ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

வள்ளல் 737

 கனிந்திடும்        அழகு      அவள்  கண்களில்    தெரிந்தது   --அவளை
கண்டதும்     எனக்குக்      காதல்      வந்தது
நினைந்திடும்     மனதிற்கு    நிம்மதி      தந்தாள்    ---அந்த
நேரிழை        என்னிடம்      போரிட    வந்தாள்

கணைகளை      எடுத்து     கவனமாய்      தொடுத்தால்   --அவளது
காமபாண மோ    எனது      கருத்தைப்      பறித்தது
சிலையென     நின்றதால்      சித்தமும்     போனது    ---அந்த
சீதள  முகத்திலே    சிருங்காரம்     மலர்ந்தது

வாவெனக்     கூப்பிட்டு      வளைத்தன      கரங்கள்    ---அந்த
வஞ்சியின்  உடலில்       எத்தனை      சுரங்கள்
தாவெனக்      கேட்டதால்     தந்தது      அமுதம்    ---நான்
தழுவி      அணைக்கையில்    தாங்குமோ    குமுதம்

பொன்னுலகப்      பாதை      புரிந்தது      அவளால்  ---எனக்கு
புதையலே      கடைத்தது     பூமகள்     வரவால்
கண்மணி      உறவால்     கவிஞனும்     ஆனேன்    ---அவளது
கட்டழகை      சுவைத்தால்     கசந்திடும்    தேனும்

வாழ்வினில்      கிடைத்த      வசந்தம்      என்பேன்  ---எனக்கு
வாரி       வழங்குவதால்    அவளை      வள்ளலாய்    ஏற்பேன்
ஏழு      பிறவிகளில்      எனக்கவள்      வேண்டும்     ---அவளுடன்
இன்பமாய்       வாழ்ந்து      சுகம்     பெற     வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக