வெள்ளி, 8 நவம்பர், 2019

நல்ல காலம் 8 0 8

கலை        ஞா ன          வடிவிலே     ----என்
கண்களில்         நீயும்      தெரிகிறாய்
விலையே      யிலாப்      பொருளே     ---உன்னை
வேண்டித்       தினமும்      வணங்குவேன்

அள்ளித்          தரும்        வள்ளலே   ---உனது
அழகில்          நானும்      மயங்குவேன்
கள்ள      மில்லாச்        சிரிப்பிலே     ---நான்
கவிதைகள்        கோடி      எழுதுவேன்

கள்ளம்       தெரியாப்       பிள்ளையாய்   ---என்னை
காவல்       காக்க        வேண்டுமே
உள்ளமதில்      கோவிலாய்    தினம்    ---நான்
உன்னைப்        பூசை       செய்குவேன்

ஊற்று         போல       செல்வமும்     ----எனக்கு
உயர்ந்த        கல்வி       ஞானமும்
சேர்த்து       நிறையத்       தாருங்கள்    ---இந்த
சேயைக்        காத்திட      வாருங்கள்

காலம்        ஓடி        மறையலாம்    ----உயர்
கருணை         அன்பு      மறையுமோ
நாளும்        இனி        நல்ல நாள்   ----உனக்கு
நன்றி        சொல்லி       வாழ்கிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக