கண்ணில் உன்னைக் காவல் வைத்தேன் ---உன்னை
காலை மாலை பூசை செய்தேன்
என்னில் பாதி உனக்கே என்றேன் ---நீ
எனோ வெறுத்தாய் இந்த நாளில்
சொத்து சுகம் கேட்கவில்லை ---நான்
சொந்த பந்தம் பார்க்கவில்லை
பித்தம் உன்னால் வந்ததம்மா ---இந்த
பேதை மனம் வாடுதம்மா
நிலவு வரும் வேளை தனிலே ---என்
நெஞ்சம் வெம்பிப் போகுதம்மா
உலவி வரும் காற்றைக் கூட ---உனக்கு
தூது சொல்லி அனுப்பட்டுமா
கண்களில் நீர் அருவியாச்சு ---உனது
கடைக்கண் தானே எனது மூச்சு
பெண்களில் நீயோ தேவதை ---எனோ
பிரிவு என்பது சித்ர வதை
மனம் இருந்தால் வந்து விடு ---இந்த
மனிதனையு ம் நன்கு வாழவிடு
பணம் தானே பெரிது என்றால் ---இனி
பார்க்காதே என்னை நீ மறந்துவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக