வெள்ளி, 15 நவம்பர், 2019

கருணை 8 1 0

இமையாக         வந்தாய்     ----இன்று
எமைக்         காத்து      நின்றாய்
உமையென்றும்        மறவேனே     ஐயா     ---மனதில்
உள்ளதைச்       சொல்கிறேனே      மெய்யாய்

ஐயா         நின்கருணை        ஆழ்கடலாகும்   ----இந்த
அடியேனின்      சேவை      சிறுமடலாகும்
பையவே      காத்திட   எங்கள்     பரமனே     வருவாய்    ----உலகில்
பாபங்கள்        நீக்கி      நற்பதம்        அருள்வாய்

ஏழையென்ற       சொல்        இல்லாது       போக    ---மண்ணில்
இருப்பதை       வைத்து      இன்பமாய்      வாழ
நாளைய        பொழுது       நன்மையாய்      வேண்டும்   ---எங்கள்
நாயகன்        அருளால்       நலமெய்த     வேண்டும்

மங்கல        மங்கையர்        மகிழ்வாக      வேண்டும்   ---எங்கள்
மனைகளில்      செல்வங்கள்       மலையாக     வேண்டும்
பங்கமிலா       வாழ்வு        பரிசாக       வேண்டும்    ----எம்
பாரதத்தின்     பெருமைகள்      பலர்      அறிய  வேண்டும்

மாதம்      மும்மாரி       மண்ணிற்கு       வேண்டும்   ----எம்
மக்களின்       உழைப்பு    மதிக்கப்பட     வேண்டும்
பேதமில்லா    வாழ்வு  ஏழைக்கும்     வேண்டும்   ---எங்கள்
பெம்மானே       நீவிர்     பிழை    பொறுத்தல்   வேண்டும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக