் சேர்ந்திங்கு கூடுவோம் ----இந்த
உலுத்தரை தினமும் சாடுவோம்
நன்மைகள் அதிகம் செய்குவோம் ----நம்
நாட்டினை முன்னணி ஆக்குவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக