செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ராதே 7 4 3

மனமெச் னும்      கோவிலிலே     ராதே   --நான்
மகிழ்வுடன்    தினம்     பூசை   செய்வேன்
கனவிலும்      உன்னை     மறவேன்    ---ராதே
கண்மணி        நீயன்றோ    ராதே

கள்ள       சிரிப்பினிலே     ராதே    ---நீயெனை
கவர்ந்து     இழுத்து    வைத்தாயே
அள்ளி      அணைத்திடவோ      ஆசை  --ராதே
அருகினில்     வருவாயோ      ராதே

சின்னம்      சிறு      வயதில்    ---ராதே
சேர்ந்து      அலைந்து     திரிவோமே
எண்ணம்      வரவில்லையோ ராதே  ---இந்த
ஏழைக்கும்     அருள்     செய்ய    வா

மாடி    மனை      சொந்தமில்லை   --எனக்கு
மக்கள்      சொந்தம்     யாருமில்லை
தேடிஉன்னை      சரண்     அடைந்தேன்   ---ராதே
தெருவில்       விட்டுப்      போவாயோ   ராதே

கூட்டை        விட்டுப்       போனாலும்  --இங்கு
கோடி         காலம்       ஆனாலும்
உன்வீட்டை    சுற்றி   வருவேனே  ---ராதே
உன்னையே      மணப்பேன்    ராதே     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக