மலை மீதில் வாழ்கின்ற மாலவா ---ஏழை
மனங்களை எந்நாளும் ஆளவா
சிலையாக நிற்பாயே நேரிலே ----என்
சிரம் தாழ்த்தி வணங்குவேன் பாரிலே
அலர்மேலு மங்கையோ அடிவாரம் ----தன்
அடியாரைக் காப்பது அவள் பாரம்
புலர்கின்ற காலையில் பூபாளம் ----அன்னை
பொன்னான உள்ளமோ தாராளம்
பத்மாவதித் தாயார் அருகிருக்க ---உந்தன்
பாதார விந்தங்கள் என்றும் பரவசமே
சத்திய நெறி வழங்கும் சாயுஜ்யனே ---உனது
சன்னதி எந்நாளும் எமக்கு வைபோகமே
மலையேறி வந்தார்க்கு நிறையப் பலனுமுண்டு ----எங்கள்
மாதவா உன்னைக் காணப் பொருள் குவியும்
விலையில்லாப் பொருளான விஷ்ணுமூர்த்தி ---நீ
வேண்டுவோர்க்கு வரமருளும் வெங்கடேசனே
கோவிந்தா வெனச் சொல்ல வினை தீருமே ---உன்
கோமள முகத்திலோ நல்லருள் வெள்ளமே
வாரி வழங்குகின்ற எங்கள் வரதராஜனே ----உன்னை
வணங்கிடக் கிடைப்பது அமைதி ஆனந்தமே
மனங்களை எந்நாளும் ஆளவா
சிலையாக நிற்பாயே நேரிலே ----என்
சிரம் தாழ்த்தி வணங்குவேன் பாரிலே
அலர்மேலு மங்கையோ அடிவாரம் ----தன்
அடியாரைக் காப்பது அவள் பாரம்
புலர்கின்ற காலையில் பூபாளம் ----அன்னை
பொன்னான உள்ளமோ தாராளம்
பத்மாவதித் தாயார் அருகிருக்க ---உந்தன்
பாதார விந்தங்கள் என்றும் பரவசமே
சத்திய நெறி வழங்கும் சாயுஜ்யனே ---உனது
சன்னதி எந்நாளும் எமக்கு வைபோகமே
மலையேறி வந்தார்க்கு நிறையப் பலனுமுண்டு ----எங்கள்
மாதவா உன்னைக் காணப் பொருள் குவியும்
விலையில்லாப் பொருளான விஷ்ணுமூர்த்தி ---நீ
வேண்டுவோர்க்கு வரமருளும் வெங்கடேசனே
கோவிந்தா வெனச் சொல்ல வினை தீருமே ---உன்
கோமள முகத்திலோ நல்லருள் வெள்ளமே
வாரி வழங்குகின்ற எங்கள் வரதராஜனே ----உன்னை
வணங்கிடக் கிடைப்பது அமைதி ஆனந்தமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக