திங்கள், 19 ஆகஸ்ட், 2019

சிங்கங்களே 7 6 3

செந்தமிழ்     நாட்டுச்      சிறுவர்களே    ---இங்கு
சீறிப்        பாய்ந்திடும்     சிங்கங்களே
ஒன்றென    எங்கிலும்     கூடுவீர்   ---இந்தியா
உயர்க       வென்றே      பாடுவீர்
நாடு      என்பது      நம்    வீடு  ---அது
நலம்   பெற    வேண்டி     நீ பாடு
ஏடுகள்    சொல்வதும்     இதையே   ---எண்ணி
உழைத்திடில்    மாறிடும்     கதையே
காலையில்     சீக்கிரம்      எழுவாய்    ---பின்
கடமையாய்    பள்ளிக்குச்    செல்வாய்
மாலையில்     கொஞ்சம்     விளையாட்டு  ---இதை
மனசில்      வைக்கணும்     தலையாட்டு
சோம்பல்      என்பது    கூடாது    ---அது
சுகத்தை     அழிக்கும்     பொல்லாது
நாமிங்கு      ஒன்றாய்ப்    பாடுபட்டால்   --நம்
நாடு       உயர்ந்திடும்       அறிவாயோ
பெண்களைத்    தாயென    மதித்துவிடு   ---அவர்
பெருமையாய்     உலகினில்     வாழவிடு
கண்களைப்     போலப்      போற்றிவிடு   ---உனக்கு
கடமைகள்     இருப்பதைப்     புரிந்துவிடு
இந்தியனாக      என்றும்    வாழ்ந்துவிடு  ---உழைக்கும்
ஏழைக்கும்       முடிந்தால்     வாழ்வு கொடு
சுதந்திரம்       என்பதைக்     காத்துவிடு   ---உன்னை
சூழ்ந்திடும்      வெற்றிகள்     மகிழ்ந்துவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக