கவிஞர்கள் நாவினில் குடியிருப்பாள் ---அவர்
கற்பனைக்கு உயிர் கொடுப்பாள்
புவியினைக் காப்பது அவள் பாரம் ----தோன்றும்
புதுமைகள் எல்லாம் அவள் சாரம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்து ----பல
விந்தைகள் செய்திடும் தாயல்லவா
பிள்ளைத் தமிழின் பாடல்களில் ---தினம்
பின்னிப் பிணைபவள் அவளல்லவா
ஏடுகளில் எல்லாம் இருக்கின்றாள் ---அவளே
இயல் இசை நாடகமென்றாவாள்
பாடும் என்னுள்ளும் இருக்கின்றாள் ----அவளை
பணிவதும் புகழ்வதும் என்பணியே
கல்விக் கண்ணைத் திறப்பவளாம் ---உலகில்
கவிதைகள் தோன்றிடக் காரணமாம்
வெள்ளை நிற ஆடைகள் அணிபவளாம் ---நாம்
வேண்டிடில் அனைத்தும் அளிப்பவளாம்
சரஸ்வதி என்பது அவள் பெயராம் ---உயர்
சாத்திரங்கள் சொல்லிடும் கருப்பொருளாம்
அமைதி என்பது அவள் உருவம் ---அவளது
அருளினைப் பெற்றவர்க்கு கிடைப்பது யானை பலம்
[நவராத்திரி வைபவத் திருநாளில் அன்னை சரஸ்வதியைப்
போற்றி துதி செய்வதாய் அமைக்கப்பட்டது இந்தப் பாடல் ]
கற்பனைக்கு உயிர் கொடுப்பாள்
புவியினைக் காப்பது அவள் பாரம் ----தோன்றும்
புதுமைகள் எல்லாம் அவள் சாரம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்து ----பல
விந்தைகள் செய்திடும் தாயல்லவா
பிள்ளைத் தமிழின் பாடல்களில் ---தினம்
பின்னிப் பிணைபவள் அவளல்லவா
ஏடுகளில் எல்லாம் இருக்கின்றாள் ---அவளே
இயல் இசை நாடகமென்றாவாள்
பாடும் என்னுள்ளும் இருக்கின்றாள் ----அவளை
பணிவதும் புகழ்வதும் என்பணியே
கல்விக் கண்ணைத் திறப்பவளாம் ---உலகில்
கவிதைகள் தோன்றிடக் காரணமாம்
வெள்ளை நிற ஆடைகள் அணிபவளாம் ---நாம்
வேண்டிடில் அனைத்தும் அளிப்பவளாம்
சரஸ்வதி என்பது அவள் பெயராம் ---உயர்
சாத்திரங்கள் சொல்லிடும் கருப்பொருளாம்
அமைதி என்பது அவள் உருவம் ---அவளது
அருளினைப் பெற்றவர்க்கு கிடைப்பது யானை பலம்
[நவராத்திரி வைபவத் திருநாளில் அன்னை சரஸ்வதியைப்
போற்றி துதி செய்வதாய் அமைக்கப்பட்டது இந்தப் பாடல் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக