சிலையைப் போல அழகு ----நீ
சிரித்து என்னிடம் பழகு
கலைகள் தவழும் நெற்றி ---உன்னை
கண்டதால் எனக்கே வெற்றி
தனியாய் வந்தால் வருவேன் ---உனை
தழுவி அணைக்க நினைப்பேன்
மண நாள் மேடையில் தொடர்வேன் ---புது
மஞ்சத்தில் ஆசையில் படர்வேன்
காணக் கிடைக்காத அமுதம் ---எனது
கண்களில் பட்டதே குமுதம்
தேனைப் போலவே இனிப்பு ---உன்னை
தேடி அலைவதால் களைப்பு
இருவரும் ஒருவர் ஆவோம் ---நாம்
இணைந்து சுகமும் காண்போம்
பருவம் செய்கிற பாடம் ---நல்ல
பதிலைச் சொல்லுங்க போதும்
நாட்கள் தோறும் அலைந்தேன் ---என்
நாயகி எங்கே நீ தொலைந்தாய்
வேட்கை மீறுதே எனக்கு ---இனியும்
வேண்டாமே உனக்கு வீண் பிணக்கு
சிரித்து என்னிடம் பழகு
கலைகள் தவழும் நெற்றி ---உன்னை
கண்டதால் எனக்கே வெற்றி
தனியாய் வந்தால் வருவேன் ---உனை
தழுவி அணைக்க நினைப்பேன்
மண நாள் மேடையில் தொடர்வேன் ---புது
மஞ்சத்தில் ஆசையில் படர்வேன்
காணக் கிடைக்காத அமுதம் ---எனது
கண்களில் பட்டதே குமுதம்
தேனைப் போலவே இனிப்பு ---உன்னை
தேடி அலைவதால் களைப்பு
இருவரும் ஒருவர் ஆவோம் ---நாம்
இணைந்து சுகமும் காண்போம்
பருவம் செய்கிற பாடம் ---நல்ல
பதிலைச் சொல்லுங்க போதும்
நாட்கள் தோறும் அலைந்தேன் ---என்
நாயகி எங்கே நீ தொலைந்தாய்
வேட்கை மீறுதே எனக்கு ---இனியும்
வேண்டாமே உனக்கு வீண் பிணக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக