வெள்ளி, 8 நவம்பர், 2019

அன்பு 8 0 9

நின்றேன்        நடந்தேன்         நெடும்     தூரம்     ---உன்
நினைவே        எனக்கு       வழிகாட்டும்
அன்பால்        இணைவோம்      பலகாலம்   ---மன
அமைதி        நிலவுமே       எக்காலம்

அன்பால்       இணைந்து      கட்டுண்டோம்    ---நம்
மனதில்       கோவில்      கட்டி    வைப்போம்
இன்பம்       இனிமேல்      வரவாகும்  ----நமது
இதயம்       துடிப்பது      உறவாகும்

மணநாள்       வருமே        மகிழ்வாக    ----பின்
மழலைகள்     வரலாம்     துணையாக
கணமும்       நாமும்      பிரியோமே    ----நம்
காதல்       உலகிற்கு    நல்விடையாகும்

இறைவன்      கருணை       நமக்குண்டு    ---அவர்
இதயத்தில்     நமக்கொரு     இடமுண்டு
கரையும்       பொழுதும்       ஓடிவிடும்    ---உயர்
காதல்        என்றுமே       வாழ்ந்துவிடும்

நன்றியே        நமக்கு        நினைவாகும்    ----பிறர்
நன்மையே     வாழ்வில்     சுவையாகும்
அன்பெனும்    நிலையினில்      ஆடுகிறோம்    ----அந்த
ஆண்டவன்       அருளால்      வாழுகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக