வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பதிவுகள் 7 7 3

அன்பே     அழகியே    ---என்
ஆருயிர்ச்     செல்வியே
என்னை    அணைத்திட   --நீயும்
இன்றே     நெருங்கிடு

காற்றில்      ஏறுவாய்   --பெரும்
கடலிலும்     நீந்துவாய்
பார்க்கும்      இடங்களில்  ---உன்
பதிவுகள்      தெரியுமே

இளமையின்    இலக்கணம்   ---நான்
உன்னிடையினைச்   சுமக்கணும்
புலமை     பெருகனும்    ---உன்னால்
புதுமைகள்     அறியணும்
காதல்      வந்தது   ---அது
உந்தன்    கண்களிலாடுது
மோகச்    சிலையடி    ---நீதான்
முக்தி      அளிப்பவள்
இரவில்     வருபவள்   ---நீ
இளமைக்குப்    பெரும்தீனி
உறவால்     மலர்ச்சியே  ---இனி
உயர்வேன்     வளர்ச்சியில்
வானின்     அமுதம்  நீ  ---என்றும்
வற்றாக்      குமுதம் நீ
தேனின்     சுவையும்    நீ  ---திகட்டா
திருக்குறள்    உரையும்   நீ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக