அவன் ; கண்ணாலே பேசுறியே கண்ணம்மா --நாம
கண்ணாலம் செஞ்சாலே என்னம்மா
உன்மேல ஆசை வச்சேன் நில்லம்மா --எனக்கு
உசந்த பதிலை நீயுமினி சொல்லம்மா
அவள் ; முண்டாசை தலையில கட்டி ---நல்ல
முழுக்கையில் சட்டையப் போட்டு
கண்டவரை வம்பிழுக்கும் கண்ணையா --உன்
கவனம் என்மேல் வந்தது என்னய்யா
அவன் ; பழுத்துக் குலுங்கும் பழத்தோட்டம் ---நானும்
பறித்துத் தின்பேன் கிளியாட்டம்
அழுத்தமான பொண்ணு நீயி அன்னம்மா ---நா
ஆசை வச்சா தப்பில்லே பொன்னம்மா
அவள் ; வக்கணையாப் பேசி வாரே ---உனக்கு
வாய்த் துடுக்கு ரொம்ப நீளம்
அக்கா மகளா நானுனக்கு சின்னய்யா --நீயும்
அதட்டி உருட்டி மிரட்டிடாதே கேணையா
அவன் ;கோவம் வேண்டாம் கன்னி மானே ---நான்
கொட்டித் தாறேன் தங்கம் தானே
ஆவலுடன் கேட்டதும் தப்பு தான் --நீ
அன்பு காட்டினா எனக்கென்றும் ஜாலி தான்
இருவரும் ;; கண்ணும் கண்ணும் சேர காதலாச்சு --இது
கண்ணாலம் வரையிலும் நீண்டு போச்சு
பொண்ணும் ஆணும் சேர்ந்து போச்சு ---நமக்கு
பெரியவங்க இனிமேல் காவலாச்சு
கண்ணாலம் செஞ்சாலே என்னம்மா
உன்மேல ஆசை வச்சேன் நில்லம்மா --எனக்கு
உசந்த பதிலை நீயுமினி சொல்லம்மா
அவள் ; முண்டாசை தலையில கட்டி ---நல்ல
முழுக்கையில் சட்டையப் போட்டு
கண்டவரை வம்பிழுக்கும் கண்ணையா --உன்
கவனம் என்மேல் வந்தது என்னய்யா
அவன் ; பழுத்துக் குலுங்கும் பழத்தோட்டம் ---நானும்
பறித்துத் தின்பேன் கிளியாட்டம்
அழுத்தமான பொண்ணு நீயி அன்னம்மா ---நா
ஆசை வச்சா தப்பில்லே பொன்னம்மா
அவள் ; வக்கணையாப் பேசி வாரே ---உனக்கு
வாய்த் துடுக்கு ரொம்ப நீளம்
அக்கா மகளா நானுனக்கு சின்னய்யா --நீயும்
அதட்டி உருட்டி மிரட்டிடாதே கேணையா
அவன் ;கோவம் வேண்டாம் கன்னி மானே ---நான்
கொட்டித் தாறேன் தங்கம் தானே
ஆவலுடன் கேட்டதும் தப்பு தான் --நீ
அன்பு காட்டினா எனக்கென்றும் ஜாலி தான்
இருவரும் ;; கண்ணும் கண்ணும் சேர காதலாச்சு --இது
கண்ணாலம் வரையிலும் நீண்டு போச்சு
பொண்ணும் ஆணும் சேர்ந்து போச்சு ---நமக்கு
பெரியவங்க இனிமேல் காவலாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக