கனிந்திடும் அழகு அவள் கண்களில் தெரிந்தது --அவளை
கண்டதும் எனக்குக் காதல் வந்தது
நினைந்திடும் மனதிற்கு நிம்மதி தந்தாள் ---அந்த
நேரிழை என்னிடம் போரிட வந்தாள்
கணைகளை எடுத்து கவனமாய் தொடுத்தால் --அவளது
காமபாண மோ எனது கருத்தைப் பறித்தது
சிலையென நின்றதால் சித்தமும் போனது ---அந்த
சீதள முகத்திலே சிருங்காரம் மலர்ந்தது
வாவெனக் கூப்பிட்டு வளைத்தன கரங்கள் ---அந்த
வஞ்சியின் உடலில் எத்தனை சுரங்கள்
தாவெனக் கேட்டதால் தந்தது அமுதம் ---நான்
தழுவி அணைக்கையில் தாங்குமோ குமுதம்
பொன்னுலகப் பாதை புரிந்தது அவளால் ---எனக்கு
புதையலே கடைத்தது பூமகள் வரவால்
கண்மணி உறவால் கவிஞனும் ஆனேன் ---அவளது
கட்டழகை சுவைத்தால் கசந்திடும் தேனும்
வாழ்வினில் கிடைத்த வசந்தம் என்பேன் ---எனக்கு
வாரி வழங்குவதால் அவளை வள்ளலாய் ஏற்பேன்
ஏழு பிறவிகளில் எனக்கவள் வேண்டும் ---அவளுடன்
இன்பமாய் வாழ்ந்து சுகம் பெற வேண்டும்
கண்டதும் எனக்குக் காதல் வந்தது
நினைந்திடும் மனதிற்கு நிம்மதி தந்தாள் ---அந்த
நேரிழை என்னிடம் போரிட வந்தாள்
கணைகளை எடுத்து கவனமாய் தொடுத்தால் --அவளது
காமபாண மோ எனது கருத்தைப் பறித்தது
சிலையென நின்றதால் சித்தமும் போனது ---அந்த
சீதள முகத்திலே சிருங்காரம் மலர்ந்தது
வாவெனக் கூப்பிட்டு வளைத்தன கரங்கள் ---அந்த
வஞ்சியின் உடலில் எத்தனை சுரங்கள்
தாவெனக் கேட்டதால் தந்தது அமுதம் ---நான்
தழுவி அணைக்கையில் தாங்குமோ குமுதம்
பொன்னுலகப் பாதை புரிந்தது அவளால் ---எனக்கு
புதையலே கடைத்தது பூமகள் வரவால்
கண்மணி உறவால் கவிஞனும் ஆனேன் ---அவளது
கட்டழகை சுவைத்தால் கசந்திடும் தேனும்
வாழ்வினில் கிடைத்த வசந்தம் என்பேன் ---எனக்கு
வாரி வழங்குவதால் அவளை வள்ளலாய் ஏற்பேன்
ஏழு பிறவிகளில் எனக்கவள் வேண்டும் ---அவளுடன்
இன்பமாய் வாழ்ந்து சுகம் பெற வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக