அரசும் வேலும் அருகிருக்க --அழகாய்
அமர்ந்த திருமுகம் யார்
வேலனின் அண்ணன் விமலனின் மைந்தன் --அவர்
தாளடி பணிந்திடத் தன்னருள் மிகுமே
தாயைப் போல பெண் பிள்ளை --தனக்கு
வேண்டுமெனத் தினமும் தவம் புரிவார்
வாயினைத் திறந்து எதுவும் பேசாது --எதிரில்
வருவாளா என்றே ஆசையுடன் காத்திருப்பார்
மோனைப் பொருளின் மூலவராம் --உலகில்
முழு முதற் கடவுள் என்றும் அவர்தானே
பானை வயிற்றுத் தொந்தி யுடன் --நமக்கு
பலன்கள் நிறையவே அள்ளித் தந்திடுவார்
அப்பம் பொரி கடலை அவலோடு --அழகாய்
செய்து வைத்த இனிப்புக் கொழுக் கட்டை
பக்தியுடன் நாமும் அவர்க்குப் படைத்தாலே ---அவர்
பரவசம் கொண்டு நல்வரம் தருவார்
அன்னை தந்தை தான் உலகமென ---அன்று
அறிவுடன் சுற்றி வந்து கனி பெற்றார்
முன்னை முதலுமாய் என்றும் இருப்பவராம் ---அந்த
மூஷிக கணபதியை ப் போற்றி வணங்கிடுவோம்
அமர்ந்த திருமுகம் யார்
வேலனின் அண்ணன் விமலனின் மைந்தன் --அவர்
தாளடி பணிந்திடத் தன்னருள் மிகுமே
தாயைப் போல பெண் பிள்ளை --தனக்கு
வேண்டுமெனத் தினமும் தவம் புரிவார்
வாயினைத் திறந்து எதுவும் பேசாது --எதிரில்
வருவாளா என்றே ஆசையுடன் காத்திருப்பார்
மோனைப் பொருளின் மூலவராம் --உலகில்
முழு முதற் கடவுள் என்றும் அவர்தானே
பானை வயிற்றுத் தொந்தி யுடன் --நமக்கு
பலன்கள் நிறையவே அள்ளித் தந்திடுவார்
அப்பம் பொரி கடலை அவலோடு --அழகாய்
செய்து வைத்த இனிப்புக் கொழுக் கட்டை
பக்தியுடன் நாமும் அவர்க்குப் படைத்தாலே ---அவர்
பரவசம் கொண்டு நல்வரம் தருவார்
அன்னை தந்தை தான் உலகமென ---அன்று
அறிவுடன் சுற்றி வந்து கனி பெற்றார்
முன்னை முதலுமாய் என்றும் இருப்பவராம் ---அந்த
மூஷிக கணபதியை ப் போற்றி வணங்கிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக