திங்கள், 21 அக்டோபர், 2019

முத்துக்கள் 8 0 2

கண்ணில்      வைத்துக்        காத்திருந்தேன்    ----உன்னை
காலம்        முழுதும்        பார்த்திருந்தேன்
உன்னில்       என்னை       வைத்திருந்தேன்  ----உன்னை
உயிராய்         நானும்      நினைத்திருந்தேன்

சிரித்தால்    உதிர்வது      முத்துக்களோ   ---அது
சீதனமாய்ப்       பெற்ற      சொத்துக்களோ
பிரித்தால்      பிரியும்       உறவல்லவே   ----நமக்குள்
பின்னிப்       பிணைந்த      சுகமல்லவா

கண்கள்       மூடினால்       தூக்கமில்லை    ----இந்த
காதல்        செய்வதும்      பெருந்தொல்லை
மண்ணை       மறந்த       மழை   போல    ---உந்தன்
மனமும்        வறண்டுப்      போனதடி

என்ன        தவறுகள்         செய்தேனோ    ----எனோ
பிரிந்து         சென்று       விட்டாய்
அன்னக்       கொடியே      அழகரசி    ----உன்னை
அடைந்தும்      அடையா      மாபாவி

என்னைத்       தேடி நீ         வருவாயா  ----உன்
இதயத்தில்     எனக்கிடம்    தருவாயா
புண்ணினைப்     போக்கும்     அருமருந்தே    ----இந்த
பூமியில்      வாழ்வோம்     என்றும்      நலமாக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக