வியாழன், 15 ஆகஸ்ட், 2019

வரலாறு 7 5 6

இந்தியத்      திருநாடு    ----இது
நம்   இதயத்தின்     கூடு
நன்றியைப்       பாடு  ---அது
நலம்      தரும்     தேடு

அனைவரும்      நமது     சொந்தமே   ---நாம்
அண்ணன்     தம்பி    யெனும்    பந்தமே
முனைப்புடன்     ஒன்றாய்     செயலாற்ற    ----இங்கே
முடியாது       என்பதும்      கிடையாதே

மொழி வழி     நாமன்று    பிரிந்தாலும்   ---மன
உணர்வில்      நாமென்றும்   ஒன்றாவோம்
விழியென      நாட்டினைக்   காத்திடவே   ----இங்கு
வீட்டுக்கு      ஒருவரென     வரலாமே

சத்திய       நெறிவழி       நமதாகும்   ---என்றும்
சமத்துவம்      என்பது     உயிராகும்
புத்தன்        பிறந்த     திரு நாட்டில்   ---வீணே
போர்கள்       ஏற்பட      விடலாமா

ஒன்றென       நினைத்து     உயர்வாவோம்   ---தேச
ஒற்றுமையே     நமக்குள்     பலமாகும்
என்றும்        முதலிடம்      பெறலாமே    ---நாம்
இந்தியன்      என்பதே      வரலாறே 

        (    சுதந்திரத்    திருநாள்     சிறப்புப்    பாடல்   15-8-2019  )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக