
தென்றல் உலாவிடும் சோலை இலே -வண்டு
தேனை தேடிடும் நேரத்திலே
நின்ற மன்னவன் பெரெதுவொ -அதனை
நீயே கேட்டு சொல்லடியோ
காட்சி தந்தவன் ஊரெதுவோ -அவன்
கர்ரிட்ட கலைகள் எவ்வளவோ
மாட்சிமை தங்கிய மன்னவனோ -இல்லை
மதனை வெல்லவே பிறந்தவனோ
தென்றல் தேரினில் வந்தானோ -காதல்
தேனை உண்ணவே நின்றானோ
கொன்றை பூவினை அணிந்தானோ -எனை
கூட்டி போகவே நினைத்தானோ
இரவை பகலாய் மாற்றியவன் -புது
இன்பத்தை அள்ளியே தருவானோ
உறவை பெரிதாய் நினைப்பானோ -தான்
உண்டதும் ஓடியே விடுவானோ
அபயம் தந்திட வருவானோ -என்னுடன்
ஆடி களித்திட இசைவானோ
சமயம் அறிந்து நடப்பானோ -தினம்
சஞ்சலத்தில் மூழ்கிட விடுவானோ
காதல் கலைமுறை தெரிவானோ -இனி
கற்று தந்திட சொல்வானோ
வேத பொருள் வழி நடப்பானோ -என்றும்
விட்டு பிரியாமல் இருப்பானோ
நினைத்தவை எல்லாம் முடிந்திடுமோ -அன்றி
நேருக்கு மாறாய் திரும்பிடுமோ
படைத்தவன் கருணை கிடைத்திடுமோ -நான்
படுந்துயர் இன்றே தீர்ந்திடுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக