
சேல் இரண்டு கண்ணாக
செம்பவளம் வாய் இதழாக
பால் நிறம் உளமாக -ஒரு
பாவை நின்றாள் மலராக
காலடி எடுக்க கவி பிறக்கும்
கைவளை ஒலிக்க மனம் பறக்கும்
நாலடி நடந்தால் நாடகமாம் -அந்த
நங்கை உடலோ பொன் ஆடகமாம்
சிரித்தால் உதிர்வது முத்துக்களாம் -அது
சீதனமாய் பெற்றிட்ட சொத்துக்கலாம்
எரிக்கும் நிலவு அவள் முகமாம் -நீதி
இருக்கும் இடமே அவள் அகமாம்
கருணை கண்ணின் ஒளியாகும் -தினம்
கண்டிட இன்பம் வெளியாகும்
பொறுமை விடுகின்ற மூச்சாகும் -அன்பு
பொங்கி கிடப்பதவள் பேச்சாகும்
சரசக் கலைஇனில் போராடி -பின்
சற்றே அயர்வாள் நீராடி
விரசம் தீர்க்க எனை தேடி -இரவில்
விந்தை செய்வாள் பலகோடி
கொடுப்பதை கைகள் அறியாது -உள்ள
குணமோ பிறருக்கு புரியாது
எடுக்க எடுக்க குறையாது -காதலி
இருக்கும் இடமின்னும் தெரியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக