ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

நெஞ்சம் 7 4 9

கண்ணில்          உன்னைக்       காவல்     வைத்தேன்   ---உன்னை 
காலை       மாலை       பூசை        செய்தேன் 
என்னில்      பாதி      உனக்கே     என்றேன்    ---நீ 
எனோ       வெறுத்தாய்     இந்த நாளில் 

சொத்து       சுகம்       கேட்கவில்லை     ---நான் 
சொந்த      பந்தம்      பார்க்கவில்லை 
பித்தம்      உன்னால்     வந்ததம்மா    ---இந்த 
பேதை       மனம்       வாடுதம்மா 

நிலவு       வரும்   வேளை  தனிலே    ---என் 
நெஞ்சம்     வெம்பிப்     போகுதம்மா 
உலவி வரும்     காற்றைக்     கூட ---உனக்கு 
தூது      சொல்லி    அனுப்பட்டுமா 

கண்களில்      நீர்     அருவியாச்சு    ---உனது 
கடைக்கண்     தானே   எனது     மூச்சு 
பெண்களில்     நீயோ    தேவதை    ---எனோ 
பிரிவு       என்பது      சித்ர வதை 

மனம்        இருந்தால்      வந்து  விடு   ---இந்த 
மனிதனையு ம்       நன்கு     வாழவிடு 
பணம்   தானே      பெரிது     என்றால்   ---இனி 
பார்க்காதே     என்னை  நீ     மறந்துவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக