கலை ஞா ன வடிவிலே ----என்
கண்களில் நீயும் தெரிகிறாய்
விலையே யிலாப் பொருளே ---உன்னை
வேண்டித் தினமும் வணங்குவேன்
அள்ளித் தரும் வள்ளலே ---உனது
அழகில் நானும் மயங்குவேன்
கள்ள மில்லாச் சிரிப்பிலே ---நான்
கவிதைகள் கோடி எழுதுவேன்
கள்ளம் தெரியாப் பிள்ளையாய் ---என்னை
காவல் காக்க வேண்டுமே
உள்ளமதில் கோவிலாய் தினம் ---நான்
உன்னைப் பூசை செய்குவேன்
ஊற்று போல செல்வமும் ----எனக்கு
உயர்ந்த கல்வி ஞானமும்
சேர்த்து நிறையத் தாருங்கள் ---இந்த
சேயைக் காத்திட வாருங்கள்
காலம் ஓடி மறையலாம் ----உயர்
கருணை அன்பு மறையுமோ
நாளும் இனி நல்ல நாள் ----உனக்கு
நன்றி சொல்லி வாழ்கிறேன்
கண்களில் நீயும் தெரிகிறாய்
விலையே யிலாப் பொருளே ---உன்னை
வேண்டித் தினமும் வணங்குவேன்
அள்ளித் தரும் வள்ளலே ---உனது
அழகில் நானும் மயங்குவேன்
கள்ள மில்லாச் சிரிப்பிலே ---நான்
கவிதைகள் கோடி எழுதுவேன்
கள்ளம் தெரியாப் பிள்ளையாய் ---என்னை
காவல் காக்க வேண்டுமே
உள்ளமதில் கோவிலாய் தினம் ---நான்
உன்னைப் பூசை செய்குவேன்
ஊற்று போல செல்வமும் ----எனக்கு
உயர்ந்த கல்வி ஞானமும்
சேர்த்து நிறையத் தாருங்கள் ---இந்த
சேயைக் காத்திட வாருங்கள்
காலம் ஓடி மறையலாம் ----உயர்
கருணை அன்பு மறையுமோ
நாளும் இனி நல்ல நாள் ----உனக்கு
நன்றி சொல்லி வாழ்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக