கண்ணில் வைத்துக் காத்திருந்தேன் ----உன்னை
காலம் முழுதும் பார்த்திருந்தேன்
உன்னில் என்னை வைத்திருந்தேன் ----உன்னை
உயிராய் நானும் நினைத்திருந்தேன்
சிரித்தால் உதிர்வது முத்துக்களோ ---அது
சீதனமாய்ப் பெற்ற சொத்துக்களோ
பிரித்தால் பிரியும் உறவல்லவே ----நமக்குள்
பின்னிப் பிணைந்த சுகமல்லவா
கண்கள் மூடினால் தூக்கமில்லை ----இந்த
காதல் செய்வதும் பெருந்தொல்லை
மண்ணை மறந்த மழை போல ---உந்தன்
மனமும் வறண்டுப் போனதடி
என்ன தவறுகள் செய்தேனோ ----எனோ
பிரிந்து சென்று விட்டாய்
அன்னக் கொடியே அழகரசி ----உன்னை
அடைந்தும் அடையா மாபாவி
என்னைத் தேடி நீ வருவாயா ----உன்
இதயத்தில் எனக்கிடம் தருவாயா
புண்ணினைப் போக்கும் அருமருந்தே ----இந்த
பூமியில் வாழ்வோம் என்றும் நலமாக
காலம் முழுதும் பார்த்திருந்தேன்
உன்னில் என்னை வைத்திருந்தேன் ----உன்னை
உயிராய் நானும் நினைத்திருந்தேன்
சிரித்தால் உதிர்வது முத்துக்களோ ---அது
சீதனமாய்ப் பெற்ற சொத்துக்களோ
பிரித்தால் பிரியும் உறவல்லவே ----நமக்குள்
பின்னிப் பிணைந்த சுகமல்லவா
கண்கள் மூடினால் தூக்கமில்லை ----இந்த
காதல் செய்வதும் பெருந்தொல்லை
மண்ணை மறந்த மழை போல ---உந்தன்
மனமும் வறண்டுப் போனதடி
என்ன தவறுகள் செய்தேனோ ----எனோ
பிரிந்து சென்று விட்டாய்
அன்னக் கொடியே அழகரசி ----உன்னை
அடைந்தும் அடையா மாபாவி
என்னைத் தேடி நீ வருவாயா ----உன்
இதயத்தில் எனக்கிடம் தருவாயா
புண்ணினைப் போக்கும் அருமருந்தே ----இந்த
பூமியில் வாழ்வோம் என்றும் நலமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக