புதன், 23 அக்டோபர், 2019

உறவென்று 8 0 6

கற்பனை        கோயில்         செய்தேன்   ----உனக்கு
கவிதையில்       மாலை     செய்தேன்
அற்புதம்       அடைய      வேண்டி    ---உன்
அழகிய        பாதம்       தொட்டேன்

நிற்பதும்       நடப்பதும்     நின்செயல்  ---என்று
அற்புத       வரிகள்        சொன்னார்
அவர்  பெயர்     உலகில்     நிற்க    ---உள்ள
அனைத்தையும்     செய்தாய்     முருகா

கண்ணனோ        மாயம்       செய்தான்    ---அந்த
காளியோ      ஞாணம்         தந்தாள்
சொன்னதை      நானும்      தந்தேன்    ----இந்த
சுகத்தினில்      வாழ்வாய்      நெஞ்சே

எழுதிட         வலிமை        தருக    ---இங்கு
எண்ணற்ற       கவிதை    வருக
பழுதிலா          புலமை       பெறுக   ----அந்த
பரம்பொருள்      உலகைக்       காக்க

உறவென்று        ஒருவர்         இல்லை    ----உன்
மனம்          எனது          எல்லை
அறிதுயில்         கொள்ளும்         மாலே    ---உந்தன்
அன்பு      தான்        எனக்குக்       காவல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக