வெள்ளி, 22 மே, 2009

நாளை


தேடி அலைவதென்ன -கண்கள்
சென்றே வருவதென்ன
வாடி மெலிவதென -அந்த
வள்ளலை காணாமல்

அன்றொரு நாள் வந்தார் -எனக்கு
ஆயிரம் தான் தந்தார்
கன்றிய என்மேனி -காதற்
கதை சொல்லுமே தோழி

நிலவிங்கு வர வேண்டாம் -வந்து
பல நினைவுகள் தர வேண்டாம்
மலருக்கு மணம் வேண்டாம் -மலர்ந்து
மயக்கத்தை பெற வேண்டாம்

வானுக்கு ஒளிஇல்லை -பேதை
வாழ்வுக்கு சுகமில்லை
தேனுக்கு சுவைஇல்லை -எந்தன்
தெய்வத்தை காணும் வரை

வீசிடும் பூங்காற்றே -என்
வேதனை கேளாயோ
பேசிடும் நிலை யானேன்றே-சற்று
புரிந்திட நீயும் சொல்லாயோ

பாடிடும் பறவைகளே -நான்
படும் துயர் அறிவீரே
நாடிய நாயகனை -அழைத்து
நாளைக்கே வருவீரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக