செவ்வாய், 26 மே, 2009

காவியம்


பொங்கல் இங்கு பொங்கட்டுமே -பொங்கி
புத்தொளி எங்கிலும் தங்கட்டுமே
திங்கள் மாரி பொழியட்டுமே -பொழிந்து
தேசம் சிறப்புற வாழட்டுமே

வள்ளல் குணமிங்கு வளரட்டுமே -வளர
வறுமை உலகினில் குறையட்டுமே
கள்ள எண்ணம் மறையட்டுமே -மறைய
கருணை உள்ளம் பிறக்கட்டுமே

அமைதி இனிமேல் நிலவட்டுமே -நிலவி
ஆனந்தம் வீட்டினில் நிலைக்கட்டுமே
கலைகள் பெருகி சிறக்கட்டுமே-நாடே
காவியம் ஓவியம் ஆகட்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக