ஞாயிறு, 17 மே, 2009

தேன்


இதயத்தில் ஓரிடம்இருக்கட்டுமே -அதில்
இனிய நினைவுகள் பிறக்கட்டுமே
உதயத்தில் உலகம் சிறக்கட்டுமே-எங்கும்
உவகை பொங்கி வழியட்டுமே

வண்டினம் பூக்களை நாடட்டுமே -சுற்றி
வசந்த கீதங்கள் பாடட்டுமே
பெண்டினம் பெருமையில் திளைகட்டுமே -மன
பேதங்கள் இனிமேல் மறையட்டுமே

வளமை பெருகி வாழட்டுமே -மக்கள்
வள்ளுவன் வழிஇனில் நடக்கட்டுமே
புலமை பூத்து குலுங்கட்டுமே -மண்ணில்
புதுமை எண்ணங்கள் தோன்றட்டுமே

நானெனும் மமதை அழியட்டுமே -இங்கு
நமதென்ற கொள்கை மலரட்டுமே
தேனென தமிழ் மொழி இன்னிக்கட்டுமே-அது
திசைஎல்லாம் என்றுமே ஒலிக்கட்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக