கண்ணில் வந்தாய் மானே ---உன்
காதல் என்றும் தேனே
பின்னல் போட்டு வளைத்தாய் ---என்னை
பேச விடாது சிறையில் வைத்தாய்
குற்றம் என்ன செய்தேன் ---என்
கொஞ்சும் கிளியே சொல்லு
பற்று வைப்பது பாபமா ---நல்ல
பதிலை எனக்கு சொல்லு நீயம்மா
அழகை அள்ளிக் கொடுத்தானே ---நீயும்
அதனால் பிறரையும் வதைக்கிறாயே
பழ க வந்தாலோ தண்டனை ---அன்பு
பாசம் காட்டினால் நிந்தனை
இரக்கம் என்பது இல்லையே ---உன்
இளமை எவர்க்கும் தொல்லையே
உறக்கம் மறந்தவர் நாங்களே ---இதனை
உணர்ந்து கொள்ளணும் பெண்களே
காதல் உலகினில் வாழுமே ---அது
கால காலமாய் நீளுமே
சாதல் எனக்கு மட்டும் ஏனடி ---புதிய
சரித்திரம் படைப்போம் நாமடி
காதல் என்றும் தேனே
பின்னல் போட்டு வளைத்தாய் ---என்னை
பேச விடாது சிறையில் வைத்தாய்
குற்றம் என்ன செய்தேன் ---என்
கொஞ்சும் கிளியே சொல்லு
பற்று வைப்பது பாபமா ---நல்ல
பதிலை எனக்கு சொல்லு நீயம்மா
அழகை அள்ளிக் கொடுத்தானே ---நீயும்
அதனால் பிறரையும் வதைக்கிறாயே
பழ க வந்தாலோ தண்டனை ---அன்பு
பாசம் காட்டினால் நிந்தனை
இரக்கம் என்பது இல்லையே ---உன்
இளமை எவர்க்கும் தொல்லையே
உறக்கம் மறந்தவர் நாங்களே ---இதனை
உணர்ந்து கொள்ளணும் பெண்களே
காதல் உலகினில் வாழுமே ---அது
கால காலமாய் நீளுமே
சாதல் எனக்கு மட்டும் ஏனடி ---புதிய
சரித்திரம் படைப்போம் நாமடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக