காற்றைப் போல வந்தாய் ---இந்த
கன்னி மலரைக் கொய்தாய்
தோற்றுப் போனேன் நானே ---உந்தன்
தோளில் சாய்ந்தேன் இனிதாய்
கலைகள் யாவும் கற்றோம் ---தினம்
காதலை நெஞ்சினில் வளர்த்தோம்
விலைகள் என்பது இதற்கு ஏது ---என்றும்
விலகிச் செல்லுதல் தீது
ஒன்றில் ஒன்று என்றேன் ---நீயோ
உடனே மழலை என்றாய்
அன்பு தந்த பாடம் ---என்
அங்கம் முழுதும் பரவும்
நீரில் நீந்தி மகிழ்வோம் ---அந்த
நிலவில் இறங்கி உலாவுவோம்
ஊர்கள் தோறும் போவோம் ---ஒரு
உன்னத நிலையை அடைவோம்
கண்கள் செய்த மாயம் ---என்
கள்ளன் தந்த காயம்
இன்னும் என்ன சொல்ல ---நீ
இன்றே வந்திடு என்னை அள்ள
கன்னி மலரைக் கொய்தாய்
தோற்றுப் போனேன் நானே ---உந்தன்
தோளில் சாய்ந்தேன் இனிதாய்
கலைகள் யாவும் கற்றோம் ---தினம்
காதலை நெஞ்சினில் வளர்த்தோம்
விலைகள் என்பது இதற்கு ஏது ---என்றும்
விலகிச் செல்லுதல் தீது
ஒன்றில் ஒன்று என்றேன் ---நீயோ
உடனே மழலை என்றாய்
அன்பு தந்த பாடம் ---என்
அங்கம் முழுதும் பரவும்
நீரில் நீந்தி மகிழ்வோம் ---அந்த
நிலவில் இறங்கி உலாவுவோம்
ஊர்கள் தோறும் போவோம் ---ஒரு
உன்னத நிலையை அடைவோம்
கண்கள் செய்த மாயம் ---என்
கள்ளன் தந்த காயம்
இன்னும் என்ன சொல்ல ---நீ
இன்றே வந்திடு என்னை அள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக