கண்ணான கண்ணன் வந்தார் ---தன
கரங்களால் ஏந்திக் கொண்டார்
அந்நாளில் அவர் தோளில் ---தோழி
சொல்ல ஆனந்தம் எந்நாளும் வாழி
பின்னாலே இடையைத் தொட்டார் ---நான்
பேதமை எண்ணம் விட்டேன்
கண்ணாலே கதைகள் சொன்னார் ---தோழி
கண்ணாளன் புகழ் என்றும் வாழி
இரவோடு உறவும் தந்தார் ---என்னையே
அவர்க்கு அன்பாய்த் தந்தேன்
மறவாமல் இங்கு வருவாரோ தோழி --என்
மணவாளன் பெயர் என்றும் வாழி
முத்தான முத்தம் தந்தார் ---நானோ
முழுதாக அவர்க்குத் தந்தேன்
அத்தான் என்று அழைக்கலாமா --தோழி
அன்பான காதலர் என்றும் வாழி
வாவென்று அணைத்துக் கொண்டார் ---எனக்கு
வற்றாத இன்பம் தந்தார்
நானென்று என்னை ஆண்டார் ---தோழி
நாயகன் புகழ் என்றுமே வாழி
முத்தான முத்தம் தந்தார் ---நானோ
முழுதாக என்னையே தந்தேன்
அத்தானென
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக