பொன்னில் செய்த பூவே ---உன்னை
பூசை செய்வேன் நானே
கண்ணில் நின்றாய் அன்று ---நாம்
காதல் செய்தல் நன்று
உன்னை எண்ணி வாழ்வேன் ---நீ
உதறிப் போனால் வீழ்வேன்
பண்ணில் ஸ்வரங்கள் இனிமை ---என்னை
பரிதவிக்க விடுதல் கொடுமை
வானில் நிலவை ரசிப்பேன் ---உன்னை
வாரி யணைத்து ருசிப்பேன்
கானம் காதில் இசைப்பேன் ---பொங்கும்
காதல் கடலில் மிதப்பேன்
அங்கம் முழுதும் தங்கம் ---அதில்
அழகு வழியும் எங்கும்
திங்கள் வானம் சாட்சி ---அடியே
தினமும் உனது ஆட்சி
அள்ளிக் கொடுக்க வாராய் ---எனக்கு
ஆசை முத்தம் நீ தாராய்
சொல்லிக் கொடுப்பது நீயல்லவா ---அந்த
சொர்க்கம் நீ தரும் வரமல்லவா
பூசை செய்வேன் நானே
கண்ணில் நின்றாய் அன்று ---நாம்
காதல் செய்தல் நன்று
உன்னை எண்ணி வாழ்வேன் ---நீ
உதறிப் போனால் வீழ்வேன்
பண்ணில் ஸ்வரங்கள் இனிமை ---என்னை
பரிதவிக்க விடுதல் கொடுமை
வானில் நிலவை ரசிப்பேன் ---உன்னை
வாரி யணைத்து ருசிப்பேன்
கானம் காதில் இசைப்பேன் ---பொங்கும்
காதல் கடலில் மிதப்பேன்
அங்கம் முழுதும் தங்கம் ---அதில்
அழகு வழியும் எங்கும்
திங்கள் வானம் சாட்சி ---அடியே
தினமும் உனது ஆட்சி
அள்ளிக் கொடுக்க வாராய் ---எனக்கு
ஆசை முத்தம் நீ தாராய்
சொல்லிக் கொடுப்பது நீயல்லவா ---அந்த
சொர்க்கம் நீ தரும் வரமல்லவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக