நிலவாக அவள் வந்ததா ---இல்லை
அவள் நினைவாலே நான் நொந்ததா
உலாவரும் மெல்லிய பூங்காற்றே ---நீ
உண்மை என்னவென்று சொல்லு
குளிர் நீரைப் போலாவாள் ---எனோ
கொதி நீரினைப் போலானாள்
தளிர் போன்ற பொன்னுடலை ---நான்
தாவியே அணைத்திட வேண்டும்
இசைவாக நடந்தாலே இன்பம் ---அதுவே
ஏதுக்கு மாறானால் எந்நாளும் துன்பம்
வசை பாடி தினமென்னை வறுப்பாள் ---இந்த
வழக்கிலே வெற்றியை நானென்று காண்பேன்
திருநாளும் எனக்காக வேண்டும் ---அந்த
தேவியின் துணையாக நானாக வேண்டும்
பெருவாழ்வு நானும் வாழ்ந்திட வேண்டும் ---என்
பிரியசகி உன்னுடன் பேறு பல வேண்டும்
காத்திட வேண்டி எங்கண்ணனை அழைப்பேன் ---அவர்
காலடி வணங்கி நல்வாழ்த்துக்கள் பெறுவேன்
பூத்திடும் வாழ்வுக்கு புன்னகையே சாட்சி ---இந்த
பு வனம் முழுவதும் கண்ணனின் ஆட்சி
அவள் நினைவாலே நான் நொந்ததா
உலாவரும் மெல்லிய பூங்காற்றே ---நீ
உண்மை என்னவென்று சொல்லு
குளிர் நீரைப் போலாவாள் ---எனோ
கொதி நீரினைப் போலானாள்
தளிர் போன்ற பொன்னுடலை ---நான்
தாவியே அணைத்திட வேண்டும்
இசைவாக நடந்தாலே இன்பம் ---அதுவே
ஏதுக்கு மாறானால் எந்நாளும் துன்பம்
வசை பாடி தினமென்னை வறுப்பாள் ---இந்த
வழக்கிலே வெற்றியை நானென்று காண்பேன்
திருநாளும் எனக்காக வேண்டும் ---அந்த
தேவியின் துணையாக நானாக வேண்டும்
பெருவாழ்வு நானும் வாழ்ந்திட வேண்டும் ---என்
பிரியசகி உன்னுடன் பேறு பல வேண்டும்
காத்திட வேண்டி எங்கண்ணனை அழைப்பேன் ---அவர்
காலடி வணங்கி நல்வாழ்த்துக்கள் பெறுவேன்
பூத்திடும் வாழ்வுக்கு புன்னகையே சாட்சி ---இந்த
பு வனம் முழுவதும் கண்ணனின் ஆட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக