புதன், 14 ஆகஸ்ட், 2019

கள்ளன் 7 5 4

காற்றைப்         போல      வந்தாய்   ---இந்த
கன்னி       மலரைக்       கொய்தாய்
தோற்றுப்     போனேன்    நானே    ---உந்தன்
தோளில்       சாய்ந்தேன்   இனிதாய்

கலைகள்      யாவும்      கற்றோம்    ---தினம்
காதலை      நெஞ்சினில்     வளர்த்தோம்
விலைகள்    என்பது     இதற்கு      ஏது    ---என்றும்
விலகிச்       செல்லுதல்     தீது

ஒன்றில்       ஒன்று        என்றேன்    ---நீயோ
உடனே       மழலை      என்றாய்
அன்பு      தந்த       பாடம்    ---என்
அங்கம்      முழுதும்     பரவும்

நீரில்        நீந்தி      மகிழ்வோம்   ---அந்த
நிலவில்     இறங்கி     உலாவுவோம்
ஊர்கள்       தோறும்      போவோம்   ---ஒரு
உன்னத       நிலையை     அடைவோம்

கண்கள்        செய்த       மாயம்   ---என்
கள்ளன்       தந்த       காயம்
இன்னும்       என்ன     சொல்ல    ---நீ
இன்றே       வந்திடு    என்னை அள்ள 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக