வெள்ளி, 15 நவம்பர், 2019

கோயில் 8 1 2

அறிவோம்        அண்ணலே      உம் பெருமை    ----அதனை
அனுதினம்      போற்றுதல்     எம்கடமை
தெரியாத      பொருளைத்    தெரிய      வைப்பாய்    ----வரும்
தீமைகள்      அனைத்தையும்      போக்கி    வைப்பாய்

மனதினில்      கோயிலும்       உனக்காக    ---தமிழ்
மலர்கள்       சொரிவேன்       கணக்காக
கனவையும்      நனவாய்      மாற்றிடுவாய்   ---எங்களை
காலம்      முழுதும்      நன்றாய்      வாழ  வைப்பாய்

கடலைப்       போன்றது      உம்   மனது    ---உன்
காலடி      ஒன்றுதான்      பெரும் பேறு
மடமை      நீங்கிட     மனம்    கனிவாய்    ----தமிழ்
மண்ணகம்       ஆண்டிட     உதவி    செய்வாய்

மங்கையர்       மகிழ்ந்திட     வரம்    கொடுப்பாய்   ---நன்
மக்களாய்       வாழ்ந்திட       வழி   வகுப்பாய்
சிங்கமாய்ச்       சீறிட       வீரம்    கொடு    ---அவர்
சிறப்புடன்      விளங்கிட      உன்  வாளை      எடு

என்னையும்      எந்நாளும்         எழுத    விடு    ----இந்த
ஏழையின்      வாழ்விலே       ஒளியைக்    கொடு
மண்ணையும்     மக்களையும்     காத்து     நில்லு   ---வரும்
மாயங்கள்      யாவையும்      தூரத்   தள்ளு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக