அன்பினால் உலகை ஆள்வதற்கு ---நம்
அன்னை காவிரி புறப்பட்டாள்
தென்னகம் வாழ்வில் சிறந்திடவே ---இந்த
தெய்வ மங்கை வெளிப்பட்டாள்
குறுகி வளைந்து குதிக்கின்றாள் ---சிறு
குமரி போல் சிரிக்கின்றாள்
அருவியாய்ப் பொங்கி வழிகின்றாள் ---நாம்
அருகினில் வந்திட அழைக்கின்றாள்
மண்ணைப் பொன்னாய் மாற்றுகிறாள் ---பெரும்
மகசூல் அள்ளித் தருகின்றாள்
கண்களைப் போன்றவள் காவிரியே ---அவள்
கருணையில் வாழ்வது நம்குலமே
உழவர் கண்களில் தாயாவாள் ---தமிழர்
உள்ளங்களில் என்றும் சேயாவாள்
புலவர் பாடிடும் பொருளாவாள் ---இந்த
புவனம் காக்கும் அருளாவாள்
நதிகள் எல்லாம் பொது உடமை ---அவளை
நன்றாய்ப் புரிந்திடல் நம்கடமை
சதிகள் செய்வது சரியில்லை ---இதனை
சகலரும் உணர்ந்தால் பகையில்லை
அன்னை காவிரி புறப்பட்டாள்
தென்னகம் வாழ்வில் சிறந்திடவே ---இந்த
தெய்வ மங்கை வெளிப்பட்டாள்
குறுகி வளைந்து குதிக்கின்றாள் ---சிறு
குமரி போல் சிரிக்கின்றாள்
அருவியாய்ப் பொங்கி வழிகின்றாள் ---நாம்
அருகினில் வந்திட அழைக்கின்றாள்
மண்ணைப் பொன்னாய் மாற்றுகிறாள் ---பெரும்
மகசூல் அள்ளித் தருகின்றாள்
கண்களைப் போன்றவள் காவிரியே ---அவள்
கருணையில் வாழ்வது நம்குலமே
உழவர் கண்களில் தாயாவாள் ---தமிழர்
உள்ளங்களில் என்றும் சேயாவாள்
புலவர் பாடிடும் பொருளாவாள் ---இந்த
புவனம் காக்கும் அருளாவாள்
நதிகள் எல்லாம் பொது உடமை ---அவளை
நன்றாய்ப் புரிந்திடல் நம்கடமை
சதிகள் செய்வது சரியில்லை ---இதனை
சகலரும் உணர்ந்தால் பகையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக