செந்தமிழ் நாட்டுச் சிறுவர்களே ---இங்கு
சீறிப் பாய்ந்திடும் சிங்கங்களே
ஒன்றென எங்கிலும் கூடுவீர் ---இந்தியா
உயர்க வென்றே பாடுவீர்
நாடு என்பது நம் வீடு ---அது
நலம் பெற வேண்டி நீ பாடு
ஏடுகள் சொல்வதும் இதையே ---எண்ணி
உழைத்திடில் மாறிடும் கதையே
காலையில் சீக்கிரம் எழுவாய் ---பின்
கடமையாய் பள்ளிக்குச் செல்வாய்
மாலையில் கொஞ்சம் விளையாட்டு ---இதை
மனசில் வைக்கணும் தலையாட்டு
சோம்பல் என்பது கூடாது ---அது
சுகத்தை அழிக்கும் பொல்லாது
நாமிங்கு ஒன்றாய்ப் பாடுபட்டால் --நம்
நாடு உயர்ந்திடும் அறிவாயோ
பெண்களைத் தாயென மதித்துவிடு ---அவர்
பெருமையாய் உலகினில் வாழவிடு
கண்களைப் போலப் போற்றிவிடு ---உனக்கு
கடமைகள் இருப்பதைப் புரிந்துவிடு
இந்தியனாக என்றும் வாழ்ந்துவிடு ---உழைக்கும்
ஏழைக்கும் முடிந்தால் வாழ்வு கொடு
சுதந்திரம் என்பதைக் காத்துவிடு ---உன்னை
சூழ்ந்திடும் வெற்றிகள் மகிழ்ந்துவிடு
சீறிப் பாய்ந்திடும் சிங்கங்களே
ஒன்றென எங்கிலும் கூடுவீர் ---இந்தியா
உயர்க வென்றே பாடுவீர்
நாடு என்பது நம் வீடு ---அது
நலம் பெற வேண்டி நீ பாடு
ஏடுகள் சொல்வதும் இதையே ---எண்ணி
உழைத்திடில் மாறிடும் கதையே
காலையில் சீக்கிரம் எழுவாய் ---பின்
கடமையாய் பள்ளிக்குச் செல்வாய்
மாலையில் கொஞ்சம் விளையாட்டு ---இதை
மனசில் வைக்கணும் தலையாட்டு
சோம்பல் என்பது கூடாது ---அது
சுகத்தை அழிக்கும் பொல்லாது
நாமிங்கு ஒன்றாய்ப் பாடுபட்டால் --நம்
நாடு உயர்ந்திடும் அறிவாயோ
பெண்களைத் தாயென மதித்துவிடு ---அவர்
பெருமையாய் உலகினில் வாழவிடு
கண்களைப் போலப் போற்றிவிடு ---உனக்கு
கடமைகள் இருப்பதைப் புரிந்துவிடு
இந்தியனாக என்றும் வாழ்ந்துவிடு ---உழைக்கும்
ஏழைக்கும் முடிந்தால் வாழ்வு கொடு
சுதந்திரம் என்பதைக் காத்துவிடு ---உன்னை
சூழ்ந்திடும் வெற்றிகள் மகிழ்ந்துவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக