
தென்றலும் புயலாகும் -ஒரு நாள்
தீயோ குளிராகும்
நன்றியே பகையாகும் -பொய்
நாடகம் உருவாகும்
உலகெனும் மேடையில் -இங்கு
உள்ளது பலவிதமே
கலகமோ காவியமோ -அதை
காண்பவர் எவ்விதமோ
நீதியன் கண்களிலே -என்றும்
நேர்மையின் ஒளிஇருக்கும்
சாதிபெருமை தன்னை -மண்ணில்
சாய்ப்பது சமத்துவமே
தோல்வியில் துவளாமல் -பிறர்
சொத்திற்கு அலையாமல்
வாழ்வது வாழ்க்கையடா-முடிவில்
வாய்மையே வெல்லுமடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக