ஆயர் பாடிக் கண்ணனே ---தூய
அன்பு கொண்ட மன்னனே
வாயினில் உலகினைக் காட்டினாய் ---உன்
வல்லமையால் உயிர்களைக் காக்கிறாய்
வெண்ணெய் திருடித் தின்றவா ---தினம்
வேடிக்கை நிறையச் செய்தவா
அன்னை யசோதை மடியிலே ---எங்கள்
அன்புக் கண்ணனே சிரிக்கிறாய்
காளிங்க நர்த்தனம் ஆடினாய் ---கொடிய
கம்சனையும் வதம் செய்து முடித்தனை
பாற் கடல் தன்னில் உறங்கினை ---உன்
பக்கத்தில் திருமகள் இருந்தனள் --
பார்த்தனுக்கு சாரதி யாகினாய் ---பெரும்
பாரதப் போர்தனை முடித்தனை
பார்த்திடும் கண்களுக்கோ எளியவன் ---ஆனால்
பகைவரை அழிப்பதில் வலியவன்
கண்ணனின் பேரைச் சொல்லுவோம் ---வரும்
கவலைகள் எல்லாவையும் வெல்லுவோம்
மன்னவன் புகழினைப் பாடுவோம் --அவரை
மனதில் நினைத்து மகிழுவோம்
(23-08-2019 வெள்ளிக் கிழமை கோகுலாஷ்டமி தினம் )
அன்பு கொண்ட மன்னனே
வாயினில் உலகினைக் காட்டினாய் ---உன்
வல்லமையால் உயிர்களைக் காக்கிறாய்
வெண்ணெய் திருடித் தின்றவா ---தினம்
வேடிக்கை நிறையச் செய்தவா
அன்னை யசோதை மடியிலே ---எங்கள்
அன்புக் கண்ணனே சிரிக்கிறாய்
காளிங்க நர்த்தனம் ஆடினாய் ---கொடிய
கம்சனையும் வதம் செய்து முடித்தனை
பாற் கடல் தன்னில் உறங்கினை ---உன்
பக்கத்தில் திருமகள் இருந்தனள் --
பார்த்தனுக்கு சாரதி யாகினாய் ---பெரும்
பாரதப் போர்தனை முடித்தனை
பார்த்திடும் கண்களுக்கோ எளியவன் ---ஆனால்
பகைவரை அழிப்பதில் வலியவன்
கண்ணனின் பேரைச் சொல்லுவோம் ---வரும்
கவலைகள் எல்லாவையும் வெல்லுவோம்
மன்னவன் புகழினைப் பாடுவோம் --அவரை
மனதில் நினைத்து மகிழுவோம்
(23-08-2019 வெள்ளிக் கிழமை கோகுலாஷ்டமி தினம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக