ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

கணபதி 7 6 0

அரசும்      வேலும்       அருகிருக்க   --அழகாய்
அமர்ந்த     திருமுகம்      யார்
வேலனின்    அண்ணன்   விமலனின்   மைந்தன்   --அவர்
தாளடி      பணிந்திடத்      தன்னருள்    மிகுமே

தாயைப்      போல      பெண்     பிள்ளை  --தனக்கு
வேண்டுமெனத்     தினமும்     தவம்    புரிவார்
வாயினைத்    திறந்து  எதுவும்    பேசாது   --எதிரில்
வருவாளா     என்றே   ஆசையுடன்    காத்திருப்பார்

மோனைப்       பொருளின்      மூலவராம்  --உலகில்
முழு  முதற்     கடவுள்    என்றும்    அவர்தானே
பானை      வயிற்றுத்     தொந்தி    யுடன்    --நமக்கு
பலன்கள்   நிறையவே     அள்ளித்     தந்திடுவார்

அப்பம்     பொரி     கடலை      அவலோடு    --அழகாய்
செய்து     வைத்த     இனிப்புக்     கொழுக் கட்டை
பக்தியுடன்     நாமும்     அவர்க்குப்    படைத்தாலே  ---அவர்
பரவசம்     கொண்டு      நல்வரம்     தருவார்

அன்னை      தந்தை     தான்      உலகமென   ---அன்று
அறிவுடன்     சுற்றி     வந்து     கனி  பெற்றார்
முன்னை       முதலுமாய்     என்றும்  இருப்பவராம்   ---அந்த
மூஷிக        கணபதியை ப்     போற்றி     வணங்கிடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக