வியாழன், 3 அக்டோபர், 2019

சரஸ்வதி 7 9 8

கவிஞர்கள்        நாவினில்        குடியிருப்பாள்    ---அவர்
கற்பனைக்கு      உயிர்       கொடுப்பாள்
புவியினைக்      காப்பது      அவள்  பாரம்   ----தோன்றும்
புதுமைகள்       எல்லாம்       அவள்  சாரம்

வெள்ளைத்       தாமரையில்      வீற்றிருந்து   ----பல
விந்தைகள்      செய்திடும்       தாயல்லவா
பிள்ளைத்      தமிழின்      பாடல்களில்  ---தினம்
பின்னிப்      பிணைபவள்     அவளல்லவா

ஏடுகளில்       எல்லாம்      இருக்கின்றாள்   ---அவளே
இயல்    இசை      நாடகமென்றாவாள்
பாடும்       என்னுள்ளும்      இருக்கின்றாள்   ----அவளை
பணிவதும்      புகழ்வதும்       என்பணியே

கல்விக்       கண்ணைத்      திறப்பவளாம்  ---உலகில்
கவிதைகள்     தோன்றிடக்      காரணமாம்
வெள்ளை நிற     ஆடைகள்      அணிபவளாம்   ---நாம்
வேண்டிடில்       அனைத்தும்     அளிப்பவளாம்

சரஸ்வதி         என்பது        அவள்      பெயராம்    ---உயர்
சாத்திரங்கள்       சொல்லிடும்       கருப்பொருளாம்
அமைதி        என்பது        அவள்       உருவம்    ---அவளது
அருளினைப்      பெற்றவர்க்கு     கிடைப்பது     யானை பலம்

[நவராத்திரி    வைபவத்     திருநாளில்   அன்னை  சரஸ்வதியைப்
போற்றி     துதி    செய்வதாய்    அமைக்கப்பட்டது  இந்தப்  பாடல் ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக