புதன், 14 ஆகஸ்ட், 2019

சரித்திரம் 7 5 5

கண்ணில்        வந்தாய்         மானே    ---உன்
காதல்        என்றும்        தேனே
பின்னல்     போட்டு     வளைத்தாய்   ---என்னை
பேச விடாது     சிறையில்    வைத்தாய்

குற்றம்       என்ன       செய்தேன்    ---என்
கொஞ்சும்     கிளியே     சொல்லு
பற்று       வைப்பது     பாபமா   ---நல்ல
பதிலை     எனக்கு    சொல்லு    நீயம்மா

அழகை      அள்ளிக்      கொடுத்தானே   ---நீயும்
அதனால்      பிறரையும்   வதைக்கிறாயே
பழ க      வந்தாலோ      தண்டனை   ---அன்பு
பாசம்       காட்டினால்    நிந்தனை

இரக்கம்        என்பது      இல்லையே    ---உன்
இளமை       எவர்க்கும்     தொல்லையே
உறக்கம்      மறந்தவர்     நாங்களே   ---இதனை
உணர்ந்து      கொள்ளணும்     பெண்களே

காதல்         உலகினில்      வாழுமே   ---அது
கால        காலமாய்        நீளுமே
சாதல்      எனக்கு  மட்டும்      ஏனடி    ---புதிய
சரித்திரம்       படைப்போம்     நாமடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக