கற்பனை கோயில் செய்தேன் ----உனக்கு
கவிதையில் மாலை செய்தேன்
அற்புதம் அடைய வேண்டி ---உன்
அழகிய பாதம் தொட்டேன்
நிற்பதும் நடப்பதும் நின்செயல் ---என்று
அற்புத வரிகள் சொன்னார்
அவர் பெயர் உலகில் நிற்க ---உள்ள
அனைத்தையும் செய்தாய் முருகா
கண்ணனோ மாயம் செய்தான் ---அந்த
காளியோ ஞாணம் தந்தாள்
சொன்னதை நானும் தந்தேன் ----இந்த
சுகத்தினில் வாழ்வாய் நெஞ்சே
எழுதிட வலிமை தருக ---இங்கு
எண்ணற்ற கவிதை வருக
பழுதிலா புலமை பெறுக ----அந்த
பரம்பொருள் உலகைக் காக்க
உறவென்று ஒருவர் இல்லை ----உன்
மனம் எனது எல்லை
அறிதுயில் கொள்ளும் மாலே ---உந்தன்
அன்பு தான் எனக்குக் காவல்
கவிதையில் மாலை செய்தேன்
அற்புதம் அடைய வேண்டி ---உன்
அழகிய பாதம் தொட்டேன்
நிற்பதும் நடப்பதும் நின்செயல் ---என்று
அற்புத வரிகள் சொன்னார்
அவர் பெயர் உலகில் நிற்க ---உள்ள
அனைத்தையும் செய்தாய் முருகா
கண்ணனோ மாயம் செய்தான் ---அந்த
காளியோ ஞாணம் தந்தாள்
சொன்னதை நானும் தந்தேன் ----இந்த
சுகத்தினில் வாழ்வாய் நெஞ்சே
எழுதிட வலிமை தருக ---இங்கு
எண்ணற்ற கவிதை வருக
பழுதிலா புலமை பெறுக ----அந்த
பரம்பொருள் உலகைக் காக்க
உறவென்று ஒருவர் இல்லை ----உன்
மனம் எனது எல்லை
அறிதுயில் கொள்ளும் மாலே ---உந்தன்
அன்பு தான் எனக்குக் காவல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக