வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

பிரிய சகி 7 5 7

நிலவாக          அவள்        வந்ததா   ---இல்லை
அவள்       நினைவாலே      நான்     நொந்ததா
உலாவரும்    மெல்லிய    பூங்காற்றே    ---நீ
உண்மை      என்னவென்று     சொல்லு

குளிர்        நீரைப்      போலாவாள்   ---எனோ
கொதி     நீரினைப்     போலானாள்
தளிர்       போன்ற     பொன்னுடலை  ---நான்
தாவியே     அணைத்திட     வேண்டும்

இசைவாக     நடந்தாலே      இன்பம்  ---அதுவே
ஏதுக்கு        மாறானால்      எந்நாளும்    துன்பம்
வசை பாடி      தினமென்னை    வறுப்பாள்  ---இந்த
வழக்கிலே    வெற்றியை    நானென்று  காண்பேன்

திருநாளும்      எனக்காக      வேண்டும்   ---அந்த
தேவியின்     துணையாக     நானாக   வேண்டும்
பெருவாழ்வு     நானும்    வாழ்ந்திட    வேண்டும்   ---என்
பிரியசகி     உன்னுடன்     பேறு பல     வேண்டும்

காத்திட       வேண்டி      எங்கண்ணனை    அழைப்பேன்  ---அவர்
காலடி      வணங்கி     நல்வாழ்த்துக்கள்   பெறுவேன்
பூத்திடும்     வாழ்வுக்கு    புன்னகையே     சாட்சி   ---இந்த
பு வனம்      முழுவதும்      கண்ணனின்     ஆட்சி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக