முன்னாலே நடந்பாரம்மா தது நியாயமா ---என்
மோகினியே நீ போடும் வேசமா
பின்னாலே அலையுறேனே தெரியுமா ---நானும்
பித்தாகிப் போனதுவும் புரியுமா
கண்ணாலம் கட்டிக்கொள்ள ஆசையா ---என்
கண்ணாட்டி உனக்குத் தினம் பூசையே
உண்ணாமல் தவிக்கிறேனே பாரம்மா --நீயும்
உகந்த பதில் நல்லபடி கூறம்மா
கண்ணாடி போன்ற எந்தன் மனசிலே ---நல்ல
கச்சிதமாய்ப் பதிந்தது உன் உருவமே
பொன்னாலே செய்து வைத்த வீட்டிலே ---நல்ல
பொறுப்போடு வாழ்ந்திடுவாய் என் கூட்டிலே
கண்ணாலே என்னைக் கொஞ்சம் நீ பாரம்மா ---உன்னை
காலமெல்லாம் வாழ வைப்பேன் கேளம்மா
சொன்னாலே நம்பிவிடு எந்தன் தோழியே ---உனது
தோளினில் சாய வேண்டும் சில நாழியே
தேனோடு பாலாகும் நமது திருமணம் ---அது
தினம்தோறும் வீசிடுமே புதிய நறுமணம்
ஊனோடு உயிராக ஒன்று கலக்கலாம் ---நாமும்
ஒற்றுமையாய்ப் பலகாலம் உலகில் வாழலாம்
மோகினியே நீ போடும் வேசமா
பின்னாலே அலையுறேனே தெரியுமா ---நானும்
பித்தாகிப் போனதுவும் புரியுமா
கண்ணாலம் கட்டிக்கொள்ள ஆசையா ---என்
கண்ணாட்டி உனக்குத் தினம் பூசையே
உண்ணாமல் தவிக்கிறேனே பாரம்மா --நீயும்
உகந்த பதில் நல்லபடி கூறம்மா
கண்ணாடி போன்ற எந்தன் மனசிலே ---நல்ல
கச்சிதமாய்ப் பதிந்தது உன் உருவமே
பொன்னாலே செய்து வைத்த வீட்டிலே ---நல்ல
பொறுப்போடு வாழ்ந்திடுவாய் என் கூட்டிலே
கண்ணாலே என்னைக் கொஞ்சம் நீ பாரம்மா ---உன்னை
காலமெல்லாம் வாழ வைப்பேன் கேளம்மா
சொன்னாலே நம்பிவிடு எந்தன் தோழியே ---உனது
தோளினில் சாய வேண்டும் சில நாழியே
தேனோடு பாலாகும் நமது திருமணம் ---அது
தினம்தோறும் வீசிடுமே புதிய நறுமணம்
ஊனோடு உயிராக ஒன்று கலக்கலாம் ---நாமும்
ஒற்றுமையாய்ப் பலகாலம் உலகில் வாழலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக