
தோல்வி என்றிடும் சொல்லைஇனி எடுத்துவிடு
தொல்லை கோடி வந்தபோதும் சிரித்துவிடு
இல்லைஎன்ற பேரிடத்தில்இதயம் கொடு -அது
இன்பம் இன்பமென்று நீயும் இருந்துவிடு
உள்ளம் என்னும் கோயிலுக்குள் தெய்வமிருக்கும் -அங்கு
உண்மை உருவினிலே நின்று சிரிக்கும்
கள்ளமான தீமை சேர கருவறுக்கும் -உந்தன்
கற்பனைக்கு எந்தநாளும் கைகொடுக்கும்
கையணைத்து போக வந்தோர் கணகில்லுண்டு -தினம்
கர்மவழி செல்லவோன்னா நினைப்பிலுண்டு
பொய்யை விற்று பிழைப்பவர்கள் நிறையவுண்டு -இதை
புரிந்தவர்கே மண்ணில் என்றும் வெற்றியுண்டு
வெற்றி பெற்ற நெஞ்சமதில் வீரமுண்டு -உலகில்
வீழ்ந்திடாது காத்து நிற்கும் தீரமுண்டு
பற்றும் கொள்கை காத்துவிடில் பலனுமுண்டு -நல்ல
பாதை மாறி போவோர்க்கு என்னவுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக