புதன், 7 ஆகஸ்ட், 2019

வேட்கை 7 4 5

சிலையைப்            போல         அழகு     ----நீ
சிரித்து          என்னிடம்       பழகு
கலைகள்      தவழும்       நெற்றி     ---உன்னை
கண்டதால்       எனக்கே     வெற்றி

தனியாய்        வந்தால்       வருவேன்    ---உனை
தழுவி        அணைக்க      நினைப்பேன்
மண நாள்    மேடையில்    தொடர்வேன்    ---புது
மஞ்சத்தில்      ஆசையில்    படர்வேன்
காணக்    கிடைக்காத    அமுதம்  ---எனது    
கண்களில்       பட்டதே       குமுதம்
தேனைப்       போலவே      இனிப்பு   ---உன்னை
தேடி        அலைவதால்     களைப்பு

இருவரும்      ஒருவர்       ஆவோம்   ---நாம்
இணைந்து     சுகமும்      காண்போம்
பருவம்       செய்கிற     பாடம்     ---நல்ல
பதிலைச்    சொல்லுங்க     போதும்

நாட்கள்      தோறும்     அலைந்தேன்   ---என்
நாயகி       எங்கே  நீ     தொலைந்தாய் 
வேட்கை    மீறுதே       எனக்கு    ---இனியும்
வேண்டாமே     உனக்கு      வீண் பிணக்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக