கார் முகில் வண்ணா ---உலகில்
ஏழையைக் காத்திட வருவாய்
பார்த்தனுக்கு சாரதியாய் பணி புரிந்தாயே ---அவர்
பாரதப் போரில் ஜெயித்திடவே துணை புரிந்தாயே
நீக்கமற நிறைந்து நிற்கும் நிர்மல ஜோதி ----உன்னை
நித்தமும் நினைப்பவர்க்கு ஆனந்த ஜோதி
பார்க்கின்ற கண்களுக்குப் பரவசம் நீயே ----உன்னை
பணிந்து நிற்கும் பக்தர்க்கு தரிசனம் தருவாய்
கன்னியவள் மானம் காக்க கருணை செய்தவன் ----கோபி
கன்னிகைகள் மனதிலே நன்கு கலந்து விட்டவன்
எண்ணி ஏங்கி அழுத பேர்களிடம் எதிரில் வந்தவன் ---அன்று
இணையில்லாக் கீதை தந்து இதயம் வென்றவன்
ஆநிரையை மேய்க்க வந்த ஆயர் பாலகன் ===கொடிய
அரக்கர்களைக் கொன்று நல்ல அமைதி காத்தவன்
தேனைப் போல இனிக்கின்ற தெய்வம் நீயப்பா ---உன்னை
தினமும் தொழுதாலே மனிதர்க்கு தீரும் நோயப்பா
காப்பதற்கு எங்களுக்கு மீண்டும் கண்ணன் வேண்டுமே ---அவர்
கருணையினால் மக்களுக்கு வரும் கவலை தீருமே
பாக்களெல்லாம் போற்றுகின்ற எங்கள் பரந்தாமனே ----உன்னை
பாடி தினம் நாங்கள் மகிழ்ந்திட நல்வரங்கள் தாருமே
ஏழையைக் காத்திட வருவாய்
பார்த்தனுக்கு சாரதியாய் பணி புரிந்தாயே ---அவர்
பாரதப் போரில் ஜெயித்திடவே துணை புரிந்தாயே
நீக்கமற நிறைந்து நிற்கும் நிர்மல ஜோதி ----உன்னை
நித்தமும் நினைப்பவர்க்கு ஆனந்த ஜோதி
பார்க்கின்ற கண்களுக்குப் பரவசம் நீயே ----உன்னை
பணிந்து நிற்கும் பக்தர்க்கு தரிசனம் தருவாய்
கன்னியவள் மானம் காக்க கருணை செய்தவன் ----கோபி
கன்னிகைகள் மனதிலே நன்கு கலந்து விட்டவன்
எண்ணி ஏங்கி அழுத பேர்களிடம் எதிரில் வந்தவன் ---அன்று
இணையில்லாக் கீதை தந்து இதயம் வென்றவன்
ஆநிரையை மேய்க்க வந்த ஆயர் பாலகன் ===கொடிய
அரக்கர்களைக் கொன்று நல்ல அமைதி காத்தவன்
தேனைப் போல இனிக்கின்ற தெய்வம் நீயப்பா ---உன்னை
தினமும் தொழுதாலே மனிதர்க்கு தீரும் நோயப்பா
காப்பதற்கு எங்களுக்கு மீண்டும் கண்ணன் வேண்டுமே ---அவர்
கருணையினால் மக்களுக்கு வரும் கவலை தீருமே
பாக்களெல்லாம் போற்றுகின்ற எங்கள் பரந்தாமனே ----உன்னை
பாடி தினம் நாங்கள் மகிழ்ந்திட நல்வரங்கள் தாருமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக