புதன், 23 அக்டோபர், 2019

கத்தரிப்பூ 8 0 4

வாழ          வயது           இருக்கு     ---நாம
வாழ்ந்து        விட      வெகு   நாளிருக்கு
கோல         முகம்         இருக்கு   ----இனி
கொஞ்சி     நிற்க       இடமிருக்கு

இன்னும்      என்னடியோ      என்  செல்லக்கண்ணே   ---உன்னை
நினைத்து      நானும்      உருகித்      தவிக்கிறேண்டி
கண்ணுக்கு    இனியவளே    காதலுக்கு   நல்லவளே   ---அடி
இன்னும்      புரியலையா     இந்த    ஏழையோட     மனசு

வட்ட       நிலாவும்      வாவெனக்      கூப்பிடுதே   ---உன்னை
தொட்டுச்     சுவைக்க      துடிக்குது     என்  இளமை
விட்டுப்       பிரிந்தாலே      விரகம்     கொல்லுமடி   ---என்னை
அட்டியின்றி     நீயும்    சற்று     அணைத்து      மகிழ்ந்திடடி

கத்தரிபூ     சேலை      காதோலை     கருகமணி   ---உனக்கு
நித்தமும்      பூட்டி      எந்தன்     நெஞ்சில்      சுமப்பேனடி
முத்த    மழை      பொழிஞ்சு      மோகத்தில்     நீராடு   ----என்
பத்தினிப்      பெண்ணே     என்   பக்கம்     வரக்கூடாதா

நாலு     பேரை      வச்சு       நமக்குக்     கல்யாணம்  ----பின்னே
நல்லபடி      விருந்து       நாமும்      தரவேணும்
வேளை      வந்ததென     நீயும்     விரைந்து     வருவாயடி   ---நாம
வெற்றிக்      கனி  பறிக்க      வேண்டுவோம்     கடவுளையே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக