திங்கள், 5 ஆகஸ்ட், 2019

வாலைக் குமரி 7 4 1

கண்ணில்       உன்னைக்      கண்டேன்    ---காதல்
நெஞ்சில்       இன்று      கொண்டேன்
மண்ணில்     வானம்      கண்டேன்   ---உனை
மணக்க          ஆசை      வைத்தேன்

எண்ண        என்ன       இன்பம்   ---அடி
ஏனோ       என்மேல்      கோபம்
கன்னி      மலரே      வாயேன்   ---எனக்கு 
காதல்       தேனைத்     தாயேன்

சொன்ன     விதமாய்     நடப்பேன்   ---தினம்
சுற்றி      சுற்றியே       கிடப்பேன்
கண்ணைப்      போல    நினைப்பேன்   ---உன்
கடைக்கண்     பார்வையில்    துடிப்பேன்

கால      காலங்கள்      காப்பேன்    ---உன்னை
காவல்      காத்து      மகிழ்வேன்
வாலைக்  குமரியும்      நீதான்   ---எனக்கு
வாழ்த்து       சொல்லேன்     இனிதான்

அன்பு        கொண்டு       வாழ்வோம்   ---பல
ஆசைக்      கனவுகள்        காண்போம்
பண்பில்      சிறந்து       உயர்வோம்   ---நாம்
பலருக்கும்      உதவிகள்     செய்வோம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக