கண்ணாலே என்னை வென்றாள் --நான்
காணாமல் எங்கோ சென்றாள்
பொன்மானைத் தேடுவேன் இன்று --அவள்
போன இடம் தெரிந்தா லே நன்று
சொல்லாமல் போயே விட்டாள் --நானோ
சுரம் தவறும் தாளம் ஆனேன்
எல்லாமே விதியின் செயலோ ---இனி
விடியும் காலம் என்று வருமோ
வழி யில் தப்பிப் போனாளோ --இல்லை
திரும்பி வரவேண்டாம் என்றே நினைவா
பழி சுமத்தல் சரியோ பெண்ணே ---நல்ல
பதிலாக வருவாய் எந்தன் முன்னே
ஊரார்கள் எதிர்த்த போதும் ---என்
உறவின் முறை வெறுத்த போதும்
வேறு இடம் எனக்கேது பெண்ணே ---என்
எதிர்காலம் உந்தன் கையில் கண்ணே
கண் காணா இடங்கள் போவோம் --நாம்
காதல் வானில் ஒன்றாய்ப் பறப்போம்
கண்ணோடு இமையாய் வாழ்வோம் ---இனி
காதலின் எல்லை காண்போம்
காணாமல் எங்கோ சென்றாள்
பொன்மானைத் தேடுவேன் இன்று --அவள்
போன இடம் தெரிந்தா லே நன்று
சொல்லாமல் போயே விட்டாள் --நானோ
சுரம் தவறும் தாளம் ஆனேன்
எல்லாமே விதியின் செயலோ ---இனி
விடியும் காலம் என்று வருமோ
வழி யில் தப்பிப் போனாளோ --இல்லை
திரும்பி வரவேண்டாம் என்றே நினைவா
பழி சுமத்தல் சரியோ பெண்ணே ---நல்ல
பதிலாக வருவாய் எந்தன் முன்னே
ஊரார்கள் எதிர்த்த போதும் ---என்
உறவின் முறை வெறுத்த போதும்
வேறு இடம் எனக்கேது பெண்ணே ---என்
எதிர்காலம் உந்தன் கையில் கண்ணே
கண் காணா இடங்கள் போவோம் --நாம்
காதல் வானில் ஒன்றாய்ப் பறப்போம்
கண்ணோடு இமையாய் வாழ்வோம் ---இனி
காதலின் எல்லை காண்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக