வெள்ளி, 15 நவம்பர், 2019

ஆனந்த ஜோதி 8 1 1

கார்     முகில்       வண்ணா    ---உலகில்
ஏழையைக்      காத்திட       வருவாய்
பார்த்தனுக்கு     சாரதியாய்     பணி  புரிந்தாயே   ---அவர்
பாரதப்     போரில்     ஜெயித்திடவே     துணை    புரிந்தாயே

நீக்கமற       நிறைந்து நிற்கும்      நிர்மல      ஜோதி    ----உன்னை
நித்தமும்      நினைப்பவர்க்கு      ஆனந்த  ஜோதி
பார்க்கின்ற    கண்களுக்குப்     பரவசம்     நீயே    ----உன்னை
பணிந்து     நிற்கும்     பக்தர்க்கு     தரிசனம்     தருவாய்

கன்னியவள்   மானம்     காக்க     கருணை      செய்தவன்   ----கோபி
கன்னிகைகள்     மனதிலே     நன்கு     கலந்து      விட்டவன்
எண்ணி ஏங்கி    அழுத      பேர்களிடம்      எதிரில்    வந்தவன்    ---அன்று
இணையில்லாக்      கீதை     தந்து      இதயம்     வென்றவன்

ஆநிரையை    மேய்க்க     வந்த       ஆயர்    பாலகன்   ===கொடிய
அரக்கர்களைக்        கொன்று      நல்ல     அமைதி      காத்தவன்
தேனைப்      போல      இனிக்கின்ற         தெய்வம்     நீயப்பா   ---உன்னை
தினமும்       தொழுதாலே    மனிதர்க்கு     தீரும்     நோயப்பா

காப்பதற்கு       எங்களுக்கு   மீண்டும்     கண்ணன்     வேண்டுமே   ---அவர்
கருணையினால்      மக்களுக்கு   வரும்    கவலை    தீருமே
பாக்களெல்லாம்    போற்றுகின்ற    எங்கள்   பரந்தாமனே   ----உன்னை
பாடி  தினம்      நாங்கள்     மகிழ்ந்திட     நல்வரங்கள்      தாருமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக