திங்கள், 18 மே, 2009

வாழ்க்கை


வாழ்க்கை என்பது சிறைவாசம் -இதில்
வருவதும் போவதும் வனவாசம்
யாருக்கும் நிலையில்லை சுகவாசம் -நன்றாய்
அறிந்தும் எதுக்கு வெளிவேஷம்

சொந்தம் தருவது தொல்லையடா -அது
தொடர்ந்தால் துயரமே எல்லையடா
வந்தவன் கதையில் வரவுமில்லை -அவன்
வாழ்ந்ததை பார்க்கையில் மீதமில்லை

சேர்த்திட மனிதன் எண்ணுகிறான் -உடன்
தீமைகள் செய்வதில் முந்துகிறான்
காத்திட்ட பொருளினை அடையாமல் -தானே
கடைசியில் எங்கோ ஓடுகிறான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக