நின்றேன் நடந்தேன் நெடும் தூரம் ---உன்
நினைவே எனக்கு வழிகாட்டும்
அன்பால் இணைவோம் பலகாலம் ---மன
அமைதி நிலவுமே எக்காலம்
அன்பால் இணைந்து கட்டுண்டோம் ---நம்
மனதில் கோவில் கட்டி வைப்போம்
இன்பம் இனிமேல் வரவாகும் ----நமது
இதயம் துடிப்பது உறவாகும்
மணநாள் வருமே மகிழ்வாக ----பின்
மழலைகள் வரலாம் துணையாக
கணமும் நாமும் பிரியோமே ----நம்
காதல் உலகிற்கு நல்விடையாகும்
இறைவன் கருணை நமக்குண்டு ---அவர்
இதயத்தில் நமக்கொரு இடமுண்டு
கரையும் பொழுதும் ஓடிவிடும் ---உயர்
காதல் என்றுமே வாழ்ந்துவிடும்
நன்றியே நமக்கு நினைவாகும் ----பிறர்
நன்மையே வாழ்வில் சுவையாகும்
அன்பெனும் நிலையினில் ஆடுகிறோம் ----அந்த
ஆண்டவன் அருளால் வாழுகிறோம்
நினைவே எனக்கு வழிகாட்டும்
அன்பால் இணைவோம் பலகாலம் ---மன
அமைதி நிலவுமே எக்காலம்
அன்பால் இணைந்து கட்டுண்டோம் ---நம்
மனதில் கோவில் கட்டி வைப்போம்
இன்பம் இனிமேல் வரவாகும் ----நமது
இதயம் துடிப்பது உறவாகும்
மணநாள் வருமே மகிழ்வாக ----பின்
மழலைகள் வரலாம் துணையாக
கணமும் நாமும் பிரியோமே ----நம்
காதல் உலகிற்கு நல்விடையாகும்
இறைவன் கருணை நமக்குண்டு ---அவர்
இதயத்தில் நமக்கொரு இடமுண்டு
கரையும் பொழுதும் ஓடிவிடும் ---உயர்
காதல் என்றுமே வாழ்ந்துவிடும்
நன்றியே நமக்கு நினைவாகும் ----பிறர்
நன்மையே வாழ்வில் சுவையாகும்
அன்பெனும் நிலையினில் ஆடுகிறோம் ----அந்த
ஆண்டவன் அருளால் வாழுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக