ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ரட்சகன் 7 6 1

கண்        உறங்கும்        நேரத்திலே    ---ஒரு
கன்னி மகள்        வந்தாள்
அன்னம்        போன்ற      நடை   ---அவளோ
ஆட்களைக்     கொல்லும்      படை

கண்களைக்     கட்டியே        விட்டாள்    ---அவள்
காதலை      நெஞ்சில்  கூட்டி    விட்டாள்
பெண்ணிவள்    செய்த      வேலை   ---என்னை
பேதலிக்க        விட்டதால்    தொல்லை

எட்டி       யிவள்      நடக்கையில்    ----இங்கு
இளையோர்    மனதும்    நொறுங்கிடுமே
கட்டியே       அணைக்க  வந்தால்   --அந்த
காமன்    இவளிடம்    மயங்கி    நிற்பான்

வில்லை     வளைத்து     அடித்திட   --என்
விலா       எலும்புகள்     உடைந்தனவே 
பல்லைக்    காட்டி     நின்றேன்   ---அவளோ
பரிதவிக்க     விட்டு     விட்டாள்

சொல்லி      நானும்      அழுதிடவே    ---எனக்கு
சொந்தம்      என்று      ஒன்றுமில்லை
கள்ள ச்      சிறையினிலே    கண்மூடி    வீழ்ந்தேனே   ---என்னை
காத்து      ரட்சிக்க    அந்தக்      கடவுளே     வரவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக