கண்ணாலே காதல் சொன்னாய் ---என்
கருத்தினில் மாயம் செய்தாய்
பின்னாலே அலைய விட்டுப் --பிறகு
எங்கோ ஒளிந்து கொண்டாய்
காற்றாக நீயே வந்தாய் --எனோ
கனலாக மாறிப் போனாய்
நேற்று நடந்த வேலை ---உனது
நினைவுக்கும் எனோ வரவில்லையே
ஊரெல்லாம் தூதுகள் விட்டேன் ---அடியே
உன்னாலே நானும் கெட்டேன்
வேரோடு சாய்த்து விட்டாய் ---என்
விழிநீரில் கப்பல் விட்டாய்
ஆற்றாது அழுத கண்ணீர் ---இங்கு
ஆறாக ஓடுவது ஏனடி
பார்க்காதே என்றே போனாய் ---இனி
பாவி நான் எங்கு போவேன்
வாழ்வுக்கு உன்னையன்றி வழியேதும் இல்லையடி --நீ
வந்தாலே வசந்தமாய் ஆகும் பொழுது
கேலிகள் பேசி கெடுத்திட வேண்டாம் பெண்ணே ---உன்
கோல முகம் காட்டி குளிர் மழை பொழிவாய் கண்ணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக