செவ்வாய், 31 ஜூலை, 2018

சித்தம் 536

வானில்   ஓடிடும்  நிலவு --புதிய
வர்ண       ஜாலம்   காட்டுது
தேனில்    நனைந்த  மலர்கள்  --எதனை
திரும்பிப்  பார்த்துச்  சிரிக்குது

வயலில்  நீந்தும்    தவளைகள்  --வெறும்
வரட்டுக்  கூச்சல்  போடுது
கயல்  எனப்படும்  மீன்களோ --இன்னும்
காதல்  கதைகள்    பேசுது

கண்களை  சிமிட்டும்  வான்சுடர் கள்  --நல்ல
தாளக்    கச்சேரி   நடத்து து
விண்ணில்  உலவும்  மேகங்கள் --பொழு து
விடியும் வரை   காவல்  செய்யுது

காட்டில்  வாழும்  மிருகங்கள் --தங்கள்
காதல்    பாட்டினைத்  துவங்குது
வேட்டை  யாடிடக்   கிளம்புது  --மற்றவை
விலகி   யலறியே    ஓடுது

ஆணும்  பெண்ணும்  இருவரும்  --தமது
ஆவலினைத்   தீர்க்க  இணைந்தனர்
 ஓசைகள்   அடங்கிப்  போனது  --மண்ணில்
  உண்மைகள்   என்றுமே   வெல்லுது ;

இறைவன்  படைத்திட்ட  உலகிலே  --இங்கு
 எத்தனை   எத்தனை    மாற்றங்கள்
 சித்தம்    தெளிவாய்  மாறலாம்  ---மக்கள்
  சிறப்பான   வாழ்வு    வாழலாம்

திங்கள், 30 ஜூலை, 2018

நாயகி 535

 அழகான   பொன   மேனி    கண்டேன்  --அதனை
  அமுதாக  அன்றே   நானள்ளிக்  கொண்டேன்
   குமுத மலர்  போல்  வண்ண  ஏழில்  முகமும் --கோல
   குயில்  போன்ற  இனிமையைத்  கொண்டதும்  அவள்  குரல்

   வாவென்று  கண்களால்  என்னையும்  அழைத்தாள்  --என்
    வாழ்வினில்  அவளையே  நல்  வரமென்று  நினைத்தேன்
    தா வென்று  கைநீட்டி  வந்த  தாபத்தில்   கேட்டேன்  --அந்த
    தையலோ  அவள்  கொண்ட  மையலில்  தழுவியே  நின்றாள்

    ஈரெட்டு  வயதுள்ள  இளமையின்  உருவம் --அவளது
    இளமையால்  எவரையும்  இழுக்கின்ற   பருவம்
    போரிட்டுப்  பல பேரை  புழுதியில்   சாய்த்தாள்  --மாய
    புன்னகையில்  அவளென்னைப்  புரட்டியே  போட்டாள்

    இரவோடு  உறவாடி  எந்நாளும்  கழியும்  --என்
    இளமைக்கு  விருந்தாக  அவளால் தான் முடியும்
    உறவுக்கு   சாட்சியென   உன்னதம்  கொடுத்தாள்  --எனது
    உயிருக்கு  உயிராக   வாழ்வினில்  உத்தமி  வந்தாள்

    ஒன்றாகி  இரண்டாகி  பின்  மூன்றாக  ஆவோம்  --இந்த
    உலகத்தில்  நன்றாக  உயர்வினில்   வாழ்வோம்
    நன்றியினை  மறவாத  நல் லெண்ணம்  வேண்டும் --அந்த
    நாயகி  யருள்  புரிய  நமக்கு  நலமென்றும்  கூடும்   

ஞாயிறு, 29 ஜூலை, 2018

அருளால் 534

 நாளும்   நல்ல   நாளே  --பல
 நலங்கள்  யாவும்  சூழ்க
 கோளும்  சுகமாய்  இயங்க  --இனிய
 கொற்றம்  எங்கும்  தழைக்க

வாழ்வில்  வளமை  பெறுக --நம்
 வயலில்  பயிர்கள்  செழிக்க
 சூழும்  அமைதி  நிலைக்க -அந்த
 சொர்க்கம்  மண்ணில்  கிடைக்க

பெண்கள்  உரிமை  மலர்க  --அவர்
 பேச்சும்  செயலும்  உயர்க
 கண்கள்  போல   மதிக்க --கொண்ட
 கடமை  பெரிதாய்  நினைக்க

நன்றி  எண்ணம்  மலர்க  --நம்
 நாடு   முதன்மை  பெறுக
 என்றும் இனிமை  கொழிக்க  --அந்த
இயற்கை  மழையைப்  பொழிக

 வாழ்வின்  கடமைகள்  உணர்க  --நன்கு
 வாரிக்   கொடுத்து  மகிழ்க
 ஆழ்ந்த  அறிவு   அடைக --இவை
 அன்னை  அருளால்  கிடைக்க

                                                                                          

சித்திரச் சிலை 533

 கனவோ  நனவோ  கண்கவர்  மாயமோ --இனிய
கற்பனை  உலகின்  அற்புத  நிகழ்வோ
மணமோ  மலரோ    மயனின்  படைப்போ --எங்கும்
மங்கலம்  பொங்கிடும்  தங்க  நிலவோ

சிற்பிகள்  வடித்த   சித்திரச்   சிலையோ  --அவள்
செம்மாங் கனியோ   நல்  செங்கமல  செல்வியோ
கற்றவர்  வணங்கும்   கலைகளின்  தலைவியோ --இங்கு
கண்டவர்  மயங்கும்   கெண்டை  விழியோ

கொண்டை  அழகோ  கொவ்வை  இதழோ --அவளது
தண்டை   ஒலியோ   நம்  தமிழின்  சுவையோ
பண்டை  தமிழரின்  பழம்  பெரும்  சொத்தோ --ஞான
பண்டிதர்   போற்றிடும்  விண்ணவர்  அமுதோ

நீளமுடியால்  இந்த  நிலத்தை   அளப்பவள்  --தனது
கோல விழியினால்  பிறரைக்  கொல்லும்  இயல்பினள்
வாழ  வைத்திட  நல்ல  வல்லமை  கொண்டவள்  --நாம்
வந்தனை  செய்திட   சொந்தமாய்  வருபவள்

இளமையை  வைத்து   பலர்  இதயத்தை  பிளப்பவள்  --காதல்
ஏக்கத்தைக்  கொடுத்து    சிலர்  தூக்கத்தைக்   கெடுப்பவள்
புலவர்கள்   பாடிட   மகிழ்வில்  புன்னகை  புரிபவள் --வீணில்
போரிடும்  உலகினில்   புனிதமாய்  திகழ்பவள்





பள்ளியறை 532

கனவினில்  வந்தவள்   காரிகை  --அவளை
கண்டதும்   மனதிலே   பேரிகை 
துணையென  வந்திடில்  நன்மையே  --எனை
துடித்திட  வைப்பதும்  உண்மையே

அல்லிக்  குளத்தில்  அளவெடுத்தேன்  --அழகினை
ரசித்திட  ஒளிந்து   நின்றேன்
துள்ளித்  துடிக்குது  அவளழகு  --அதனை
தொட்டுச்  சுவைப்பது  தனியழகு

சிரிக்கும்  சப்தமோ  மணியோசை --நான்
தினமும்   பார்த்திடப்  பேராசை
விரித்த  மலர்போல்  பொன்மேனி  --இவளை
விரும்பி  வராதவன்  தவஞானி

கால்களில்  சலங்கை  கலவையிடும்  --உடன்
கண்டவர்   மனமோ  குலவையிடும்
வேலினை  யொத்த  விழியானாள்  --எனோ
விரும்பிய  நான்மட்டும்  பழியானேன்

கன்னி   மீண்டும்  வருவாளா --தூய
காதலை  என்னிடம்  தருவாளா
எண்ணிக்  கலங்கியே  ஏங்குகிறேன்  --அவளை
இதயத்தில்  வைத்துத்  தாங்குகிறேன்

காலம்  எனக்கும்  கை கொடுக்கும்  -அவளது
கருவிழி  என்னையே  வட்டமிடும்
ஞாலம்  என்பது  உள்ளவரை --இங்கு
நாங்கள்  இணைவது  பள்ளியறை  

சனி, 28 ஜூலை, 2018

முத்தம் -531

நீரில்  வாழும்   மீனே -எந்தன்
நெஞ்சில்  இனிக்கும்  தேனே
வேரில்  பழுத்த   பலாவே  --என்றும்
விண்ணில்  உலவும்  நிலவே

காணவே  நினைத்தேன்  தோழி --நம்
காதல்  உலகில்  வாழி
நாணம்  என்னடி  கள்ளி --நல்ல
நாளும்  வருமோ  சொல்லடி

கோடி  காலங்கள்  வாழுவோம் --நாம்
குலவி    இன்பம்  பெறுவோம்
தேடி  வந்திட்ட   செல்வமே -உன்னை
தினமும்  ருசிக்க  நல்ல  வெல்லமே

பொன்னும்  மணியும்  வேண்டாம் --கட்டிய
புடவை   மட்டுமே  போதும்
கண்ணைப்  போலக்  காப்பேன்  --உனை
காதல்  கலையில்   ஜெயிப்பேன்

எங்கே  வந்திடும்  தூக்கம் --அது
இளமை  தந்திடும்  ஏக்கம்
சங்குக்  கழுத்தினில்  முத்தம்  --அடியே
சலிப்பின்றி  தருவேன்  நித்தம்

சற்றே  திரும்பி  நீ   பாராய் --உனக்கு
சகலமும்  தருவேன்  வாராய்
உற்ற  துணைவன்  நானே  --இனி
ஓடியே   வருவாய்   மானே 


வெள்ளி, 27 ஜூலை, 2018

தேன் நிலா 530

 அவள் ;;வானிலே   தேன்  நிலா   வந்ததே  -நம்         
                  வாழ்வினில்  சுகமதுவும்  தந்ததே

 அவன் ;;வீணிலே  பேசுதல்  நியாயமா --வரும்
                  விரகத்தில்   தவிப்பதும்  பாபமா

 அவள் ;;கண்ணிலே  கண்டதைச்  சொல்வதா --இல்லை
                 காமமும்   உன் கண்களை  மறைக்குதா

 அவன் ;;கண்ணடி     நீயுமென்னைக்  கொல்லாதே  --என்
                 காதலைத்   தள்ளியே  நீ  செல்லாதே

 அவள் ;;ஊரிலே   சொல்வது   புரியுதா --நீ
                 உழைத்திட  வேண்டும்  தெரியுதா

 அவன் ;;கண்ணிலே  காதலைக்  காட்டுறே  --எனோ
                  கசப்பாக  என்னிடம்  பேசறே

அவள் ;;பொறுப்பு  என்பது  விளங்குமா --உனக்கு
                 புத்தி      சொன்னாலே  கசக்குதா

அவன் ;;வாழ்வுக்கு  நீதானே   தேனடி --உன்னை
                  வச்சுக்   காத்திடுவேன்  நானடி

 அவள் ;;வாயடி   கையடி   இங்கு  ஆகுமா --அது
                  வயித்துக்கு  சோறும்  போடுமா

அவன் ;;;சொல்வதைக்  கேட்டு நான்   நடக்கிறேன் --புதிய
                   சொர்க்கத்தை  உனக்கும்  காட்டுறேன்

அவள் ;; வேலையை  தேடிக்கோ  விரைவிலே --உனக்கு
                  விடிய  விடிய  விருந்து தான்   வீட்டிலே

அவன் ;;வேலைக்கு  இன்றே நானும்   போகிறேன் --நீயும்
                  விரும்பும்படி    எந்நாளும்   நடக்கிறேன்  

பொன்மணி 529

வாழ்வினில்   காதல்  வருமா --நல்
வசந்தமும்   அதிலே  வருமா
சூழ்ந்தது   என்னமோ  சோகம் --என்
சுந்தரி   உன்மேலே   மோகம்

இரவில்  எழுந்து   சிரிப்பேன்  --உன்னை
இருகரம்  கொண்டு   அணைப்பேன்
துறவெனும்  நிலையினைத்  துறந்தேன்  --உனது
துடியிடை   கண்டு நான்  துடித்தேன்

வளைக்கரத்தால்  எந்தனை   வளைத்தாய் --உன்
வாலிப   அழகினால்   மலைத்தேன்
கலைஎழில்  பருவம்  காட்டினாய்  --என்
கண்களில்   தீயினை  ஏன்  மூட்டினாய்

சிரித்து   சிரித்துமே   என்னைக்  கெடுத்தாய்  --என்
சிந்தனை   முழுவதும்   நிறைந்தாய்
பிரித்துப்  பார்த்திடத்  தெரியலே  --வந்த
பித்தமும்   எனக்கின்னும்  தீரல்லே

வாழ்ந்திட  வந்திடு   என் கண்மணி --நல்ல
வாழ்வுக்கு  உயிரான  அன்புப்  பொன்மணி 
சூழ்ந்திடும்  பொழுதும்  இன்பமே  --எந்தன்
சொர்க்கமே  உன்னிடம்  நானும்  தஞ்சமே

ஓருடல்  ஈருயிர்  என்றெனக்  காணுவோம் --நம்
உன்னதக்   காதலைப்  போற்றுவோம்
பேருடன்  பெருமைகள்   சூழலாம் --சிவ
பெருமான்   அருளினால்  வாழலாம்   

வியாழன், 26 ஜூலை, 2018

வசந்த கீதம் 528

 அன்பிலாடும்  மனதிலே  ஒரு  ஆசை  வந்தது --உன்னை
அருகில்  வைத்துப்  பார்த்திடவே   ஆவல்  மீறுது
கொம்பில்  ஆடும்  கனியே  கோடைக் கால  நிலவே --என்னை
நம்பி  வாயேன்  பெண்ணே   நானும்  உனக்கு  நண்பனே

நானும்  நீயும்  ஒன்றடி  நமக்குள்  வெட்கம்  ஏனடி --இங்கு
தேனும்  பாலுமா இருக்கலாம்  தேவ லோகம்  போகலாம்
வானில்  வரும்  நிலவிலே  வசந்த கீதம்  பாடலாம்  --நாம்
வாரிக்  கொடுத்து  தேடி யெடுத்து  வள்ளலாக  வாழலாம்

கனவில் வந்த  காட்சியெல்லாம்  கண்ணில் வந்து  மறையுமே  --எந்தன்
கன்னியுந்தன்  இடையை  வளைத்து  காம லோகம்  சேரலாம்
பின்னி வைத்த  சடையில் கூட  பிறை  நிலாவும்  அடங்குமே --இந்த
பேதையைக்  காக்க வந்த  பெண்குலத்தின்  தெய்வமே

சின்ன இடையை  மெல்ல  வளைத்து  சிருங்காரம்  காட்டினாய் --உன்
சீரிளமை  அழகினாலே  என்னை  சிறையில்  வைத்து ப்  பூட்டினாய்
பொன்னே  யுந்தன்  அம்பை  வைத்து  போதை  சுரம்  ஏற்றினாய் --உன்னை
கண்டதாலே  தமிழ்க்  கவிதை  பாடும்  நல்ல  கவிஞனாக  மாற்றினாய்

எண்ண  எண்ண  மனது  இனிக்க   இளமை  கீதம்  பாடுமே --நாம்
இருவர்  என்றும்  ஒருவராக  இல்லற  சுகமும்  கூடுமே
கன்னல்  தமிழே  காலம்  தந்த  அழகு  கண்ணின்  மணியும்  நீயடி --உனை
காட்டியே  யணைத்து  கலந்து  மகிழும்  கள்வனும்  நானடி

ஒருவராக  இருவர்  சேர்ந்து  உரிமை  கீதம்  பாடலாம் --நம்
உள்ளே    உள்ளதென்ன  வென்று  உவகையோடு  தேடலாம்
பெருமையோடு  திறமை  சேர  பெரும்  செல்வம்  கூடலாம் --இனி
பிள்ளை  யொன்று  பிறப்பதாலே   பிறந்த  பயனை  அடையலாம்  

நாடும் நடப்பும் 527

நாட்டுலே   நடப்பும்   சரியில்லே --இதுல
நல்லது  கெட்டது  புரியலே
ஓட்டுக்கு  காசுக  வீசுறான்  --அதனை
உதவாக்கரை  வாங்கித்  திண்ணுறான்

ஊரினை  ஏய்க்கப்   பேசுறான் --ஏழை
உரிமையைத்  தூசென  ஏசுறான்
வேரினில்  விஷத்தினை  ஊத்துறான் --ஏன்
வேதனையைப்  பிறர்க்கு  கொடுக்கிறான்

நல்லவனாக   நன்றாய்  நடிக்கிறான் --கொடிய
நஞ்சினை  அமுதமாய்க்  குடிக்கிறான்
கள்ளமாய்   வெளியிலே  பழகுறான்  --வீணே
கள்ளிச்    செடியென   வளருறான்

ஆசையை  மனசிலே  வளர்க்கிறான்  --தினம்
ஆட்டங்கள்  அதிகமாய்  போடுறான்
காசினையே  தெய்வமாய்  நினைக்கிறான் --வெறும்
கயவனாய்   மண்ணிலே  உலவுறான்

பெண்ணிடம்  கொடுமைகள்  செய்யுறான் --அவரது
பெருமையை  அழித்திடத்  துடிக்கிறான்
மண்ணிற்கு  பாரமாய்  இருக்கிறான் --தன
மனசிலே  நல்லதை  வெறுக்கிறான்  

புதன், 25 ஜூலை, 2018

தோழிகள் 526

 தோழி ;;ஏனடி    என்னடி    காமாட்சி  --உன்னை
                   கண்டு  எத்தனையோ  நாளாச்சு
                    நானும்  நீயும்   ரொம்பவே  தோழியடி நமக்குள்
                   என்றும்  உள்ளது   செல்லக்   கேலியடி

தலைவி ;;;மனசைப்  பொன்னாக  வச்சிருந்தேன் --அடியே       
                    மாத்துக்   குறையாம   வாழ்ந்திருந்தேன்
                     கனவினில்  வந்தான்  இளம்  காளையடி --அவன்
                    காலைவரை  செய்தான்  என்னிடம்  லீலையடி

தோழி ;; என்னடி   சொல்வது     நிசமாடி --நீ
                   எச்சில்  இலையாகப்  போனியாயடி
                   பூனை  குடிச்சிட்ட   பாலாச்சே  --உம
                   பொழப்பும்  கெட்டுப்   பாழாச்சே

தலைவி ;;என்ன   சொல்வது   தெரியவில்லை --அடி
                    இளமை  வேகம்   புரிய வில்லை
                    கண்ணே  என்றவன்  கதை யளந்தான்  --அந்த
                    கவர்ச்சியிலே   நானும்  எனை யிழந்தேன்

  தோழி ;;இப்படி   நீயும்  இருப்பாயா -இதனை
                   நானும்   சும்மாவென  விடலாமா
                   தப்படி   நீ செய்தது   ஞாயமில்லே --அவனை
                   தட்டிக்  கேட்காமே  விடுவதில்லே

தலைவி;;;பேசிப்  பேசிஎன்னைக்  கொல்லாதே  --நானும்
                    உனக்குப்  பிரியமானவள்  தள்ளாதே
                  ஆசையாவா  நானும்  சம்மதி ச்சேன்  --அடியே
                  அழகாகப்   பேசிஎனைக்  கெடுத்தானே

தோழி ;;துப்புக்   கெட்டவ நீ   புரிகிறது --அவனையும்
                 துடைப்பத்தால்  அடிக்கணும்  தெரிகிறது
                 அப்பனிடம்  சொல்லியந்த   ஆளைப்பிடி --இங்கே
                அகப்பட்டால்   போடட்டும்   மூணுமுடி
                                            (சில  நாட்களுக்குப் பின்னர் )
தலைவி ;;கனவில்  கண்டதும்  நெசமாச்சு  --அவரை
                   கல்யாணம்   செய்யவும்  முறையாச்சு

தோழி    கன்னி    நீயுமென்பது  ருசுவாச்சு  --உனது
                 கவலைகள்  எங்கேயோ  போயாச்சு
இருவரும் ;;இனிப்பும்  சுவையுமா  இணைந்திருப்போம் --நாம்
                       என்றைக்கும்  தோழிகளாய்  வாழ்ந்திருப்போம்
                 
             
              

செவ்வாய், 24 ஜூலை, 2018

ஸ்ரீ மீனாட்சி 525

                                      பல்லவி
மதுரையில்  வாழும்  மகராசி யே --இந்த
மண்ணகம்  எங்கிலும்  அவளாட்சியே     (மதுரை )
                                      அனுபல்லவி
கதி பெற  வேண்டியே   நிந்தனை  நாடினேன் --நான்
கவிமழை  பொழிந்தே   உன் காலடி  நனைப்பேன்  (மதுரை )
                                      சரணங்கள்
கண்மலர்  திறந்திடக்  கவலைகள்  அழியும் --உன்
கைவண்ணம்   கலைகளாய்   பூமியில்  நிறையும்
போன் வண்ண  மேனியே   புது மலர்த் தேனே --என்
மன    வானிலே  எழில்  தரும்   ஜோதியே  (மதுரை )

பொற்றாமரைக்  குளத்தினுள் புனலாடும்  கிளியே --தமிழ்
புலவர்கள்  நாவினில்   பொலிந்திடும்  மொழியே
நற்றவம்  செய்தேனோ  நானுனைப்   பாடவே  --எந்தன்
நாவினில்  இருந்து நீ   நன்மைகள்  புரிவாய்  (மதுரை )

சுந்தரரை  மணந்த  சோம சுந்தரியும்  நீயே --அந்த '
சொக்கரின்  இடபாகம்  சொர்ணமெனும்  மீனாட்சியே
வந்தனை  செய்தோரை  வாழ்ந்திட  வைப்பாய் --தினம்
வரங்களை  யருளியெம்   வாழ்வினைக்  காப்பாய்

மழையொன்று  தினம் வந்தால்   மனதிலே   நெகிழ்ச்சியே --தெய்வ
மங்கையே  நீ வந்தால்   எங்கள்  மனங்களில்  மகிழ்ச்சியே
பிழைகளை   மறந்துமே   இங்கே  பேரருள்  புரிகுவாய் --நல்ல
பெருமாட்டி   சீமாட்டி   குலப்  பெண்களின்  வழிகாட்டி  (மதுரை )

குறை யில்லா   நெஞ்சினில்  குடி இருக்க  வருகவே --எங்கள்
கோதையே   நீயருளினால்  இந்தக்  குவலயம்  சிறக்கும்
நிறைவான  வாழ்வு பெற  நான்  நித்தமும்  நினைவேன் --உன்னை
நெஞ்சாரத்   தமிழ்  மொழியினில்   பல கோடி   புனைவேன்  (மதுரை )

பரம தயாளன் 524

                                         பல்லவி
அழகிய  தோளினன்   அன்பினில்  சீலன் --நாம்
அனுதினம்  வணங்கிட  அருள்  தரும்  பாலன்  (அழகிய )
                                        அனுபல்லவி
பழமுதிர்  சோலையில்  சிவப் பழமென  முருகன் --அவனை
பணிந்திட  வரம்  தரும்   பரம  தயாளன்   (அழகிய )
                                         சரணங்கள்
நினைத்தவர்  நெஞ்சினில்   நிலையாய்  இருப்பான் --நாம்
நேர்வழி   நடந்திட   துணையாய்  வருவான்
வினைகளை  அழித்து  நல்  வெற்றிகள்  தருவான்  --தன்னை
வேண்டிடும்  மாந்தர்க்கு   தூண்டுதல்   புரிவான் (அழகிய )

இதம் தரும்  சொல்லினால்  ஏழையைக்  காப்பான் --அவரது
இன்னல்கள்  நீக்கி  வாழ்வில்  நன்னலம்  சேர்ப்பான்
உதவிகள்  கேட்டிடில்   உடன்   ஓடியே  வருவான் --அந்த
உத்தமன்   சத்தியன்   நாம்  நித்தமும்  தொழுவோம்  (அழகிய )

மயிலினில்  வந்தே  நம்  மனங்களை  ஆள்வான் --எங்கும்
மங்கலம்   பொங்கிட  அதனை  தங்கிடச்  செய்வான்
பயமேதும்  இல்லையே   பணிந்தவர்  தமக்கே --அவனை
பாடிடப்  பாடிட  நல்லப்  பலனுண்டு  நமக்கே  (அழகிய )

சிவபாலன்  குருநாதன்   செந்தூரில்   வேலன்  --அவனை
சிந்தையில்  வைத்திட   செல்வங்கள்  நிறையும்
புவனங்கள்  ஆள  வந்த  எங்கள்   புண்ணிய  மூர்த்தி --தினம்
புகழ்ந்து  பாடிட   நமக்கு  வந்திடும்  கீர்த்தி             

திங்கள், 23 ஜூலை, 2018

vஅறுபடை 523

                                   பல்லவி
அறுபடை  வேலனே  எங்கள்  அழகிய  பாலனே  --உன்னை
அனுதினம்   தொழுதிட  நல்  ஆனந்தம்  பெருகுமே  (அறுபடை )
                                  அனுபல்லவி
சிறுவனாய்ப்  பழனியில்   அன்று  சினமுடன்  நின்றாய் --நீயும்
சீறியே  போரினில்  பகைவரை  வென்றாய்     (அறுபடை )
                                  சரணங்கள்
குலமகள்  வள்ளியைக்   கொஞ்சிடும்  தலைவா --நீ
குறைகளைக்  கேட்டதும்  அவைகள்  மறைந்திடச்   செய்குவாய்
கரத்தினில்  வேலுடன்   இங்கே  காற்றென  வருவாய் --உன்னை
கண்டதும்  கண்களில்  கண்ணீர்  மழையெனப்  பொழியுமே  (அறுபடை )

குஞ்சரியை  மணந்த  குன்றக்குடி  வேலா --என்றும்
கும்பிடும்  அடியவர்  நல்ல  நம்பிக்கை  பெறுவார்
தஞ்சம்  அளித்திடும்  தண்ணருள்  செல்வமே --தினம்
தயவினைப்  பொழிந்தே  தாயெனக்  காப்பாய்  (அறுபடை )

ஆறுமுகம்   இன்றி  வேறு  யாரும்  அறிமுகம்  இல்லையே --இந்த
அய்யனை   அன்றி  உய்ந்திட  வேறு வழி  தொல்லையே
ஏறு மயில்  ஏறி வந்தே  ஏழையைக்  காப்பாய் --எம்
இதயத்தில்  கோவில்  உனக்கு  இனிதே  அமைப்போம்  (அறுபடை )

தமிழினைக்  காக்கவே  சங்கத்  தலைமையினை  ஏற்றாய் -பெற்ற
தந்தைக்கே   குருவாய்   அன்று  தனயன் நீயும்  அமைந்தாய் 
அமிழ்தினும்  இனியவா   எங்கள்  ஆறுமுக   வேலவா --இந்த
அவனியைக்  காத்திட  இன்றே   அன்புடன்  வருகவே  (அறுபடை )

ஞாயிறு, 22 ஜூலை, 2018

கற்பு 522

 அவன் ;  கன்னி    நீயடி --என்
                   காதலி  தானடி
                   என்னமோ இழுக்குது --என்
                   இளமையும்  துடிக்குது

அவள் ;    பள்ளியில்  படிப்புகள் --வீணே
                    பாதியில்  நிற்பதா
                    தள்ளியே  போய்விடு --உனது
                    தவிப்பு  கொடியது

அவன் ;;புள்ளி  மயிலே --இன்று
                 பூத்திட்ட  மலரே
                 அள்ளி   அணைத்திடு  --என்
                  ஆசையைத் தீர்த்திடு

அவள் ;;படிக்கிற  வயசிலே --நல்ல
                பாதையை  மாத்துறே
                துடிக்கும்  இளமையை --நீ
                தோரணம் கட்டுறே

அவன் ;;சொல்லிய  வார்த்தைகள் --என்னை
                 சுண்டியே   இழுக்குது
                 உள்ளத்தில்  ஆசைகள் --எனக்கு
                 உலைபோல்  கொதிக்குது

அவள் ;;உன்னை நம்பினால் --யாரும்
                 உருப்பட முடியுமா //
                 கண்களை  விற்பதா --உன்னிடம்
                 கற்பினை  விடுவதா

அவள் ;;படித்துத்  தேறிடு --அதன்
                 பலனையும்  அடைந்திடு
                 துடிக்கும்  இளமையை --நீயும்
                தூரத்தில்  ஒதுக்கிடு

சகலநலம் 521

                                    பல்லவி
கனிந்தருள்  புரிகுவாய்  கந்தனெனும்  வேலா --உனது
காலடி  பணிந்தேன்  நானும்  பல  நாளா   (கனி )
                                   அனுபல்லவி
மனதினில்  கோவிலை  உனக்காய்  அமைத்தேன்  --அதில்
மகிழ்வுடன்  அமர்ந்திட  உன்னை  நான்  அழைத்தேன்  (கனி )
                                  சரணங்கள்
இனியென்ன  குறைகள்  எனக்கிந்த  உலகிலே --எம்
இறைவனே  நீயின்றி  யாருண்டு  உறவிலே
துணையென  வருகின்ற  தூயவன்  நீ  அன்றோ --தினம்
திருப்புகழ்  ஓதுதல்  நான்  செய்யும்  தவம்   ஒன்றே  (கனி )

கருணையைப்  பொழிபவன்  கலைகளில்  சிறந்தவன் --ஏழை
கண்களில்  நிறைந்தவன்  காட்சியில்  எளியவன்
அருமையில்  அரியவன்  அருள்தனை  அருள்பவன்  --நல்ல
ஆனந்தம்  கொடுப்பவன்   நமது  அன்பிற்கு  உரியவன்  (கனி )

மனதினில்  நினைத்தால்  மயிலினில்  வருபவன் --நம்
மனைகளில்  செல்வம்  மகிழ்வினைத்  தருபவன்
இனியவன்  முருகன்  எங்கள்  ஈசனின்  திருமகன் --என்றும்
இவன்  பெயர்  கூறிட  தேனினும்  இனிப்பவன்  (கனி )

மங்களப்  பொருளாய்  மனைகளில்  வசிப்பவன் --நம்
மங்கையர்  வணங்கும்  குங்கும  நிறத்தவன்
சங்கடம்  தீர்ப்பவன்  நம்  சரவணப்  பெருமகன் --அவன்
சன்னதி  சென்றால்  சகல  நலமும்   அளிப்பவன்  (கனி )

வெள்ளி, 20 ஜூலை, 2018

உதயம் 520

நிலவி லாடும்  மனதிலே   நினைவு  வந்தது  --அவரை
நினைத்து  நினைத்துப்  பார்க்க  மனதும்  துடிக்குது
மலருகின்ற  பொழுதிலே   புதிய  மயக்கம்  வந்தது --அந்த
மன்மதனை  தழுவிடவே  இன்னும்  மையல்  கூடுது

இரவினைக்  கண்டாலே   நல்ல  இன்பம்  தோனுது  --அவரோடு
இணைந்திட  வேண்டுமென  எனது  இளமை  துடிக்குது
உதயம்  மட்டும்  உறவை  நாடும்   உள்ளமானது  --அந்த
உத்தமனை    எண்ணி  எந்தன்  மனதும்  ஓடுது 

ஆசையோடு  வாழ்வதற்கு  அச்சாரம்  கொடுத்தார்  --என்
அழகினை  யள்ளி   யள்ளி  அவரும்  ருசித்தார் 
ஓசையின்றி  நானுமவரும்   புது உலகம்  போவோம் --இனி
உன்னதமாய்  புது வரவு   தன்னைத்   தேடுவோம் 

கண்ணினை  மூடி மெல்லக்  கனவு  காணுவேன் --அன்பு
கனவினிலே  அவரும்  நானும்  களிப்பில்  ஆடுவோம்
பெண்மையை  அவரும்  ரசிக்கப்  பெருமை  கொள்ளுவேன் --நான்
பிறந்த  பயனை  அவரிடமே  தெரிந்து  வெளியில்  சொல்லுவேன்

வாழும்  காலம்  வளமையாக   வாழ  வேண்டுமே --நான்
வள்ளலாகி  என்னை  அவர்க்கு  வாரிக்  கொடுப்பேனே
ஆளவந்த  எனது  தெய்வம்   அன்பு  நிறைந்தவர் --அவரை
அடைந்ததாலே  எந்தன்  உள்ளம்  என்றும்  ஆனந்தமாகும் 

வியாழன், 19 ஜூலை, 2018

ஆயிரம் காலம் 519

 கனவினில்  வந்தவள்  எந்தன்  காதலி  -அன்று
கண்டதால்  தானே  நானும்  முதல் பலி
நனவினில்  கிடைக்குமா  நல்  இன்பம் --பிறரை
நம்பினால்  நமக்கு க்  கிடைப்பது  துன்பம்

முத்தெனப்  பற்களைக்  காட்டினாள் --அவள்
மோகமெனும்  வலையினை  வீசினாள்
பொத்தென  விழுந்தேன்  மடியிலே --காதல்
போதை  என்பதின்  பிடியிலே

கண்களைக்  காட்டியே அழைத்தாள்  --நல்ல
கவர்ச்சி  மொழியினில்  பேசினாள்
திங்களை  பூமியை  மறந்தேன் --எனோ
தெருவினில்  நாய் போல்  திரிகிறேன்

மனதினில்  கருணையும்  இல்லையே --அவளை
மருவிட   நினைத்தது  தொல்லையே
இனியேது   வாழ்வு   உலகிலே --நான்
இருப்பதா  போவதா  தெரியலே

காதல்  என்பதும்  பொய்யடா --அதனால்
கவலை  வருவதும்  மெய்யடா
ஆதலால்  காதலை  மறக்கணும் --நாம்
ஆயிரம்  காலம்  வாழனும் 

புதன், 18 ஜூலை, 2018

குங்குமம் 518

 கலைகளின்  இருப்பிடம்  மீனாட்சி --இந்த
காசினி  முழுவதும்  மீனாட்சி
மலை மகள்  பார்வதியும்  மீனாட்சி  --அந்த
மகேசனின்  மனைவியே  மீனாட்சி

வைகையில்  குளித்தவள்  மீனாட்சி  --நல்ல
வாழ்வுக்கு  அரசியே  மீனாட்சி
பொய்கையைப்  போன்றவள்  மீனாட்சி ''தமிழ்
புலவரின்  நாவிலே  மீனாட்சி

மதுரையை  ஆள்கிறாள்  மகராசி --நம்
மனைகளில்  செல்வமே  மீனாட்சி
புதிருக்குள்  புதிராவாள்  மீனாட்சி --உலகில்
பொறுமையின்  விளக்கம்  மீனாட்சி

இதயத்தில்  வாழ்பவள்  மீனாட்சி --வாடும்
ஏழைக்கும்  அருள்பவள்  மீனாட்சி
உதயத்தின்  ஜோதியே  மீனாட்சி --இந்த
உலகிற்கு   ஒளிவிளக்கு  மீனாட்சி

மண்ணகம்  செழிப்பது  மீனாட்சி --நம்
மங்கையர்  குங்குமம்  மீனாட்சி
பொன்னென  ஒளிர்வதும்  மீனாட்சி --இந்த
பூமிக்கும்  நிலவாவாள்  மீனாட்சி

திங்களைப்  போன்றவள்  மீனாட்சி --நமக்கு
தேனருள்  பொழிபவள்  மீனாட்சி
சங்கென  ஒலிப்பவள்   மீனாட்சி --இங்கு
சத்திய  ஜோதியே  மீனாட்சி 

குமரன் 517

                                        பல்லவி
வரம் தர  வருவான்  வடிவேலனெனும்  முருகன்  --அவனை
வணங்கினால்   பெறலாம்  வாழ்வினில்  நலமே  (வரம் )
                                         அனுபல்லவி
பதம் பெறும்  நல்ல பலம்  வரும்  சிவ பார்வதி  மகனால் --அவனது
பார்வை   பட்டிட   வந்த  பாபங்கள்  பறக்குமே   (வரம் )
                                           சரணங்கள்
கையினில்  வேலுடன்   காவலாய்  வருவான் --தன்
காலடி  பணிந்தோரைக்  கைகொடுத்தும்  காப்பான்
உய்திட   நல்வழி  அந்த  உத்தமனே  தருவான் --அடியவர்
உள்ளமே  கோவிலாய்   உவகையில்  அமர்வான்  (வரம் )

தமிழினைக்   காப்பவன்  தண்டமிழ்ச்  செல்வன் --அவன்
தரணிக்கு  கிடைத்த  தத்துவப்  பொருளாம்
அமிழ்தினும்  இனியவன்  அன்பர்க்கு  உரியவன் --நாம்
அனுதினம்   நினைத்திட   அமுதமாய்  இனிப்பவன்  (வரம் )

என்றுமே  அழகன்   எங்களின்   குமரன் --அவனை
இருகரம்  தொழுதிட   இன்னல்கள்  விலகும்
நன்றியைக்  காட்டிட  நாயகனைப்  பணிவோம் --இந்த
நாளிலே  அவன்பெயர்   நம் நாவிலே  ஒலிப்போம்  (வரம் )

சொல்லிற்கு  அடங்காத  சுந்தரன்  நம்  குமரன் --சோம
சுந்தரர்  மகனென  ஜொலிப்பவன்  கந்தன்
புள்ளி மயில்  ஏறிவந்து    புவனமதைக்  காப்பான் --நாம்
புரிந்து  கொண்டால்  வரும்  புண்ணியம்   பல  கோடி  (வரம் )


கருணாகரன் 516

                                          பல்லவி
கதி பெற க்  கந்தனே   நிந்தனை  நினைத்தேன்  --நீ
கண்மலர்  திறந்திட  கவலைகள்  மறந்தேன்   (கதி )
                                           அனுபல்லவி
மதி தனில்  நிலை பெற  புள்ளி  மயிலினில்   வருவாய் --வந்த
மயக்கங்கள்   விலகிட  மனமருள்  புரிவாய்  (கதி )
                                           சரணங்கள்
நிதி தர   வருவது  நம்  நீல  மயில்  முருகனே --நம்
நெஞ்சினில்  உறைவது  நீள் சடையன்  மகனே
கதி யற்றவரைக்  காப்பதும்  காங்கேய  வேலனே --அவனை
காண்பவர்   பெறுவதும்  கருணையின்  பலனே  (கதி )

இதம் தர   வருபவன்   ஏழையர்  தலைவன் --நாம்
என்றுமே  நினைத்தால்  எல்லாமும்  தருவான்
சுகம் தர  நினைப்பவன்  சுப்ரமண்ய  மெனும்  நேசன் --இங்கு
சூழ்ந்திடும்  பகைதனை  முற்றிலும்  அழிப்பவன்  (கதி )

வள்ளியினை  மணந்த  வானவர்  துணைவன் --அந்த
வடிவழகி  குஞ்சரிக்கு  வாழ்வு  தரும்  கணவன்
சஷ்டியில்  பிறந்தவன்  சரவணனாய்  ஆனவன் --தமிழ்
சந்தத்தில்   பாடினால்  வரும்  சங்கடம்  தீர்ப்பவன்  (கதி )

முருகனைக்  கும்பிட  மூளும்  வினை  யகலும்  --அவன்
முன்வந்து  நின்றாலே  நல்ல  மோட்சமும்  கிடைக்கும்
உருகிடும்   அடியவர்  உள்ளத்திலே  உறைவான்  --நம்
உன்னதத்  தமிழினில்  உயிராய்  நிறைவான   (கதி ) 

செவ்வாய், 17 ஜூலை, 2018

செல்வி 515

வாடியென்  தோழி  வண்டமிழ்ச்  செல்வி  --நேற்று
வந்தது  செய்தி  என்னவர்  வருவார்
தேடியே  கிடைத்த  திருமுகம்  அல்லவா --இந்த
தேவியும்   அவரது  சொந்தம்  சொல்லவா

ஊடல்  நடக்கும்  அதிலே  உளறலும்  இருக்கும் --இரவில்
தேடல்  தொடரும்  எனது  தேனிதழ்  விரியும்
வாடிய  பயிரை அந்த  வான் மழை  வளர்க்கும் --என்றும்
வாரிக்  கொடுத்துமே   வற்றிடாது  பொய்கை

கொடுத்து  எடுப்பேன்  குதித்து  நடப்பேன்  --இளம்
குமரியின்  உடலில்  வந்த  கொதிப்பும்  அடங்கும்
படுத்து  உறங்கிட  நல்ல  பாயினைத்  தேடுவேன்  --எனது
பக்தனே  எனக்கு  உதவ  புதுப்    பாயென  விரிவார்

கட்டியே  அணைத்து   கனிமுத்தம்   தருவார் --என்
கண்ணாளன்  அவரை  பொன்னாக  மதிப்பேன்
விட்டுப்  பிரிந்து  விலகிட  மாட்டேன் --நான்
விடிய  விடிய   நல்ல  தூக்கமும்  கெட்டேன்

நீரினில்  ஆடுவோம்  நிலவினில்  கூடுவோம் --மன
நிம்மதி   நாடியே  ஒரு  புகலிடம்  தேடுவோம்
வேறென்ன   சுகம்  இனியும்  வேண்டுமோ  எனக்கு  --அந்த
விண்ணவன்  தருவார்  வெற்றி  யெனும்  கணக்கு  

திங்கள், 16 ஜூலை, 2018

நலம் பெற514

                                  பல்லவி
இந்நாள்  இனிதாக  இறைவனே  அருள்வாய் --தினம்
உன்னைப்  பணிவதால்  சிறப்புகள்  பெறுவேன்  (இந்நாள்)
                                  அனுபல்லவி
கண்ணிலாடிடும்  மணியே  கருணை  வடிவே --நீயும்
பொன்னார்  மேனியில்  புலித்  தோல்  அணிந்தாய்   (இந்நாள் )
                                 சரணங்கள்
கண்கள்  மலர்ந்து  கவலைகள்  தீர்ப்பீர் --இந்த
காசினி  எங்கும்   கனமழை  பொழிவீர்
மண்ணில்  வளங்கள்  மணம்  பெற  வைப்பீர் --வாழும்
மாந்தரின் மனதிலே  மலர்ச்சியைத்  தருவீர்  (இந்நாள் )

அம்மையும்  அப்பனும் நீ  ஆடிடும்  தெய்வமே _என்
அகமதில்  வைத்து  உம்மை  அனுதினம்  தொழுவேன்
ஐம்பெரும்  பூதங்கள்   அடக்கிய  புனிதரே --உமது
அருளினில்  தானே  இங்கு   அனைத்துயிர்  வாழும்   (இந்நாள் )

சக்தியினைத்  தருவது  சதா சிவம்  அல்லவா --உம்
சன்னதி  வந்திடில்   இனிஇங்கு  சங்கடம்  ஏதய்யா
முக்தியை  அருளிடும்  மோஹன  ரூபனே---வீண்
மோகத்தை  நீக்கி  நல்ல  ஞானத்தை  வழங்கிடு  (இந்நாள் )

சிவனை  நினைப்பவர்  தோற்றதும்  இல்லை -அந்த
சிவத்தை  மறந்தவர்  ஜெயிப்பதும்  இல்லையே
புவனங்கள்  முழுவதும்  புண்ணியன்  ஆட்சி --அதனை
புரிந்து  கொண்டாலே  பலர்க்கு  புலப்படும்  மீட்சி  (இந்நாள் )

புனிதம் 513

 கண்ணிலாடும்  கனவும்  ஒரு  கவிதை  யானது --என்
கண்ணாளா  உன்னை  எண்ணிக்  கவலை  யானது
பெண்ணாகப்  பிறந்தது  இங்கு  பெரிய  பாபமா --நீ
பிரிந்து  சென்றால்  எனதுயிர்  இனியும்  தாங்குமா

மனதிற்குள்  புகுந்து  மயங்க  வைத்தாய் --என்
மடிமீது  சாய்ந்து  மையல்   வளர்த்தாய்
நனவானது  வாழ்வென  நானும்  நினைத்தேன் --இனிய
நாயகனோடு  வாழ்வதற்கு  நாளும்  குறித்தேன்

விடியலைத்  தேடியே  இரவில்  விழித்திருப்பேன் --நீயும்
வேதனையைத்  தருவாயென்றா  நானும்  நினைத்திருப்பேன்
இடி விழுந்த  மரம் போல்  இதயம்  வெடித்தேன் --உன்
இனியமுகம்  காண்பதற்கே  இன்னும்  இருப்பேன்

உதய காலம்  எனது  வாழ்வில்   இனியும்  வருமா --நான்
உன்னை  எண்ணிக்  கலங்குவதே  எனது  வேலையாகுமா
கதவுகளைத்  திறந்து  வைத்துக்  காத்திருப்பேன் --எனது
காதலனே  உன்னை யெண்ணி   உடல்  வேர்த்திருப்பேன்

எங்கிருந்த  போதிலும்  நீ திரும்பி   வந்திடு --உந்தன்
இருகரத்தால்   வாரியணைத்து  இன்பம்  தந்திடு
பொங்கிவரும்  நிலவினையே  தூ தூ  விடுத்தேன் --நீங்கள்
பொழுதோடு  வந்து  விட்டால்  நானும்  புனிதம்  அடைவேன் 

சனி, 14 ஜூலை, 2018

வான் நிலா 512

 வான் நிலா  உனக்கு  ஒரு  பாராட்டு --உன்
வளைக்  கரத்தாலே  என்னையும்  தாலாட்டு
தேன் பலா  எனக்கு  என்றும்  நீதானே --தினம்
தரிசனம்   செய்திடும்  பக்தனும்  நானே

வானிலே  நீயும்   வலம்  வருவாய் --எனது
வாழ்விலே  இன்ப  சுகம்  தருவாய்
கானகக்  குயில்  உனக்குத்  தோழியடி --உன்னை
கவிஞர்கள்  பாடுவது  அவர்கள்  வேலையடி

காதலர்  சேர்ந்திருக்கக்  காரணம்  நீ --இங்கு
கடலும்   பொங்கிடச்  செய்வதும்  நீ
மாதம்  ஒருமுறை  விண்ணில்  மறைகிறாய் --மண்ணில்
மக்கள்  மனதிலே   எப்போதும்  உறைகிறாய்

இரவில்  போடுகிறாய்   களியாட்டம் --அதனால்
இளசுகள்    உன்  வரவால்  கொண்டாட்டம்
உறவுகள்   பெருக்கிடும்  உத்தமியே --உலகினில்
உன் பெயர்   நிலைப்  பதென்றும்  சாத்தியமே

சிவனாரின்  திருமுடியில்  உன் வாசம் --நீ
தேரேறி   வரும்போது  சந்தோசம்
பனி கொட்டும்  இரவிலுமுன்   பணியுண்டு --உன்னை
பாடுவதால்  பலன்  பெற்றோர்   பலருண்டு  

வெள்ளி, 13 ஜூலை, 2018

V பூமாலை 511

 நீராடும்   பொழுது  நெஞ்சில்  நினைத்தேன் --உன்னை
நினைத்து  நினைத்து  நீரிலும்  வியர்த்தேன்
சீரோடு   வாழ்வதற்கு  செல்வமும்  கொடுத்தாய் --எனோ
சிந்தியழ  வைத்துவிட்டு  சிட்டெனப்  பறந்தாய்

ஊரையும்  மறந்தேன்  உணவினைத் துறந்தேன்  --என்
உத்தமன்   நீதந்த  காதல்  உறவினை  நினைத்தேன்
தேரோடும்  தெருவில்  உன்னைத்  தேடியும்  பார்த்தேன் --ஏன்
தென்  படவில்லை  நானோ  திகைப்பின்   எல்லை

எந்நாளும்  உன்னையே  இவளும்  நினைப்பாள் --இந்த
கண்ணாளன்  தன்னையே  கணவனாய்  வ்ரித்தேன்
பொன்னாளும்  எனக்கு  நல்ல  புதையல்  தருமா --நான்
புலம்பலை  மறந்து  வாழ்ந்திட  புன்னகை  வருமா

தந்தாயே  முத்தம்  நானும்  தவிக்கிறேன்  நித்தம் --நீ
தழுவியே  அணைத்திட  வீணாய்  தயக்கம்  எதற்கோ 
வெந்திடும்  மனது   நாம்  விழா  காணும்  வயது --இன்றே
விரைந்து   நீ வந்தே  எந்தன்  வேதனையைத்  தீர்ப்பாய்

கண்ணீரில்  எழுதினேன்  ஒரு  கவிதையில்  கடிதம் --உன்னை
காணாமல்  நானும்  கவலையில்  மடிவேன்
பொன்னான  உன்னையும்  புழுதியில்  எறிந்தேன் --என்
பூமானே  எனக்கு  நீயின்று  புதுமாலை  போட    வா 

வியாழன், 12 ஜூலை, 2018

கண்ணபெருமானே 510

                                         பல்லவி
காலடியில்  வீழ்ந்தோம்  எங்கள்  கண்ணபெருமானே --உமது
கருணையைப்  பொழிந்திடுவாய்  கண்ணபெருமானே  (காலடியில் )
                                         அனுபல்லவி
சேவடியைப்  போற்றிடுவோம்  கண்ணபெருமானே --உம்மை
சித்தத்தில்  வைக்கின்றோம்  கண்ணபெருமானே    (காலடியில் )
                                        சரணங்கள்
ஆநிரைகள்  காக்க  வந்தாய்  கண்ணபெருமானே --எங்கள்
ஆயர் குலம்  சிறக்க  வைத்தாய்  கண்ணபெருமானே
வானுறையும்  தேவர்களும் வணங்குகிற  தெய்வமும்  நீங்களே --உலகில்
வந்தபின்னே  இன்பமன்றோ  வாழ்விலே  எங்குமே   (காலடியில் )

ராதையின்  மனம்  கவர்ந்தாய்  கண்ணபெருமானே --அன்று
ராஸலீலை  புரிந்த  எங்கள்  ரட்சகனும்  தாங்களே
கோதை  ஆண்டாளைத்   கொண்டவரும்   கோபாலரே --இங்கு
கோகுலா    ஷ்டமியில்  பிறந்த  கொற்றவனும்  கண்ணனே  (காலடியில் )

அடையாத  நெடுங்கதவு  அமைந்தது  உமது  வாசல் --தினம்
அன்பர்கள்  அங்கே   முழங்குவது  ஆனந்தமெனும்  கூச்சல்
விடையாக  வந்தே  காக்கும்  விண்ணுலக  வேந்தரே --நாங்கள்
வேண்டியே  நிற்கிறோம்  உந்தனருள்   நாடியே   (காலடியில் )

பாண்டவர்  நலம்  காக்க  பகைவர்களை  யழித்தாய் --தர்ம
பத்தினி திரௌபதையைப்   பாது காத்த   அண்ணலே
வேண்டிடும்  அடியார்க்கு  வெற்றிகளை  யருள்வாய் --நீங்கள்
விண்ணிலே  இருந்தாலும்   இந்த  மண்ணையும்  வாழ வைத்தாய்   (காலடியில் ) 

புதன், 11 ஜூலை, 2018

வெண்ணிலா 509

வசந்த   கால   மாலையில் --வயல்
வரப்பில்  நடந்து  போகையில்
அசத்திட  எந்தன்  எதிரிலே --ஒரு
அன்னம்  வந்தது  பேரழகிலே

பார்த்த  மனதும்  துடித்தது  --அவளை
பறித்து  தின்றிடத்  துடித்தது
யார்க்கு  அதுவும்  வாய்க்குமோ --என்றும்
எனக்கே  சொந்தமாய்க்  கிடைக்குமோ

கண்களால்  என்னையும்  அழைக்கிறாள் --அன்பு
காதலைச்  சொல்லி  இழைகிறாள்
என்ன  சொல்வது  தெரியலியே --என்
இதயம்  துடிப்பது  விளங்கலியே

வாரியே  அணைப்பேன்  மடியிலே --இனி
வாழ்வு  எந்தன்  அன்புப்  பிடியிலே
வேரில்  பழுத்த  சுவைப்  பலா --நான்
விரும்பியே  நினைக்கும்  வெண்ணிலா

காதல்  காதல்  காதலே --அவள்
கண்களில்  எத்தனை  மோதலே
பேதங்கள்  மனதினில்  இல்லையே --சிலர்
பிரித்திட  நினைப்பதும்  தொல்லையே 

செவ்வாய், 10 ஜூலை, 2018

தேவஞானம் 508

                                     பல்லவி
கலை ஞான  வடிவான  கருணை மிகு  வாசன் --அவர்
கண்  பட்டால்  வந்த  கவலைகள்  காற்றிலே  பறக்கும் (கலை )
                                    அனுபல்லவி
அலையாடும்  கூந்தலில்  அம்மங்கை  யாம்  கங்கை --அம்மா
அருளாலே  இந்த  உலகிலே  அனைவர்க்கும்  வளமை  (கலை )
                                     சரணங்கள்
இனிதான  உலகிலே  எங்கும்  இறைவனின்  ஆட்சி --அவரின்
இன்னருளாலே  வாழும்  ஏழைகள்  மீட்சி
முனிவர்கள்  தொழுதிடும்   முழு முதற் ப்  பொருளே --மண்ணில்
மாதம்  மும்மாரி  பொழிந்திட   மறைந்திடும்  துயரே (கலை )

சித்தத்தில்  இருப்பது   சைவ  சீலனின்  நாமம் --அவர்
திருப் பெயர்  சொல்லிடத்  தீமைகள்  விலகும்
பித்தர்  அவரே  நமது  பிறை  சூடன்   அவரே --அன்பில்
நித்தமும்   போற்றிட  அரிதான  நற்கதி  கிடைக்கும்   ((கலை )

மண்ணகம்  சிறப்பது   மகேசன்  தயவு --உன்
மனதிலே  என்றும்  ஏழைக்கும்  உதவு
தன்னலம்  மறந்து  தர்மங்கள்  செய்வாய் --இந்த
தரணியில்  உன்பெயர்  சரித்திரமாய்  நிலைக்கும்  (கலை )

சாந்தியைத்  தருவது  சதா  சிவம்  அல்லவா --நாம்
சத்திய வழி  செல்ல  சகலமும்  செழிக்கும்
மாந்தர்கள்  நலம் பெற  மன்னவனைத்  தொழுவோம் --அவரின்
மனதிலே  இடம்பெற   நல்ல  மனிதராய்  வாழ்வோம்( கலை )
                                                                                                                                                                                                                                                                 





                                                                                                                                  

திங்கள், 9 ஜூலை, 2018

கனவில்-507

கனவில்  வந்த  கண்மணி  --நீ
காற்றில்  பறந்து  போனதேன்
நினைவில்  என்றும்  நிலைத்தாயே --என்
நெஞ்சம்  உந்தனைத் தேடுதே

அழகு  உருவம்  உன்னது --நல்ல
ஆசை  வார்த்தை  சொன்னது
பழகவே  மனதும்  நினைத்தது --எந்த
பாவி  உன்னைக்  கெடுத்தது

துள்ளித்   திரிந்தாய்  தெருவிலே --உன்னை
தொட்டிடத்  துடித்தேன்  நேரிலே
அள்ளியே  அணைத்திட  ஆசையே --காதல்
அன்பே நீ  பிரிந்ததால்  மோசமே

நானும்  நீயும்   சேரலாம் --இனி
நல்ல  வாழ்வு   காணலாம்
வேளை  வருமென  நினைத்தேனே --அன்று
விலகிட  மனமும்  சலித்தேன்

இந்த  வாழ்க்கை  கொடியது --அதில்
இளமை  என்பதும்  அரியது
நொந்த  மனமும்  ஆறுமா  --நூலிழை
மேனியாள்   எனக்குக்  கிடைக்குமா
                                                                                                        

ஞாயிறு, 8 ஜூலை, 2018

தேவ கானம் 506

கண்ணம்மா  நில்லம்மா  சொல்லம்மா --உன்
கனவினில்  வந்தது  யாரம்மா
நீயம்மா  நானம்மா  நெஞ்சம்மா --தினம் 
நினைத்துத்  தவிக்கிறேன்  மௌனமா

என்னம்மா  உன் பதில்  என்னம்மா --இங்கு
ஏனம்மா  என்மேல்  உனக்கும்  கோபமா
பொன்னம்மா  கருணை  கொஞ்சம்  காட்டம்மா --அதில்
கரைந்து  உருகுவேன்  நானும்  நல்ல வெல்லமா

பின்னமாய்ப்  போனதே  அரிய  வாழ்வம்மா --என்னை
பின் தொடர  வாழ்வில்  உனக்கு  விருப்பமா
மீனம்மா  உந்தன்  மனம்  தேனம்மா --வீணை
மீட்டிட  வருவது  தேவ   கானம்மா

நாளுமா   பொழுதுமா   நாமும்  போவமா --உலகில்
நன்றி  என்பது  எந்நாளும்  வெல்லும்மா
வாழுமா  வளருமா   நமது   காதலம்மா --அது
வாழ்விற்கு  கிடைத்த  நல்ல  வரமம்மா

நீளுமா  நிற்குமா   அழகு  நினைவம்மா --என் 
நெஞ்சில்  வைத்துச்  சுமப்பேன்  நித்தமா
ஆளுமா  அடங்குமா   அன்பு  வெள்ளம் --அந்த
ஆண்டவனின்  அருளில்   மறையும்  கள்ளம்   

சனி, 7 ஜூலை, 2018

தெய்வநாயகி 505

 அலையாடும்  நீரில் கூட   அழகு  மீன்கள்  ஓடும் --எனக்கு
அன்பான  உன்னைக்  காண  நெஞ்சில்  ஆனந்த  வெள்ளமே
கலை எழில்  சூழும்  உன்கண்களும்  கவிதைகள்  பாடுமே --இளம்
கன்னி நீயும்   கண்ணசைக்க  காணுவேன்  சொர்க்கமே

மாடி வீடு  கோடி செல்வம்  மனதில்  என்றும்  நிலைக்குமா --இள
மங்கை  உன்னை  தாரமாக்க  மையலானேன்  போதுமா
தேடி வந்த  செல்வமே நீ   தேன்  வழியும்  பொற்குடம் --இங்கு
தேரினைப்  போல்  நீயும்  வந்தால்  தேனாறும்  பாயுமே

இலை  மறைவுக் கனிகளாலே  எதிரிகளை  வீழ்த்தினாய் --உன்
இளமை யெனும்   பாணம்  கொண்டு  ஏனையெண்டிக்  கொல்கிறாய்
வலையில்  வீழ்ந்த  மானுமானேன்  வடிவழகி   உந்தனாலே --நான்
வாழ்வதற்கு  வழியைக் காட்டு  வள்ளலெனும்  செல்வியே

இளமை  விருந்தை  தினமும்  அருந்த  நினைத்தேன் --அடியே
என்ன  உனக்கு  என்மேல்  வருத்தம்  இன்றேனும்  கூறடி
பழமைக் கதை  பேசிப்  பேசி  பரிதவிக்க விடுவதா --இந்த
பக்தனின்  மனங்குளிர  நீயும்  பக்குவமாய்  அணையடி

காலம்  காலம்  காதல்  செய்வோம் --கற்பனையில்
உலகம்  சுற்றக்   கடும்  பயணம்  போகுவோம்
நாளை  நாளை என்று  நாமும்  நம்பிக்கை  கொள்ளுவோம் --தெய்வ
நாயகி  கருணையாலே  நமக்கு  நல்ல  வாழ்வு  மலருமே 

வெள்ளி, 6 ஜூலை, 2018

இந்தியன் 504

நிலவில்  ஆடிடும்  நெஞ்சங்கள் --காதல்
நினைவில்  வாழும்  உருவங்கள்
கனவில்  வருகின்ற  எண்ணங்கள் --தினம்
கண்ணீர்  மழையில்  உருவங்கள்

தேடியே  அமைந்த  திருமணம் --அதில்
திருப்தி  இல்லாத  இரு மனம்
வாடிய  பயிராய்  ஆனது --சிலர்
வாழ்வே  பொய்யாய்ப்  போனது

இருப்பதைக்  கொடுத்து  மகிழலாம் --உன்
இதயத்தில்  அன்பும்  சுரக்கலாம்
விருப்பம்  சரிவர   நடக்குமா --அந்த
விண்ணவன்  கணக்கும்  பொய்க்குமா

சற்றேனும்  கண்களைத்  திறந்திடு --புது
சரித்திரம்  படைத்திட  எழுந்திடு
பற்றுதல்  என்பதும்  பாபமே --அந்த
பகவான்  சொன்னது  வேதமே

இன்றை  நாளையே  தொடரலாம்  --வந்த
இளமை  என்பதும்  மறையலாம்
நன்றி   என்பது  மறக்குமா --நம்
நாடு  உன்னையும்  வெறுக்குமா

ஒன்றெனக்  கூடியே  வாழ்ந்திடு  --நீயும்
உயர்வு  தாழ்வுகள்  மறந்திடு
என்றும்  இணைந்தே  பழகிடு --இனி
இந்தியனாக  உலகினில்  சிறந்திடு  

வியாழன், 5 ஜூலை, 2018

பல்லாண்டு 503

 நிலவாடும்  முகமீது  நெஞ்சமும்  கொஞ்சும் --உன்னை
நினைத்திட  நினைத்திட எந்தன்  மனம்  தஞ்சம்
வலைவீசும்  கண்களில்  வசமானேன்  நானும் --நல்ல
வாசமலர்  செவ்வாயில்   வழிந்தோடும்  தேனும்

கலை  பொங்கும்  உன்னுடலில்  கற்பகக்  கனிகள் --அதை
காண்பவர்  மயங்கிடில்   கணக்கின்றிப்  பிணிகள்
வளையாத  புருவத்தால்  என்னை   வளைத்தாயே  பெண்ணே  --என்றும்
வாழ்நாளில்  உன்னோடு  வாழ்வேனோ  கண்ணே

ஈரெட்டு  வயதாலே  எனை  வென்று  விட்டாய் --உன்
இதழுறும்  சுவை நீரில்   எந்நாளும்  மிதப்பேன்
கார் வெட்கும்  நீள் கூந்தல்  யென்  கண்களை  மயக்கும் --அழகு
காலடி  தொடர்ந்தாலே   என்வாழ்வு  செழிக்கும்

அலையாடும்  உன்பார்வை  அடுத்தவரைக்  கொல்லும்  --நீ
அழகாக  வருகையில்  நல்ல  ஆனந்தம்  துள்ளும்
நிலையாக  நாம் வாழ  நீ மனது  வைப்பாய் --உன்னை
நெஞ்சத்தில்  சிலை வைத்து   நித்தமும்  சுமப்பேன்

தமிழாக  இனிக்கின்ற   தங்க  நிற  மங்கை --உனது
தயவின்றி  என் வாழ்வு   தடுமாறும்    உண்மை
அமுதாக  வந்தென்   ஆவலைத்   தணிப்பாய்  --காதலி
அணைப்பாலே  உலகினில்   பல்லாண்டு  வாழ்வேன்  

புதன், 4 ஜூலை, 2018

சாகசம் 502

மண்ணில்  தோன்றும்  உயிர்கட்  கெல்லாம் --உலகில்
நல்ல   மகிமை  தனைத்  தந்தவன்  இறைவன்
கண்ணில்  தெரியும்  காட்சிகள்  எல்லாம் --இங்கு
அந்தக்  கடவுள்   செய்திடும்  லீலையே

உயர்ந்த  மலைகள்  பரந்த  வெளிகள்  --தூய
உத்தமன்  செயலினால்  மண்ணில்  வந்தது
உணர்ந்து  கொண்டால்  உலக  மக்கள் --இன்னும்
உயர்ந்த  நிலையினை  என்றும்  அடையலாம்

சிறந்தவர்  என்னும்   பெயரினை  வாங்க வே --நாமும்
சிரமங்கள்  பாராது   நன்கு  உழைத்திட  வேண்டுமே
செந்தமிழின்  பெருமை  சிறப்பாக  நிலைக்குமே --இந்த
சிந்தனையை  மனதில்  வைத்திட  செல்வம்  வந்து  சேருமே

எடுத்திட்ட  வேலையை  திறம்பட  முடித்திட  வேண்டும் --வீணில்
ஏழை என்ற   சொல்லே  இல்லாமல்  போய்  விட  வேண்டும்
அடுத்துக்  கெடுப்பது  நமக்கென்றும்  ஆகாது  உண்மையே --அன்புடன்
அனைவரும்  ஒன்றெனச்  சேர்ந்தால்  அதிகமாகும்  நன்மையே

நன்றியென்ற  சொல்தான்  நமது  வாழ்வில்  கண்களே --நம்
நாட்டின்  பெருமைதனை   நாளும்  காப்பதும்  பெண்களே
நின்றிதனை  நினைத்து   நெஞ்சில்  உறுதி  கொண்டிடு --இங்கே
நிகழ்த்த  நினைத்திடும்  சாகசமதனை  நீயே யென்றும்  எழுதிடு




(அமெரிக்க  மக்களுக்கு  சுதந்திர  தின  நல்  வாழ்த்துக்கள் )
                                                 (ஜூலை 4 )





செவ்வாய், 3 ஜூலை, 2018

கற்கண்டு 501

அழகான  மான்  ஒன்று  கண்டேன் --அவள்
அருகிலே  அன்பாலே  நானன்று  சென்றேன்
எழில்  கொஞ்சும்  இளமைப்  பருவம் --இன்று
ஈரெட்டு  வயதான  இன்பத்தின்  வடிவம்

கயல்    என்னும்  கண்களைக்  கொண்டாள் --பல
கவிஞர்கள்  கற்பனைக்கு  விருந்தாக  வந்தாள் 
புயல்  வீசி  சாய்ப்பது   போல  நம்மை --தினம்
புறந்   தள்ளித்   சிறை  வைத்துச்  செல்வாள்

விளையாடும்  அவள்  கைகள்  வாழை --அவளது
வாழ்விலே  இடமொன்று   பெற  வேண்டும்  நாளை
குலையோடு  கனிகள்  கொஞ்சும்  மரம் தான்  --என்
குடும்பத்தின்  ஒளிவிளக்கு  எந்நாளும்  அவள் தான்

தினம் தோறும்  நடக்கின்ற   அந்தத்  திருநாள் --அதில்
தேவியும்  எனக்காக  தேன்  அள்ளித்  தருவாள்
கனவிலும்  நினையாது  பெற்ற   கற்கண்டுப்  புதையல் --காதல்
கலையினில்  அவள்மீது  எனக்குத்  தான்  மை யல்

விதம்  விதமாய்ச்   செய்வாள்  நல்  அலங்காரம் --எந்தன்
இல்லத்தில்  உள்ளது  என்றுமவள்  அதிகாரம்
துணையாக  வரமாக  எனக்கென  உலகிலே  வந்தாள்---நான்
சுகம் பெறவே  என்வாழ்வில்  புதிய  சொர்க்கத்தைத்  தந்தாள்

திங்கள், 2 ஜூலை, 2018

நிரந்தரம் 500

                                        பல்லவி
நிரந்தரம்  என்பதால்  நிந்தனைத்  தொழுதேன் --இங்கு
நீ  தரும்  பதம்  பெற   நிம்மதி  அடைவேன்  (நிரந்தரம் )
                                       அனுபல்லவி
வரம்  தரும்  வள்ளலே  வந்தருள்  புரிவாய் --நீ
வந்ததின்  பின்னரே  அந்த  வறுமைகள்  விலகும்  (நிரந்தரம் )
                                         சரணங்கள்
கரமது  கொண்டு  வந்த  கவலையை  மாற்றுவாய் --உனது
கருணையினாலே  உலகில்    கனமழை  பொழிகுவாய்
சுரங்களில்  ஏழினை  சுகமென இங்கே  வைத்தாய் --அதில்
ஸ்ருதியை  லயமாக்கி  இசையில்  சொர்க்கத்தைக்  காட்டினாய்  (நிரந்தரம் )

காலினைத்  தூக்கி  அன்று  களி நடம்  ஆடினாய் --தெய்வ
கன்னியை  வென்று  எமக்கு  களிப்பினை  காட்டினாய்
நூலினில்   வாழ்ந்திடும்  நுண்கலைப்  பொருளே -உன்னை
நோக்கிடில்  பல்கலை  நூறாய்  வந்து  சேருமே   (நிரந்தரம் )

பனி மலை  அமர்ந்தவன்  வரும்  பகைதனை  வென்றவன் --அன்பில்
இனியவன் ஈசன்நீ  ஏழைக்கும்  இகபர ம்   அருளுவாய்
முனிவரும்  தேவரும்  உனதருள்   தினம்  தேடுவார் --உள்ள
மும்மலம்  நீக்கியே  அவர்க்கும் மோட்சமும்  தருவாய்  (நிரந்தரம் )

இனியென்ன   துணையென்ன  இங்கே  எல்லாமே  நீ தான் --எமக்கு
இன்னருள்   புரிவதில்  அன்பு  மன்னவன்   தேன்  தான்
கனிவுடன்  அருளினை த்  தந்திடு  கயிலை யம்பதியே --உன்
காலடி  தொழுததால்  உலகில் கவலைகள்  இனி  இல்லையே  (நிரந்தரம் ) 

கன்னி இளமானே 499

 கண்ணிலே  தெரிவாயோ  கன்னி இளமானே --இங்கு
 காதலிலே துடிக்கிறேனே   கவலையில்  நானே
பொன்னிலே  பூத்தவளே  புன்னகை  மலரே --நீ
பூமிக்கு  வந்திட்ட   வெண்ணிலவு  தானே

அம்பு  விழி  அழகால்  ஆடவரை  வென்றாய் --நான்
அடிபணிய  உந்தன்  மனம்  இளகிடுமோ  பெண்ணே
கம்பனுக்கு  புகழ்  கொடுத்த  கன்னித்  தமிழ்  போல --இனி
எந்தனுக்கு  அருள்  செய்ய  எண்ணிடுவாய்  கண்ணே

கரம்  பிடித்து  சுரம்  சேர்க்க  நல்ல காலம்  வந்தது --உன்
கயல்  விழிகள்  பட்டதால்  எனக்குள்  காமம்  சுரந்தது
வரம்  தரவே  வந்திடுக  எந்தன்  வஞ்சி இள  மானே --நான்
வாசலிலே  நிற்பேனே   என்  வள்ளல்  உன்னைத்   தேடி

மனம்  கொண்ட  நினைவுகள்  மணமாக  வைப்பாய் --உன்
மை  விழியால்  எனை  அணைத்து  மயங்கிட செய்வாய்
கனி தரும்  சுவையெலாம்  கன்னி  இதழிற்  கீடோ --நானும்
கவிஞனாக  மாறினேனே  உன்மேல்  கவிதைகள்  பாட

ஒன்றுக்குள்  ஒன்றாகி  இனிய  உறவினைக்  கண்டோம் --உள்ள
சுகம்  அத்தனையும்  நாம்  ஒரு நாளில்  மகிழ்வோம்
என்றும்  இந்த  வாழ்வினில்   நல்ல  இன்பங்கள்  காண்போம் --அதை
இறைவனின்  அருளாலே  நிலையாய் இங்கே   இனிதாக  வாழ்வோம் 

நிழல் 498

நிழலைத்  தேடி  யலைந்தேன் --அவளை
நினைத்து  மனதும்  குலைந்தேன்
பழகிட  நினைத்தது  பாபம் --எனோ
பண்பின்றி நடந்தாள்  மோசம்

இரவில்  நினைத்து  அழுவேன் --ஆயின
இளமை  கண்டால்  ரசிப்பேன்
உறவைச்  சொல்லி  அழைத்தேன்  --வரும்
உணர்வினில்  நெஞ்சம்  களைத்தேன்

தனிமை  நாடித்  திரித்தேன் --தந்த
இன்பத்தை  என்றும்  நினைப்பேன்
இனிமை  வாழ்வினில்  பிறக்கும் --அவளின்
இதயக்  கதவுகள்  திறக்கும்

சிரித்து   பேசிஎன்னைக்  கொல்வாள் --அந்த
செம்மேனிக்  காட்டியெனை வெல்வாள்
விரித்த  வலையினில்  விழுந்தேன் --இன்று
விரக   வேதனையில்  துடித்தேன்

எண்ணி  எண்ணியே   இளைத்தேன் --பூரித்த
இளமை  கண்டதும்  மலைத்தேன்
பெண்ணில்  அவளொரு  சிலைதான்  --இதனை
புரிந்து   கொண்டாலே  சரிதான்

காலம்  காற்றென  ஓடும் --அவளை
காணவே  என்மனம்  நாடும்
கோல  முகமும்  இனி வருமா ?--அது
கொள்ளை  இன்பமும்  தருமா ?

அழகு மயில் 497

அழகு   மயில்   நடந்தால் --காணும்
ஆடவர்  மனமும்  வாடும்
கோலக்   குயிலும்  கூவும் --கேட்கும்
குவலயம்  மயங்கிப்  போகும்

இட்ட  அடியால்   அள ப்பாள்  --நம்
இதயக்  கதவினைப்  பிளப்பாள்
தொட்டிடத்  துடிக்கும்  இளமை --அந்த
தோகையாள்  எவர்க்கும்  இனிமை

விழிகளை  வீசியே  வெல்வாள் --அதில்
விரக  தாபங்கள்  கொல்லும்
வழிமுறை  மறந்திட  வைப்பாள்  --எவர்க்கும்
வாலிப   விருந்தாய்   தெரிவாள்

கண்கள்  மிகவும்   அழகு  --அவளது
கருவிழி  கொன்றிடும்  அம்பு
பெண்ணில்  இதுவே  புதுமை --அது
பிறரை  அழிப்பதும்  உண்மை

சிரிக்க  சிரிக்கவே   முத்து --நல்ல
செந்தாமரை  மலர்க்   கொத்து
பறித்திட  நினைப்பவர்  இல்லை --நான்
பார்த்திட  வந்ததே  தொல்லை  

ஞாயிறு, 1 ஜூலை, 2018

உனக்கு 496

 நிலவில்  ஆடும்   மனது --இரவில்
நினைக்க  நினைக்க  இனிது
களவு  வாழ்வில்   தீது --இதை
கவனமாய்  பிறர்க்கு  ஓது

வாழும்  காலம்   சிறிது --மனித
வாழ்வு  என்பது  அரிது
சூழும்  வினைகள்  கொடிது --அதனை
தூக்கி   எறிந்து   பழகு

அன்பு  காட்டுதல்  நன்று  --அதனால்
அமைதி  வருவது  உண்மை
பண்புடன்  மண்ணில்  வாழு --கொடிய
பாபம்   கண்டால்   விலகு

கருணை  நெஞ்சினில்  தேவை --உன்னை
கண்களால்  மயக்கும்  பாவை
பொறுமை  என்றும்  வேண்டும் --அதுவே
புதிய   வழிகளைத்  தூண்டும்

உழைத்து   வாழ்ந்திடப்  பழகு --நாம்
உணர்ந்து  கொண்டால்  அழகு
களைப்பு  உடலில்  எதற்கு  --நல்ல
காலம்  இருக்கு  உனக்கு  

ஆயிரம் கண்ணுடையாள் 495

                                           பல்லவி
ஆயிரம்  கண்ணுடையாள்  அழகான  மாரி --அவள்
அடியவர்  குறை  தீர   அருளுவான்  வாரி   (ஆயிரம் )
                                           அனுபல்லவி
பாயுமவள்  அம்புகள்   பாவிகளின்  மீதே --தினம்
பக்தர்களைக்  காத்திட  வருவாளே  தாயின்  அன்போடு  (ஆயிரம் )
                                          சரணங்கள்
வேப்பிலை  சரம் கொண்டு   வினைகளை  நீக்குவாள் --தன
விழிகளின்  அசைவாலே  வெற்றிகளைக்  காட்டுவாள்
ஒப்பிடவே  முடியாத   ஓங்கார  சொரூபினி --அவள்
உத்தமி  சித்தினி  பத்தினி  சத்திய  வாணியே  (ஆயிரம் )

மாரி  யம்மன்  வாசலிலே  எங்கும்  மங்கள  கோஜம்  --தம்
மக்கள்  மேல்  கொள்வாள்   என்றும்  மனதிலே  நேசம்
கோரியதை  அருளும்    தேவி  எம்  கோல முத்து  மாரி --இந்த
குவலயம்   காத்து  நிற்கும்  நல்ல  குங்கும  வல்லி   (ஆயிரம் )

கற்பனைக்கு  எட்டாத  கருணையாம்  கற்பக வல்லி  --அவள்
காலடி  தொழுபவர்க்கு   கணக்கின்றித்  தருவாள்
அற்புதங்கள்  நிகழ்த்தும்  எங்கள்  ஆனந்த  வல்லி --அம்மை
பெருமைதனை  நினைத்து  ஆடிடுவோம்  சொல்லி  (ஆயிரம் )

சித்திரைச்  செவ்வாயில்  சிறப்பான  தேரோட்டம் --மங்கள
செல்வியின்  மனங்குளிர   போடிடுவார்  ஆட்டம்
இத்தரை  வாழ்ந்திட   எங்கும்  மழை  பொழிவாள் --இங்கு
ஏழைகள்  நெஞ்சினில்   நெடும்  இமயமாய்  உயர்வாள்  (ஆயிரம் )