மனமெச் னும் கோவிலிலே ராதே --நான்
மகிழ்வுடன் தினம் பூசை செய்வேன்
கனவிலும் உன்னை மறவேன் ---ராதே
கண்மணி நீயன்றோ ராதே
கள்ள சிரிப்பினிலே ராதே ---நீயெனை
கவர்ந்து இழுத்து வைத்தாயே
அள்ளி அணைத்திடவோ ஆசை --ராதே
அருகினில் வருவாயோ ராதே
சின்னம் சிறு வயதில் ---ராதே
சேர்ந்து அலைந்து திரிவோமே
எண்ணம் வரவில்லையோ ராதே ---இந்த
ஏழைக்கும் அருள் செய்ய வா
மாடி மனை சொந்தமில்லை --எனக்கு
மக்கள் சொந்தம் யாருமில்லை
தேடிஉன்னை சரண் அடைந்தேன் ---ராதே
தெருவில் விட்டுப் போவாயோ ராதே
கூட்டை விட்டுப் போனாலும் --இங்கு
கோடி காலம் ஆனாலும்
உன்வீட்டை சுற்றி வருவேனே ---ராதே
உன்னையே மணப்பேன் ராதே
மகிழ்வுடன் தினம் பூசை செய்வேன்
கனவிலும் உன்னை மறவேன் ---ராதே
கண்மணி நீயன்றோ ராதே
கள்ள சிரிப்பினிலே ராதே ---நீயெனை
கவர்ந்து இழுத்து வைத்தாயே
அள்ளி அணைத்திடவோ ஆசை --ராதே
அருகினில் வருவாயோ ராதே
சின்னம் சிறு வயதில் ---ராதே
சேர்ந்து அலைந்து திரிவோமே
எண்ணம் வரவில்லையோ ராதே ---இந்த
ஏழைக்கும் அருள் செய்ய வா
மாடி மனை சொந்தமில்லை --எனக்கு
மக்கள் சொந்தம் யாருமில்லை
தேடிஉன்னை சரண் அடைந்தேன் ---ராதே
தெருவில் விட்டுப் போவாயோ ராதே
கூட்டை விட்டுப் போனாலும் --இங்கு
கோடி காலம் ஆனாலும்
உன்வீட்டை சுற்றி வருவேனே ---ராதே
உன்னையே மணப்பேன் ராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக