அவன் --- சின்னாளப் பட்டி சேலையைக் கட்டி --நல்ல
சீதனமா நிறைய நகைகளைப் பூட்டி
கண்ணாலம் செய்திடவா கண்ணம்மா ---நீ
கச்சிதமா நல்ல பதிலைச் சொல்லம்மா
அவள் ----அரும்பு மீசை குறும்புக்காரா ---உன்மேல்
ஆசை வச்சேன் நானும் ரொம்ப நாளா
கரும்பு திங்கக் கூலியெனக்கு வேணுமா ---உன்
காதலுக்கு சம்மதம் தான் போதுமா
அவன் ----சொன்ன சேதி எனக்கு சொர்க்கம் ஆச்சு ---வந்த
சோக மெல்லாம் விலகிப் போச்சு
இன்னும் உனக்கு ஏதேனும் வேணுமா ---என்னிடம்
இருக்கு பணம் சேர்த்து வச்சேன் ரொம்ப காலமா
அவள் ----சிக்கனமா செலவு செய்யி ---நாம
செல்வம் இன்னும் சேக்க வோணும்
அக்கறையா பாடுபட்டா அத்தானே ---வீணா
அவஸ்தை யெல்லாம் வாராது மச்சானே
அவன் ---ஆவணியில் கண்ணாலம் செய்வோம் --நமக்கு
அளவாகப் பிள்ளை வேணும்
தாவணியில் கண்டபோது செல்லம்மா --உன்னை
தழுவிப் பிடிக்க ஆசை வச்சேன் நல்லம்மா
அவள் --வேலி போட்டு காவல் செய்யி --- நீ
விடிய விடிய ஆட்டம் போடு -
ஜாலியாகப் பொழுது போகும் மச்சானே ---நம்ம
சரசக் கதை ரொம்ப நீளம் அத்தானே
சீதனமா நிறைய நகைகளைப் பூட்டி
கண்ணாலம் செய்திடவா கண்ணம்மா ---நீ
கச்சிதமா நல்ல பதிலைச் சொல்லம்மா
அவள் ----அரும்பு மீசை குறும்புக்காரா ---உன்மேல்
ஆசை வச்சேன் நானும் ரொம்ப நாளா
கரும்பு திங்கக் கூலியெனக்கு வேணுமா ---உன்
காதலுக்கு சம்மதம் தான் போதுமா
அவன் ----சொன்ன சேதி எனக்கு சொர்க்கம் ஆச்சு ---வந்த
சோக மெல்லாம் விலகிப் போச்சு
இன்னும் உனக்கு ஏதேனும் வேணுமா ---என்னிடம்
இருக்கு பணம் சேர்த்து வச்சேன் ரொம்ப காலமா
அவள் ----சிக்கனமா செலவு செய்யி ---நாம
செல்வம் இன்னும் சேக்க வோணும்
அக்கறையா பாடுபட்டா அத்தானே ---வீணா
அவஸ்தை யெல்லாம் வாராது மச்சானே
அவன் ---ஆவணியில் கண்ணாலம் செய்வோம் --நமக்கு
அளவாகப் பிள்ளை வேணும்
தாவணியில் கண்டபோது செல்லம்மா --உன்னை
தழுவிப் பிடிக்க ஆசை வச்சேன் நல்லம்மா
அவள் --வேலி போட்டு காவல் செய்யி --- நீ
விடிய விடிய ஆட்டம் போடு -
ஜாலியாகப் பொழுது போகும் மச்சானே ---நம்ம
சரசக் கதை ரொம்ப நீளம் அத்தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக