திங்கள், 21 அக்டோபர், 2019

ஏழுமலை 8 0 1

ஏழுமலை          ஏறி          வந்தேன்    ----உன்னிடம்
எந்தன்        மனக்குறை      சொல்ல      வந்தேன்
சூழும்  வினை     போக்க  வந்தேன்   ---உனது
சுந்தர      முகம்     காண     வந்தேன்

தாய்         தந்தை       இல்லை   ----இங்கே
தக்கத்      துணை      ஒருவருமில்லை
வாய்   விட்டு     கதருமெனை   ---நீதான்
வாரி     என்னையும்    அணைக்கலாதோ

நின்றது       நெடிய        கோலம்    ----தினம்
நிகழ்வது       வர்ண       ஜாலம்
கன்றினை     தாய்ப்    பசு    காப்பது  போல்   ---என்னை
காத்திட       வருவாய்      அய்யா

கண்களால்       கவலை        போக்கு    ---உன்
கனிமொழி        அமுத       வாக்கு
மண்ணினை      அளந்த      மாலே   ----என்
மனமிருள்        போக்கு       நாளே

கேட்டதைக்        கொடுக்க      வந்தாய்    ---எங்கள்
கேள்விக்குப்       பதிலும்        ஆனாய்
பாட்டினைப்        பாட        வந்தேன்    ----உனது
பாதமே        துணையாய்க்      கொண்டேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக