ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

குளிர்மழை 7 5 1

கண்ணாலே           காதல்         சொன்னாய்    ---என் 
கருத்தினில்       மாயம்        செய்தாய் 
பின்னாலே       அலைய     விட்டுப்   --பிறகு 
எங்கோ       ஒளிந்து      கொண்டாய் 

காற்றாக       நீயே     வந்தாய்    --எனோ 
கனலாக       மாறிப்     போனாய் 
நேற்று       நடந்த       வேலை   ---உனது 
நினைவுக்கும்      எனோ      வரவில்லையே 

ஊரெல்லாம்       தூதுகள்      விட்டேன்   ---அடியே 
உன்னாலே      நானும்      கெட்டேன் 
வேரோடு        சாய்த்து     விட்டாய்    ---என் 
விழிநீரில்      கப்பல்      விட்டாய் 

ஆற்றாது       அழுத         கண்ணீர்   ---இங்கு 
ஆறாக         ஓடுவது       ஏனடி 
பார்க்காதே      என்றே      போனாய்   ---இனி 
பாவி       நான்        எங்கு    போவேன் 

வாழ்வுக்கு     உன்னையன்றி     வழியேதும்   இல்லையடி  --நீ 
வந்தாலே       வசந்தமாய்      ஆகும்      பொழுது 
கேலிகள்      பேசி      கெடுத்திட   வேண்டாம்    பெண்ணே  ---உன் 
கோல      முகம்     காட்டி     குளிர்  மழை    பொழிவாய்   கண்ணே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக