காய்ந்து போய் நின்றேன் ----அவள்
கனியாக கண் எதிரில் வந்தாள்
பூங்குழல் அழகி பொன் நிற செல்வி ---இந்த
புவியினை அழித்திட புறப்பட்ட புயலோ
பல்லினைக் காட்டிட பரவசம் ஊறும் ----அவள்
பாதங்கள் கண்டால் பனிமலை உருகும்
சொல்லினில் அடங்கா த சொர்க்கம் என்பேன் ---இந்த
சுந்தரி எனக்கு நிறைவான சுகம் அருள்வாளா
இருப்பதைக் கேட்டிட இல்லையே என்றாள் ---அதனால்
இருவிழி கள் கண்ணீர் எந்நாளும் சொரியும்
விருப்பத்தை அறிந்ததால் வெஞ்சினம் கொண்டாள் ---என்னை
விரட்டுவதில் ஏனோ குறியாக நின்றாள்
இளமையில் காதல் எல்லோர்க்கும் கொடிது ---அது
இல்லையேல் மாந்தர்கள் ஏங்கியே போவார்
பழமையில் கூட பால்மணம் உண்டு ---இதனை
பார்த்து அறிந்து புரிந்து பாவை நீயும் தெளிக
இருப்பதைக் கொடுத்தால் எடுத்ததை தருவேன் ---உன்
இதயத்தில் ஓரிடம் எனக்கெனத் தருவாய்
பொறுப்பினை உணர்ந்து புன்னகை புரிவாய் ---இந்த
பூமியில் உன்னிடம் நான் புகலிடம் பெறுவேன்
கனியாக கண் எதிரில் வந்தாள்
பூங்குழல் அழகி பொன் நிற செல்வி ---இந்த
புவியினை அழித்திட புறப்பட்ட புயலோ
பல்லினைக் காட்டிட பரவசம் ஊறும் ----அவள்
பாதங்கள் கண்டால் பனிமலை உருகும்
சொல்லினில் அடங்கா த சொர்க்கம் என்பேன் ---இந்த
சுந்தரி எனக்கு நிறைவான சுகம் அருள்வாளா
இருப்பதைக் கேட்டிட இல்லையே என்றாள் ---அதனால்
இருவிழி கள் கண்ணீர் எந்நாளும் சொரியும்
விருப்பத்தை அறிந்ததால் வெஞ்சினம் கொண்டாள் ---என்னை
விரட்டுவதில் ஏனோ குறியாக நின்றாள்
இளமையில் காதல் எல்லோர்க்கும் கொடிது ---அது
இல்லையேல் மாந்தர்கள் ஏங்கியே போவார்
பழமையில் கூட பால்மணம் உண்டு ---இதனை
பார்த்து அறிந்து புரிந்து பாவை நீயும் தெளிக
இருப்பதைக் கொடுத்தால் எடுத்ததை தருவேன் ---உன்
இதயத்தில் ஓரிடம் எனக்கெனத் தருவாய்
பொறுப்பினை உணர்ந்து புன்னகை புரிவாய் ---இந்த
பூமியில் உன்னிடம் நான் புகலிடம் பெறுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக