சனி, 24 ஆகஸ்ட், 2019

சாரதி 7 6 6

ஆயர்   பாடிக்         கண்ணனே  ---தூய
அன்பு      கொண்ட     மன்னனே
வாயினில்     உலகினைக்    காட்டினாய்   ---உன்
வல்லமையால்     உயிர்களைக்     காக்கிறாய்

வெண்ணெய்     திருடித்      தின்றவா    ---தினம்
வேடிக்கை       நிறையச்     செய்தவா
அன்னை      யசோதை     மடியிலே  ---எங்கள்
அன்புக்       கண்ணனே     சிரிக்கிறாய்

காளிங்க      நர்த்தனம்      ஆடினாய்  ---கொடிய
கம்சனையும்    வதம்  செய்து     முடித்தனை
பாற் கடல்   தன்னில்     உறங்கினை    ---உன்
பக்கத்தில்    திருமகள்    இருந்தனள் --

பார்த்தனுக்கு      சாரதி      யாகினாய்   ---பெரும்
பாரதப்       போர்தனை      முடித்தனை
பார்த்திடும்     கண்களுக்கோ     எளியவன்   ---ஆனால்
பகைவரை      அழிப்பதில்       வலியவன்

கண்ணனின்    பேரைச்      சொல்லுவோம்   ---வரும்
கவலைகள்     எல்லாவையும்     வெல்லுவோம்
மன்னவன்       புகழினைப்        பாடுவோம்    --அவரை
மனதில்        நினைத்து       மகிழுவோம்

(23-08-2019   வெள்ளிக்  கிழமை     கோகுலாஷ்டமி      தினம் )



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக