
மலைக்கோட்டை தனை ஆளும் மகராஜனே -திரு
மாணிக்க விநாயகரேனும் அருள் நேசனே
மலை மீது உனக்கேனோ சுகவாசம் -உன்
பக்தர் மனக்கோவில் என்றும்நீ சிறைவாசம்
குணமெனும் குன்றேறும் கணநாதா -எனது
குறை கேட்டும் உந்தன் மனம் இளகாதா
தினம்தோறும் என்பாடல் உனை நாடும் -நினது
திருஉள்ளம் கனிந்தாலோ பொருள் கூடும்
ஓம் எனும் மந்திர பொருளாகினாய் -உலகில்
ஓங்கார நிலை தந்து அருளாகினாய்
யாமிருக்க பயமென்ன என்றோதினாய் -எங்கள்
யானை முக கணபதி என்றாகினாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக