சனி, 5 அக்டோபர், 2019

மஹா விஷ்ணு 8 0 0

மலை மீதில்         வாழ்கின்ற        மாலவா   ---ஏழை
மனங்களை         எந்நாளும்       ஆளவா
சிலையாக        நிற்பாயே        நேரிலே    ----என்
சிரம் தாழ்த்தி    வணங்குவேன்     பாரிலே

அலர்மேலு         மங்கையோ       அடிவாரம்    ----தன்
அடியாரைக்        காப்பது        அவள் பாரம்
புலர்கின்ற         காலையில்     பூபாளம்  ----அன்னை
பொன்னான       உள்ளமோ      தாராளம்

பத்மாவதித்        தாயார்        அருகிருக்க   ---உந்தன்
பாதார         விந்தங்கள்    என்றும்      பரவசமே
சத்திய   நெறி      வழங்கும்       சாயுஜ்யனே   ---உனது
சன்னதி        எந்நாளும்    எமக்கு     வைபோகமே

மலையேறி       வந்தார்க்கு       நிறையப்      பலனுமுண்டு   ----எங்கள்
மாதவா        உன்னைக் காணப்      பொருள்     குவியும்
விலையில்லாப்       பொருளான      விஷ்ணுமூர்த்தி    ---நீ
வேண்டுவோர்க்கு      வரமருளும்      வெங்கடேசனே

கோவிந்தா       வெனச் சொல்ல      வினை தீருமே   ---உன்
கோமள      முகத்திலோ        நல்லருள்   வெள்ளமே
வாரி       வழங்குகின்ற        எங்கள்        வரதராஜனே    ----உன்னை
வணங்கிடக்      கிடைப்பது      அமைதி       ஆனந்தமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக