ஏழுமலை ஏறி வந்தேன் ----உன்னிடம்
எந்தன் மனக்குறை சொல்ல வந்தேன்
சூழும் வினை போக்க வந்தேன் ---உனது
சுந்தர முகம் காண வந்தேன்
தாய் தந்தை இல்லை ----இங்கே
தக்கத் துணை ஒருவருமில்லை
வாய் விட்டு கதருமெனை ---நீதான்
வாரி என்னையும் அணைக்கலாதோ
நின்றது நெடிய கோலம் ----தினம்
நிகழ்வது வர்ண ஜாலம்
கன்றினை தாய்ப் பசு காப்பது போல் ---என்னை
காத்திட வருவாய் அய்யா
கண்களால் கவலை போக்கு ---உன்
கனிமொழி அமுத வாக்கு
மண்ணினை அளந்த மாலே ----என்
மனமிருள் போக்கு நாளே
கேட்டதைக் கொடுக்க வந்தாய் ---எங்கள்
கேள்விக்குப் பதிலும் ஆனாய்
பாட்டினைப் பாட வந்தேன் ----உனது
பாதமே துணையாய்க் கொண்டேன்
எந்தன் மனக்குறை சொல்ல வந்தேன்
சூழும் வினை போக்க வந்தேன் ---உனது
சுந்தர முகம் காண வந்தேன்
தாய் தந்தை இல்லை ----இங்கே
தக்கத் துணை ஒருவருமில்லை
வாய் விட்டு கதருமெனை ---நீதான்
வாரி என்னையும் அணைக்கலாதோ
நின்றது நெடிய கோலம் ----தினம்
நிகழ்வது வர்ண ஜாலம்
கன்றினை தாய்ப் பசு காப்பது போல் ---என்னை
காத்திட வருவாய் அய்யா
கண்களால் கவலை போக்கு ---உன்
கனிமொழி அமுத வாக்கு
மண்ணினை அளந்த மாலே ----என்
மனமிருள் போக்கு நாளே
கேட்டதைக் கொடுக்க வந்தாய் ---எங்கள்
கேள்விக்குப் பதிலும் ஆனாய்
பாட்டினைப் பாட வந்தேன் ----உனது
பாதமே துணையாய்க் கொண்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக