கண் உறங்கும் நேரத்திலே ---ஒரு
கன்னி மகள் வந்தாள்
அன்னம் போன்ற நடை ---அவளோ
ஆட்களைக் கொல்லும் படை
கண்களைக் கட்டியே விட்டாள் ---அவள்
காதலை நெஞ்சில் கூட்டி விட்டாள்
பெண்ணிவள் செய்த வேலை ---என்னை
பேதலிக்க விட்டதால் தொல்லை
எட்டி யிவள் நடக்கையில் ----இங்கு
இளையோர் மனதும் நொறுங்கிடுமே
கட்டியே அணைக்க வந்தால் --அந்த
காமன் இவளிடம் மயங்கி நிற்பான்
வில்லை வளைத்து அடித்திட --என்
விலா எலும்புகள் உடைந்தனவே
பல்லைக் காட்டி நின்றேன் ---அவளோ
பரிதவிக்க விட்டு விட்டாள்
சொல்லி நானும் அழுதிடவே ---எனக்கு
சொந்தம் என்று ஒன்றுமில்லை
கள்ள ச் சிறையினிலே கண்மூடி வீழ்ந்தேனே ---என்னை
காத்து ரட்சிக்க அந்தக் கடவுளே வரவேண்டும்
கன்னி மகள் வந்தாள்
அன்னம் போன்ற நடை ---அவளோ
ஆட்களைக் கொல்லும் படை
கண்களைக் கட்டியே விட்டாள் ---அவள்
காதலை நெஞ்சில் கூட்டி விட்டாள்
பெண்ணிவள் செய்த வேலை ---என்னை
பேதலிக்க விட்டதால் தொல்லை
எட்டி யிவள் நடக்கையில் ----இங்கு
இளையோர் மனதும் நொறுங்கிடுமே
கட்டியே அணைக்க வந்தால் --அந்த
காமன் இவளிடம் மயங்கி நிற்பான்
வில்லை வளைத்து அடித்திட --என்
விலா எலும்புகள் உடைந்தனவே
பல்லைக் காட்டி நின்றேன் ---அவளோ
பரிதவிக்க விட்டு விட்டாள்
சொல்லி நானும் அழுதிடவே ---எனக்கு
சொந்தம் என்று ஒன்றுமில்லை
கள்ள ச் சிறையினிலே கண்மூடி வீழ்ந்தேனே ---என்னை
காத்து ரட்சிக்க அந்தக் கடவுளே வரவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக