சனி, 17 ஆகஸ்ட், 2019

புகலிடம் 7 5 8

காய்ந்து        போய்        நின்றேன்   ----அவள்
கனியாக     கண்  எதிரில்    வந்தாள்
பூங்குழல்     அழகி   பொன் நிற     செல்வி   ---இந்த
புவியினை    அழித்திட    புறப்பட்ட     புயலோ

பல்லினைக்     காட்டிட    பரவசம்      ஊறும்   ----அவள்
பாதங்கள்       கண்டால்      பனிமலை    உருகும்
சொல்லினில்     அடங்கா த    சொர்க்கம்    என்பேன்   ---இந்த
சுந்தரி     எனக்கு     நிறைவான    சுகம்    அருள்வாளா 

இருப்பதைக்     கேட்டிட     இல்லையே     என்றாள்  ---அதனால்
இருவிழி கள்    கண்ணீர்    எந்நாளும்       சொரியும்
விருப்பத்தை     அறிந்ததால்   வெஞ்சினம்    கொண்டாள்  ---என்னை
விரட்டுவதில்      ஏனோ      குறியாக       நின்றாள்

இளமையில்       காதல்      எல்லோர்க்கும்      கொடிது   ---அது
இல்லையேல்    மாந்தர்கள்      ஏங்கியே      போவார்
பழமையில்       கூட       பால்மணம்     உண்டு   ---இதனை
பார்த்து   அறிந்து      புரிந்து      பாவை    நீயும்     தெளிக

இருப்பதைக்       கொடுத்தால்    எடுத்ததை     தருவேன்   ---உன்
இதயத்தில்      ஓரிடம்      எனக்கெனத்     தருவாய் 
பொறுப்பினை     உணர்ந்து      புன்னகை     புரிவாய்  ---இந்த
பூமியில்      உன்னிடம்     நான்      புகலிடம்     பெறுவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக