இந்தியத் திருநாடு ----இது
நம் இதயத்தின் கூடு
நன்றியைப் பாடு ---அது
நலம் தரும் தேடு
அனைவரும் நமது சொந்தமே ---நாம்
அண்ணன் தம்பி யெனும் பந்தமே
முனைப்புடன் ஒன்றாய் செயலாற்ற ----இங்கே
முடியாது என்பதும் கிடையாதே
மொழி வழி நாமன்று பிரிந்தாலும் ---மன
உணர்வில் நாமென்றும் ஒன்றாவோம்
விழியென நாட்டினைக் காத்திடவே ----இங்கு
வீட்டுக்கு ஒருவரென வரலாமே
சத்திய நெறிவழி நமதாகும் ---என்றும்
சமத்துவம் என்பது உயிராகும்
புத்தன் பிறந்த திரு நாட்டில் ---வீணே
போர்கள் ஏற்பட விடலாமா
ஒன்றென நினைத்து உயர்வாவோம் ---தேச
ஒற்றுமையே நமக்குள் பலமாகும்
என்றும் முதலிடம் பெறலாமே ---நாம்
இந்தியன் என்பதே வரலாறே
( சுதந்திரத் திருநாள் சிறப்புப் பாடல் 15-8-2019 )
நம் இதயத்தின் கூடு
நன்றியைப் பாடு ---அது
நலம் தரும் தேடு
அனைவரும் நமது சொந்தமே ---நாம்
அண்ணன் தம்பி யெனும் பந்தமே
முனைப்புடன் ஒன்றாய் செயலாற்ற ----இங்கே
முடியாது என்பதும் கிடையாதே
மொழி வழி நாமன்று பிரிந்தாலும் ---மன
உணர்வில் நாமென்றும் ஒன்றாவோம்
விழியென நாட்டினைக் காத்திடவே ----இங்கு
வீட்டுக்கு ஒருவரென வரலாமே
சத்திய நெறிவழி நமதாகும் ---என்றும்
சமத்துவம் என்பது உயிராகும்
புத்தன் பிறந்த திரு நாட்டில் ---வீணே
போர்கள் ஏற்பட விடலாமா
ஒன்றென நினைத்து உயர்வாவோம் ---தேச
ஒற்றுமையே நமக்குள் பலமாகும்
என்றும் முதலிடம் பெறலாமே ---நாம்
இந்தியன் என்பதே வரலாறே
( சுதந்திரத் திருநாள் சிறப்புப் பாடல் 15-8-2019 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக